புரட்டாசி மாத ராசி பலன் 2018

Puratasi matha rasi palan
- Advertisement -

மேஷம்:

6-ல் சூரியன்; 6,7-ல் புதன்; 7-ல் சுக்கிரன்; 7, 8 – ல் குரு; 9-ல் சனி; 10-ல் செவ்வாய், கேது; 4-ல் ராகு

- Advertisement -

சூரியன், செவ்வாய் மாதம் முழுவதும், மாத முற்பகுதியில் புதனும் குருவும் நன்மை செய்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். எதிர்பாராத ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்டிருந்த மறைமுகத் தொல்லைகள் விலகும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பியபடியே இடமாற்றம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அலுவலகத்தில் சற்று நெருக்கடியான நிலை ஏற்பட்டு நீங்கும்.

வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி சாதகமாக முடியும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் நீங்கும். வியாபாரம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். இதுவரை ஏற்பட்டு வந்த அதிகப்படியான செலவுகள் குறையும். மாதப் பிற்பகுதியில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைப்பதில் சில தடைகள் ஏற்படக்கூடும். ஏற்கெனவே இருக்கும் வாய்ப்புகளையும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களைக் கூர்ந்து கவனிப்பீர்கள். மாதாந்திரத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். மாதப் பிற்பகுதியில் பாடங்களில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டு படிக்கவேண்டியது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவருடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.

- Advertisement -

அதிர்ஷ்ட நாள்கள்: செப் 21,22, 23, 27,28, அக். 2, 3, 9, 11
சந்திராஷ்டம நாள்கள்: அக். 12, 13, 14

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: வெள்ளிக்கிழமைகளில் ஶ்ரீலலிதாம்பிகை நவரத்ன மாலை பாராயணம் செய்யவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

புரட்டாசி விரதம் இருப்பது எப்படி என்பதை அறிய இங்கு கிளிக் செய்யவும்

ரிஷபம்:

Rishabam Rasi

5 – ல் சூரியன்; 5,6-ல் புதன்; 6-ல் சுக்கிரன்; 6,7 – ல் குரு; 8-ல் சனி; 9-ல் செவ்வாய், கேது; 3-ல் ராகு

மாதம் முழுவதும் ராகு நன்மை செய்வார். மாதப் பிற்பகுதியில் புதன், குரு ஆகியோர் நன்மை செய்வார்கள். மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை. இந்த மாதம் முழுவதும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துகள் தொடர்பான பிரச்னைகளில் அவசர முடிவு எடுக்கவேண்டாம். மாத முற்பகுதியில் கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறு பாடுகள் ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. மாதப் பிற்பகுதியில் மேற்கண்ட வகையில் இருந்த பிரச்னைகள் நீங்கி, அனைத்து வகைகளிலும் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கனிந்து வரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். ராகுவினால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
வேலைக்குச் செல்பவர்களுக்கு மாத முற்பகுதியில் அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் இழுபறி நிலையே நீடிக்கும். பணிச்சுமை அதிகரிப்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும். மாதப் பிற்பகுதியில் அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விரும்பிய இடமாற்றமும் சிலருக்குக் கிடைக்கும்.

வியாபாரத்தில் தற்போது புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்க்கவும். சரக்குக் கொள்முதலுக்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். அவர்களால் ஆதாயம் கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சிரத்தையுடன் முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கியமான விஷயங்களில் மூத்த கலைஞர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது.தயாரிப்பு நிர்வாகிகளை அணுகும்போது பொறுமை அவசியம்.

மாணவர்களுக்கு மாத முற்பகுதியில் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். அதன் காரணமாக ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் இருந்த மந்தநிலை மாறி, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பீர்கள். ஆசிரியரின் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லி பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் மாத முற்பகுதியில் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 22, 23, 24, 25, 30; அக்: 1, 5, 10, 11, 12, 14
சந்திராஷ்டம நாள்கள்: செப்: 17, 18, 19; அக்: 15, 16

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: செவ்வாய்தோறும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் ஆகியவற்றில் ஒன்றை பாராயணம் செய்யவும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை தரிசித்து வழிபடுவதன் மூலமும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலமும் பிரச்னைகளின் கடுமை குறையும்.

மிதுனம்:

midhunam

4 – ல் சூரியன்; 4,5-ல் புதன்; 5-ல் சுக்கிரன்; 5,6 – ல் குரு; 7-ல் சனி; 8-ல் செவ்வாய், கேது; 2-ல் ராகு

மாத முற்பகுதியில் புதனும் குருவும், மாதம் முழுவதும் சுக்கிரனும் அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படுவதற்கில்லை. குரு வலிமையாக இருப்பதால், தெய்வ அனுகிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பெரியோர்களின் அனுசரணையான போக்கு மகிழ்ச்சி தரும். மாத முற்பகுதியில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல்நலனில் கவனம் தேவை.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதிகாரிகள் அனுசரணை யாக நடந்துகொள்வார்கள். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் மாத முற்பகுதியில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் வியாபார வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைக்கவேண்டி வரும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணவரவும் அதிகரிக்கும். படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாதப் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகமும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18, 19, 25, 27, 28, அக்: 2, 3, 5, 12, 14, 15
சந்திராஷ்டம நாள்கள்: செப்: 20, 21

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அந்தாதி பாராயணம் செய்வது நல்லது.

பரிகாரம்: ஞாயிறு அன்று ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவதும், பைரவர் வழிபாடும் நன்மைகளை அதிகரிக்கும்.

கடகம்:

Kadagam Rasi

3 – ல் சூரியன்; 3,4 – ல் புதன்; 4-ல் சுக்கிரன்; 4,5 – ல் குரு; 6-ல் சனி; 7-ல் செவ்வாய், கேது; 1-ல் ராகு

சூரியன், சுக்கிரன், சனி மாதம் முழுவதும், புதன், குரு மாதப் பிற்பகுதியிலும் நன்மை செய்வார் கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் சென்ற உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து வலிய வந்து பேசுவார்கள். புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு மறையும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக் கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், உடனே சரியாகிவிடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும். சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்கவேண்டாம். மாதப் பிற்பகுதியில் அதிகாரிகள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்படும் மறைமுகத் தொல்லைகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் அமையும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். மூத்த கலைஞர்களின் வழிகாட்டுதல் பயன் தருவதாக இருக்கும்.

மாணவர்களுக்கு மாத முற்பகுதியில் பாடங்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். அடிக்கடி குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. மாதப் பிற்பகுதி யில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி தரும் மாதம். ஆனால், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தினர் அனுசரணையாக இருப் பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18, 19, 21, 27, 28, 29, அக்: 1, 4, 5, 9, 15, 16
சந்திராஷ்டம நாள்கள்: செப்: 22, 23, 24

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: திங்கள்கிழமைதோறும் திருஞானசம்பந்தரின், ‘வேயுறு தோளிபங்கன்’ என்று தொடங்கும் கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்யவும்.

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதும், அஷ்டமியன்று பைரவருக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.

சிம்மம்:

simmam

2 – ல் சூரியன்; 2,3 – ல் புதன்; 3-ல் சுக்கிரன்; 3,4 – ல் குரு; 5-ல் சனி; 6-ல் செவ்வாய், கேது; 12-ல் ராகு

புதன் மாத முற்பகுதியிலும், செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தர இருக்கிறார்கள். புதிய முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பிறகே சாதகமாக முடியும். மன உறுதி அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களுடன் பேசும்போது கூடுமானவரை பதற்றப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய வீடு அல்லது மனை வாங்கக்கூடிய வாய்ப்பு கூடிவரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உங்கள் பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். உங்கள் ஆலோசனை களை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வாய்ப்புகளுடன், புதிய வாய்ப்பு களும் கிடைக்கும். சக கலைஞர்களின் ஆதரவு முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். ரசிகர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும், பாடங்களைப் படிப்பதில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். சக மாணவர்களுடன் பழகுவதில் கவனமாக இருக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 21, 22, 23, 24, 29, அக்: 1, 2, 3, 6, 7, 10, 11
சந்திராஷ்டம நாள்கள்: செப்: 25, 26

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அம்மன் பதிகம் பாராயணம் செய்வது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, நெய்தீபம் ஏற்றுவது நல்லது.

பெண் குழந்தை பெயர்கள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

கன்னி:

Kanni Rasi

1 – ல் சூரியன்; 1,2 – ல் புதன்; 2-ல் சுக்கிரன்; 2,3 – ல் குரு; 4-ல் சனி; 5-ல் செவ்வாய், கேது; 11-ல் ராகு.

மாத முற்பகுதியில் குருவும், மாதப் பிற்பகுதியில் புதனும், மாதம் முழுவதும் சுக்கிரன், ராகு ஆகியோரும் நற்பலன்களைத் தருவார்கள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். இடையூறுகள் ஏற்பட்டாலும், சாமர்த்தியமாக முறியடித்துவிடுவீர்கள். மாத முற்பகுதியில் உறவினர்கள் மற்றும் மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கணவன் -மனைவிக்கிடையே சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். எனவே, ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். அவர்களுடன் கருத்துவேறுபாடுகளும் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.

அலுவலகத்தில் நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும் விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிடைக்க வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளை முறியடிப்பீர்கள்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். பெயரும் புகழும் கிடைக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாராட்டு பெறுவீர்கள்.

மாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. நீங்கள் குழம்பி நிற்கும்போது ஆசிரியர்கள் ஆலோசனை சொல்லி பக்கபலமாக இருப்பார்கள்.

குடும்ப நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளை சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 22, 23, 24, 25, 30, அக்: 2, 3, 4, 5, 9, 12, 14
சந்திராஷ்டம நாள்கள்: செப்: 27, 28

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் ‘மந்திரமாவது நீறு’ என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகத்தை பாராயணம் செய்வது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி தளத்தால் அர்ச்சனை செய்வதும், பிரதோஷ நாளில் நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நன்மை தரும்.

துலாம்:

Thulam Rasi

12 – ல் சூரியன்; 12,1 – ல் புதன்; 1-ல் சுக்கிரன்; 1,2 – ல் குரு; 3-ல் சனி; 4-ல் செவ்வாய், கேது; 10-ல் ராகு

மாதப் பிற்பகுதியில் குருவும், மாதம் முழுவதும் சுக்கிரனும் சனியும் நன்மை செய்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இதுவரை மறைந்திருந்த உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள். உங்கள் திறமைகள் நிர்வாகத்தினரால் புரிந்துகொள்ளப்பட்டு, உரிய சலுகைகளும், பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைச் சொல்லி வழிநடத்துவீர்கள்.

வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். ஆனால், புதிய கிளைகளைத் தொடங்குவது மற்றும் புதுத் தொழிலில் முதலீடு செய்வது ஆகியவற்றில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடுவது நல்லது. சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரபல நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும். பெயரும் புகழும் அதிகரிக்கும்.

மாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். சிரமப்பட்டுப் படித்தால்தான் தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற முடியும். சந்தேகங்களை அப்போதே கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18, 19, 25,27, அக்: 4, 5, 6, 10, 11, 15
சந்திராஷ்டம நாள்கள்: செப்: 29, 30, அக்: 1

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகக் கவசம் என்னும் எளிய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதுடன் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு மோதகம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பது நல்லது.

விருச்சிகம்:

Virichigam Rasi

11 – ல் சூரியன்; 11,12 – ல் புதன்; 12-ல் சுக்கிரன்; 12,1 – ல் குரு; 2-ல் சனி; 3-ல் செவ்வாய், கேது; 9 -ல் ராகு

மாதம் முழுவதும் சூரியன், சுக்கிரன், செவ்வாய், கேது, மாத முற்பகுதியில் புதனும் நன்மை செய்வார்கள்.
புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. மாதப் பிற்பகுதியில் தாய்மாமன் வழியில் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் அனுசரணையாகச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிக்கவும். எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். மாதப் பிற்பகுதியில் பாடங்களில் ஆர்வம் குறையக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 20, 21, 27, 29, 30 அக்: 1, 6, 9, 12, 14

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: ‘குலம் தரும்’ என்று தொடங்கும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களைப் பாராயணம் செய்வது நல்லது.

சந்திராஷ்டம நாள்கள்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும், சனிக்கிழமையன்று பெருமாளை வழிபடுவதும் நன்மை தரும்.

தனுசு:

Dhanusu Rasi

10 – ல் சூரியன்; 10,11 – ல் புதன்; 11-ல் சுக்கிரன்; 11,12 – ல் குரு; 1-ல் சனி; 2-ல் செவ்வாய், கேது; 8 -ல் ராகு

மாதம் முழுவதும் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் நற்பலன் தருவார்கள்.
அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வீடு, மனை வாங்கும் முயற்சி அனுகூலமாக முடியும். ஆனால், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக் கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கை யில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.
மாணவ – மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்:18, 19, 22, 23, 24, 29, 30, அக்: 1, 2, 3, 9, 10, 11, 15
சந்திராஷ்டம நாள்கள்: அக்: 4, 5

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் அல்லது கந்தரனுபூதி பாராயணம் செய்யவும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்வதும், சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை தரும்.

மகரம்:

Magaram rasi

9 – ல் சூரியன்; 9,10 – ல் புதன்; 10-ல் சுக்கிரன்; 10,11 – ல் குரு; 12-ல் சனி; 1-ல் செவ்வாய், கேது; 7 -ல் ராகு

மாதப் பிற்பகுதியில் புதன், குரு, ஆகியோரும், மாதம் முழுவதும் சுக்கிரனும் நன்மை செய்வார் கள்.
பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும்.

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாதத்தின் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற சற்று கஷ்டப்பட்டு படித்தால்தான் முடியும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 20, 21, 25, அக்: 2, 3, 4, 10, 11, 12, 14
சந்திராஷ்டம நாள்கள்: அக்: 6, 7

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வது நல்லது. முடியாதவர்கள் ‘ஶ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம’ என்று மனதுக்குள் 15 நிமிடங்கள் ஜபிப்பது நன்மை தரும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடும், துர்கை அம்மன் வழிபாடும் நன்மை தரும்.

கும்பம்:

Kumbam Rasi

8 – ல் சூரியன்; 8,9 – ல் புதன்; 9-ல் சுக்கிரன்; 9,10 – ல் குரு; 11-ல் சனி; 12-ல் செவ்வாய், கேது; 6 -ல் ராகு

மாத முற்பகுதியில் புதன், குரு, மாதம் முழுவதும் சுக்கிரன், சனி, ராகு ஆகியோர் அற்புதமான நன்மைகளைச் செய்யவிருக்கிறார்கள்.

வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வீடு, மனை வாங்கும் முயற்சியில் தற்போது ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். முக்கிய முடிவுகளைத் துணிச்சலுடன் எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைத்தாலும், சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18, 19, 22, 23, 24, அக்: 4, 5, 6, 7, 22, 24, 27, அக்: 4, 6, 7, 13, 14, 15
சந்திராஷ்டம நாள்கள்: அக்: 8, 9

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் விநாயகர் அகவல் பாராயணம் செய்வது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபடுவதும், விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.

மீனம்:

Meenam Rasi

7 – ல் சூரியன்; 7,8 – ல் புதன்; 8-ல் சுக்கிரன்; 8,9 – ல் குரு; 10-ல் சனி; 11-ல் செவ்வாய், கேது; 5 -ல் ராகு

மாதப் பிற்பகுதியில் புதன், குரு, மாதம் முழுவதும் சுக்கிரன், செவ்வாய், கேது ஆகியோர் நன்மை செய்வார்கள்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.
அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மாதப் பிற்பகுதியில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். மற்ற வியாபாரிகளின் போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ தவிர்த்துவிடவும்..

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு விருதும் பாராட்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18,19, 20, 21, 25, 29, அக்: 1, 6, 7, 9, 15
சந்திராஷ்டம நாள்கள்: அக்: 10, 11

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: அப்பர் சுவாமிகளின், ‘சொற்றுணை வேதியன்’ என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாராயணம் செய்வது நல்லது.

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதும், பிரதோஷ நாளில் நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நல்லது.

மாத ராசி பலன், வார ராசி பலன் குழந்தைகளுக்கான சிறுகதைகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -