விநாயகர் சதுர்த்திக்கு கொஞ்சம் கூட விரிசல் இல்லாத பஞ்சு போன்ற ஒரு ஸ்பெஷலான பூரண கொழுக்கட்டையை ரொம்ப சிம்பிளா சீக்கிரமா செய்யணும்மா? அப்ப இப்படித் தான் செய்யணும்.

purana kozhukatai
- Advertisement -

விநாயகர் சதுர்த்தி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது இந்த கொழுக்கட்டை தான் கொழுக்கட்டை இல்லாத விநாயகர் சதுர்த்தியே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு முக்கியமான இந்த கொழுக்கட்டையை பலரும் பல வகைகளில் செய்வார்கள்.இதில் பிடி கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை என எத்தனையோ வகைகள் உண்டு. இந்த சமையல் குறிப்பு பதிவில் ஒரு பூரண கொழுக்கட்டையை ரொம்ப சுலபமாக அதே நேரத்தில் ருசியாக எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை 

இந்த கொழுக்கட்டை செய்ய முதலில் அரை கப் பொட்டுக்கடலை இரண்டு ஏலக்காவை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் முக்கால் கப் அளவு வெல்லத்தை பொடித்து சேர்த்து வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வெல்லம் கட்டிகள் இல்லாமல் கரையும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு பேன் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடான உடன் அரைக் கப் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் ஏற்கனவே கொதிக்க வைத்து இருக்கும் வெல்லத் தண்ணீரை வடிகட்டி இதில் சேர்த்த பிறகு அரைத்து வைத்த பொட்டுக்கடலை மாவையும் இதில் சேர்த்து சிறிது நேரம் கைவிடாமல் கலந்த பிறகு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடுங்கள். கொழுக்கட்டைக்கு தேவையான பூரணம் தயாராகிவிட்டது இதை அப்படியே சிறிது நேரம் ஆற விட வேண்டும்.

இப்போது கொழுக்கட்டைக்கான மாவை தயார் செய்வோம். அதற்கு ஒரு பவுலில் ஒரு கப் கொழுக்கட்டை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் பவுடர், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்த பிறகு தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டி வைத்து மாவை கலந்து விடுங்கள். தண்ணீர் சூடாக இருக்கும் எனவே கை வைக்காமல் கரண்டி வைத்து கலந்து விடுங்கள்.

- Advertisement -

இந்த மாவு ரொம்ப தண்ணீராக கரைத்து விடாமல் நல்ல கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் கை பொறுக்கும் சூடில் இருக்கும் போதே நன்றாக பிசைந்து வைத்து விடுங்கள். அடுத்து ஒரு சிறிய வாழை இலையில் நெய் தடவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டை மாவை சின்ன உருண்டையாக எடுத்து லேசாக தட்டிய பிறகு பூரணத்தை கொஞ்சமாக எடுத்து அதில் வைத்து இரண்டு புறமும் மாவை ஒன்றாக சேர்த்து விட்ட அருமையான கொழுக்கட்டை தயார்.

இதையும் படிக்கலாமே: ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பச்சை பயரை வைத்து இப்படி ஒரு முறை வடை செய்து பாருங்கள். ஆரோக்கியமான, சுவையான வடையை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்.

இப்போது இந்த கொழுக்கட்டையை வேக வைக்க இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு இட்லி தட்டை வைத்து நீங்கள் தயார் செய்து வைத்து இந்த கொழுக்கட்டைகளை ஒன்றின் மேல் ஒன்று படாதவாறு தனித்தனியாக வைத்து மூன்று நிமிடம் வரை மூடி போட்டு வேக வைத்து எடுத்து விடுங்கள். நல்ல பஞ்சு போல மிருதுவான அதே நேரத்தில் இனிப்பான சுவை மிகுந்த பூரண கொழுக்கட்டை தயார்.

- Advertisement -