இன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை. இந்த 3 பொருட்களையும் ஒன்றாக வைத்து, பெருமாளிடம் எவ்வளவு பணம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும்.

perumal
- Advertisement -

இன்று புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை. பெருமாளை இந்த புரட்டாசி மாதத்தில் வழிபாடு செய்யாதவர்கள் கூட கடைசி வாரமான இன்றைய தினம் வீட்டில் பெருமாளை நினைத்து வழிபாடு செய்தால் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபட்ட பலனை பெறலாம். காரணம் இன்றைய நாளை தவறவிட்டால், இந்த சனிக்கிழமை வருவதற்கு இன்னும் ஒரு வருடங்கள் ஆகும். பெருமாளுக்கு உரிய சிறப்பு மிக்க இந்த நன்னாளை யாரும் தவற விடக்கூடாது. இன்றைய தினம் மாலை 8 மணிக்கு முன்பாக உங்களால் எப்போது முடியுமோ அப்போது பூஜைஅறையில் பெருமாளை நினைத்து இந்த பூஜையை செய்துவிடுங்கள். முன் ஜென்மத்தில் நாம் செய்த பிறவிக் கடன் தீர, இந்த ஜென்மத்தில் நமக்கு இருக்கக்கூடிய கடன் சுமை குறைய செல்வ வளத்தை பெற இன்று நாம் செய்யக்கூடிய இந்த பூஜையின் மூலம் நமக்கு நிறையவே பலன் கிடைக்கும்.

perumal2

பூஜை அறையில் பெருமாளின் படத்தை சுத்தமாக துடைத்துவிட்டு மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் துளசி இலைகளால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு மூன்று சிறிய கிண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அது எச்சில் படாத கிண்ணம் ஆக இருக்கட்டும். அதில் மிளகு, ஏலக்காய், கிராம்பு இந்த மூன்று பொருட்களையும் தனித்தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அளவு என்பது உங்களுடைய விருப்பம் தான். ஒவ்வொரு கைப்பிடி வைத்தாலும் பரவாயில்லை. 11 மிளகு, 11 ஏலக்காய், 11 கிராம்பு வைத்தாலும் தவறு கிடையாது.

- Advertisement -

இந்த மூன்று கிண்ணங்களையும் பெருமாள் மகாலட்சுமி தாயாரின் திருவுருவப் படத்திற்கு முன்பாக வைத்துவிடுங்கள். அடுத்தபடியாக பெருமாளுக்கு உரியதாக சொல்லப்படும் மாவிளக்கு. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய வரத்தை கேட்டாலும் அவர் உடனே கொடுத்துவிடுவார். இதற்கு முன்பு நீங்கள் மாவிளக்கு போட்டு பெருமாளை வழிபாடு செய்து இருந்தாலும் சரி, அல்லது இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை மாவிளக்கு போட்டு வழிபாடு செய்ய தவறி இருந்தாலும் சரி, இன்று இரண்டு மாவிளக்குகளை தயார் செய்து அதில் பசு நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி பெருமாளின் முன்பாக வைத்து விடுங்கள்.

thulasi-theertham

பெருமாளுக்கு மண் அகல் விளக்கில் தீபம் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு, சுத்தமான தண்ணீரில் பச்சை கற்பூரம், துளசி இலைகளை போட்டு தீர்த்தம் தயார் செய்து வைத்து விடுங்கள். இப்போது பெருமால் பூஜை செய்வதற்கு தயாராக உள்ளார். உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் மனக் கஷ்டத்தை எல்லாம் பெருமாளிடம் சொல்லி அந்த கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மனமுருக நம்பிக்கையோடு நீங்கள் வேண்டும் வேண்டுதல் நிச்சயமாக அந்த பெருமாளின் செவிகளில் விழும். இறுதியாக தீப தூப ஆராதனை காட்டி உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். பெருமாளின் பாதங்களில் மூன்று பொருட்களை வைத்தீர்கள் அல்லவா. மிளகு, கிராம்பு, ஏலக்காய், அதிலிருந்து மூன்று மிளகு, மூன்று கிராம்பு, மூன்று ஏலக்காய் எடுத்து இந்த மஞ்சள் துணியில் வைத்து சிறிய முடிச்சு போல கட்டி உங்களுடைய பீரோவில் வைத்து விடுங்கள். முடிந்தால் இந்த முடிச்சில் பெருமாளுக்கு சூட்டிய துளசி இலையில் இருந்து இரண்டை எடுத்து வைத்து முடிச்சு போட்டு கொள்ளலாம்.

milagu

உங்கள் வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவே இருக்கக்கூடாது. மீண்டும் மீண்டும் பணம் வந்து சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும். கடன் வாங்கும் சூழ்நிலை இருக்கக் கூடாது. செய்யும் வேலையும் தொழிலும் ஓஹோவென வருமானத்தை தரவேண்டும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பரிகாரத்தை செய்து இந்த முடிச்சை பண பெட்டியில் வைத்தால் நிச்சயமாக, அடுத்த வருடம் புரட்டாசி மாதம் பிறப்பதற்குள் நீங்களே எதிர்பாராத பல நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

cash

இதோடு பெருமாளுக்கு முன்பு வைத்த அந்த மூன்று பொருட்களிலும் மீதம் இருக்கும் அல்லவா, அதாவது கிராம்பு மிளகு ஏலக்காய் அந்த மீதமுள்ள பிரசாதத்தை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பூஜையை நம்பிக்கையுடன் வீட்டில் செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -