நீங்கள் பணம் வைக்கும் பர்ஸை இப்படி வைத்திருந்தால், பர்ஸில் வைக்கும் பணம் கையில் தங்காமல் கரைந்து கொண்டே போகும்

dhana
- Advertisement -

மனிதனின் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக ஒரு சிலர் தங்கள் குடும்பத்தை விட்டு, வெகு தூரம் சென்று, தன்னந்தனியாக அகதிகளாக வாழ்ந்து துன்பப்படுகின்றனர். இவ்வாறு இருந்த இடத்திலேயே ஒருவன் தனது வாழ்க்கையை இனிமையாக வாழ்வதற்கு வழி இல்லாமல் துன்பப்படும் நிலையாக இருக்கிறது. அப்படியிருந்தும் இந்த பணத்தை சம்பாதித்தால் மட்டுமே தனது குடும்பம் நல்லபடியாக வாழ முடியும் என்பதால் பலரும் குடும்பத்தை பிரிந்து வாழ்கின்றனர். இப்படி சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க விட்டாலும் அது உங்கள் கையில் இருந்து காரணம் இல்லாமல் கரைந்து போவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் தங்கவில்லை, பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என புலம்பிக் கொண்டிருப்பதைப் கேட்டிருப்போம். இந்த புலம்பலுக்கு தீர்வாக உங்கள் பர்ஸை எப்படி பயன்படுத்த வேண்டும், என்றும் எந்த நாளில் சென்று நீங்கள் உபயோகிக்கும் பர்ஸை வாங்க வேண்டும் என்றும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இப்பொழுதெல்லாம் பணத்தை வைப்பதற்கு என்று விதவிதமான வண்ணங்களில், பல விதமாக டிசைன்களில் பர்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல் உயிரினங்களின் தோலை வைத்து பணம் வைக்கும் பர்ஸ்கள் செய்யப்படுகின்றன. பணம் என்பது மகாலட்சுமியாக பார்க்கப்படுகிறது. இதனை விலங்குகளின் தோலினாலான பர்ஸில் வைப்பது என்பது கூடாத செயலாகும்.

- Advertisement -

தோலினால் ஆன மணி பர்ஸ்கள் அதிக நாட்கள் உழைக்கும் என்பதற்காக பலரும் இவ்வாறான பொருட்களை உபயோகப்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் பொழுது உங்கள் பணம் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து கொண்டுதான் இருக்கும். அதே போல் பணம் வைக்கும் பர்ஸில் ஒரு சில பொருட்களை வைப்பதன் மூலம் பணம் பல மடங்காக பெருகி வருகிறது.

இதற்காக தன ஆகர்ஷன மூலிகையை நாட்டு மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கி, அதனையும் உங்கள் பரிசில் வைத்துக்கொள்ளலாம் இதற்கு பணத்தை பல மடங்கு ஆக ஈர்க்கின்ற ஆகர்ஷண சக்தி இருக்கிறது இல்லாவிடில் பச்சைக்கற்பூரம் ஒரு ஏலக்காய் ஒரு கிராம்பு இதனை சிறிய துணியில் மூட்டையாக கட்டி அதனை எப்போதும் உங்கள் பரிசில் வைத்துக்கொள்ளுங்கள் இதன்மூலம் உங்கள் கையில் வரும் பணம் இரட்டிப்பாகும்.

- Advertisement -

நீங்கள் உபயோகப்படுத்தும் மணிபர்சில் இந்த பொருட்களை வைப்பதைக் காட்டிலும், முதன்முதலில் இந்த பர்ஸை வாங்கும் பொழுது அதை எந்த நாளில் வாங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். ஒவ்வொருவருக்கும் பிறந்த நட்சத்திரம் என்று ஒன்றிருக்கும். பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் இருந்து ஆறாவது நட்சத்திரத்தில் நீங்கள் செய்யத் துவங்கும் எந்த காரியத்தை வேண்டுமானாலும் துவங்குவது நன்மையில் முடியும்.

எனவே ஆறாவது நட்சத்திர நாளில் நீங்கள் பணம் வைக்கும் பர்ஸை வாங்குவதென்பது உங்கள் பணத்தின் வரவை அதிகரிக்கும். அதுபோல நீங்கள் உபயோகிக்கும் ஹேண்ட்பேக் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதனுள் பணத்தை வைக்கும் பர்ஸ் மட்டும் சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். இந்த இரண்டு நிறங்களும் பணத்தை ஈர்க்கும் சிறந்த நிறங்களாகும்.

- Advertisement -