மணி பர்சில் இந்த வார்த்தையை இப்படி மட்டும் எழுதி வச்சுக்கிட்டா போதும். பணம் எப்போதும் உங்கள் கையில் தாராளமாக தாண்டவம் ஆடும்.

wallet money
- Advertisement -

இன்று திரும்பும் திசையெல்லாம் கேட்கும் ஒரே மந்திர சொல் பணம் தான். பணம் மட்டும் கையில் இருந்து விட்டால் போதும் சகலமும் நமக்கு கிடைத்து விடும் என்ற நிலை உருவாகி விட்டது. இனி இதிலிருந்து மீள்வது சற்று கடினமான விஷயம் தான். கால சூழ்நிலையும் அதற்கு சாதகமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் பணத்தை நாம் சம்பாதித்தால் மட்டும் போதாது அந்த பணத்தை நாம் எப்படி ஈர்த்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான ஒரு தாந்த்ரீக பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மணிபர்சில் பணம் வற்றாமல் இருக்க
இப்போது மணிப்பர்ஸ் என்பது ஆண்கள் பெண்கள் என அனைவருமே எப்போதும் கையில் வைத்திருக்கக் கூடிய ஒரு பொருளாக மாறி விட்டது. அப்படி எப்போதும் நம்முடன் இருக்கும் பொருளில் இந்த ஸ்விட்ச் வேர்டை எழுதி வைக்கும் போது பண ஈர்ப்பானது நமக்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு தேவை வெள்ளை நிற பேப்பர், பச்சை நிற பேனா மட்டும் தான். இந்த வெள்ளை நிற தாளை கசங்கியோ, மடங்கியோ வைக்க கூடாது. அதே போல கோடு போட்ட தாளை பயன்படுத்த கூடாது. இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு சுக்கிர ஓரையில் செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாத பட்சத்தில் பௌர்ணமி நாளில் மாலை 6 மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள் செய்ய வேண்டும்.

“Bring Full Count shreem Ease Now” இந்த ஆங்கில வார்த்தையை எழுதி வைக்கும் அளவிற்கு பேப்பரை சிறிய துண்டாக அழகாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த வார்த்தையை எழுதி படிக்க தெரிந்தவர்கள் வாய் விட்டு படித்த பிறகு உங்கள் மணி பஸ்ஸில் வைத்து விடுங்கள். படிக்கத் தெரியாதவர்கள் அந்த வார்த்தையை யாரிடமாவது கொடுத்து எழுதி வாங்கி கொண்டு நீங்கள் பார்த்த பின்பு மணிபர்சில் வைத்துக் கொள்ளுங்கள். மணி பரிசில் வைக்கும் போது இந்த பேப்பரை மடித்து வைக்க கூடாது. அப்படியே வைக்க வேண்டும். அதே போல் பணமானது இந்த பேப்பரின் மீது படுவது போல் இருக்க வேண்டும்.

- Advertisement -

இதை செய்த பிறகு தினமும் காலையில் எழுந்தவுடன் உங்கள் மணிபரிசில் இருந்து இந்த பேப்பரை எடுத்து படிக்க வேண்டும். தெரியாதவர்கள் பார்த்தால் கூட போதும். இதை பார்க்கும் போதும், படிக்கும் போதும் உங்களுக்கு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற உந்துதலோடு செய்ய வேண்டும். அதே போல் இரவு உறங்க செல்லும் போதும் இந்த வார்த்தையை மறுபடியும் எடுத்துப் பார்த்து, படித்து அதன் பிறகு உங்கள் மணிபர்சில் வைத்து விடுங்கள்.

இந்த பேப்பரை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. கசங்கி அழுக்காகி விட்டால் மட்டும் பேப்பரை எடுத்து யாரும் கால் படாத வண்ணம் எரித்து போட்டு விடுங்கள். மறுபடியும் புதிதாக அதை நேரத்தை பார்த்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்விட்ச் வேர்ட் ஒரு ஏஞ்சல் எண் குறியீட்டை போல தான். நாம் சில வார்த்தைகளை பயன்படுத்தும் போது பிரபஞ்சத்திடம் இருந்து நமக்கான ஆற்றல் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: சொந்தத் தொழிலில் லாபம் சம்பாதிக்க இனி எந்த தடையும் வராது. ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை டேபிளுக்கு மேல இப்படி வையுங்க போதும்.

இந்த வார்த்தையும் அதே போல் தான். இதில் ஸ்ரீம் என்ற பிஜா மந்திரமும் சேர்ந்து இருப்பதால் இதை தினமும் படித்து வேண்டும் போது, உங்களுக்கு பணம் ஈர்ப்பு சக்தி அதிகமாக கிடைத்து பண வரவு அதிகரிக்க கூடிய அனைத்து கதவுகளும் திறக்கப்படும். இந்த ஸ்விட்ச் வேர்ட் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலன் அடையலாம் என்று தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -