பெருமாளுக்கு உகந்த மாதங்களில் ஒன்றாக திகழ்வதுதான் புரட்டாசி மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் கடைசி நாள் வெள்ளிக்கிழமை அன்று ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருகிறது. இன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு பெருமாளின் பரிபூரண அருளைப் பெறச் செய்வதோடு புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்ததற்குரிய பலனை ஏற்படுத்தும். குடும்பத்தில் இருக்கக்கூடிய வறுமையை முற்றிலும் நீக்கும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி கடைசி நாள் வழிபாடு
பெருமாளை வழிபாடு செய்வதற்கு பல அற்புதமான நாட்கள் இருந்தாலும் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஏகாதசி திதி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. அதிலும் பெருமாளுக்குரிய மாதமான புரட்டாசி மாதத்தில் வரும் பொழுது அதற்கு கூடுதல் சிறப்பு உண்டாகும் என்று நம் கூறலாம். மேலும் அன்றைய தினம் புரட்டாசி மாதத்தின் கடைசி நாள் என்பதால் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்ய இயலாதவர்கள் கூட புரட்டாசி மாதத்தின் கடைசி நாளான அக்டோபர் மாதம் 17ஆம் தேதி மறவாமல் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
அன்றைய தினம் காலையிலேயே எழுந்து மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய சுக்கிர பகவானின் அம்சம் பொருந்திய தயிரை உடலில் தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய கடைக்கு சென்று கல்லுப்பை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் ஒரு தட்டில் பரப்பி அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்தை பெருமாளின் படத்திற்கு முன்பாகவும் வைக்கலாம் மகாலட்சுமியின் படத்திற்கு முன்பாகவும் வைக்கலாம்.
அடுத்ததாக பெருமாளுக்கு உகந்த துளசி தீர்த்தத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தையும் “ஓம் ஸ்ரீம் லலிதம் லம்போதரம்” என்னும் மந்திரத்தையும் 27 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு பாராயணம் செய்து முடித்த பிறகு வீட்டு மூளைகளிலும் வீடு முழுவதும் பச்சை கற்பூரத்தை நுணுக்கி தண்ணீரில் கரைத்து தெளித்து விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்கும். மேலும் இந்த வழிபாட்டை செய்யக்கூடிய நேரத்தில் பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் நெய்வேத்தியமாக நெல்லிக்காய் அல்லது சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை வைக்க வேண்டும். அன்றைய தினத்தில் முழு மனதோடு பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் யார் ஒருவர் இந்த முறையில் வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் நினைத்தது நிறைவேறும். வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: மனக்குழப்பத்தை நீக்கும் சித்தர் வழிபாடு
ஏகாதசி விரதமே சிறப்பு மிகுந்த விரதமாக கருதப்பட்டாலும், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய கடைசி நாளன்று வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த ஏகாதசியை முழுமையாக பயன்படுத்துபவர்களுக்கு வறுமை நிலை முற்றிலும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.