சொந்தத் தொழிலில் லாபம் சம்பாதிக்க இனி எந்த தடையும் வராது. ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை டேபிளுக்கு மேல இப்படி வையுங்க போதும்.

lemon1
- Advertisement -

எந்த ஒரு பழத்துக்கும் இல்லாத சக்தி இந்த எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. சின்ன சைஸில் எத்தனையோ வகைகளில், எவ்வளவோ பழம் இருக்கிறது. ஆனால் இந்த எலுமிச்சம் பழத்தை மட்டும் எதற்காக பரிகாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள் தெரியுமா. அந்த எலுமிச்சம் பழத்துக்கு நாம் மனதில் நினைத்ததை அப்படியே நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய சக்தி உள்ளது. இதை தேவலோக கனி என்றும் ஆன்மீகத்தில் சொல்லுவது உண்டு. குறி கேட்பவர்கள் எல்லாம் இந்த எலுமிச்சம் பழத்தை வைத்து தான் குறி கேட்கிறார்கள். நல்லதுக்கும் இந்த பழம் பயன்படுத்தப்படுகிறது. கெட்டதிற்கும் எலுமிச்சம் பழம் பயன்படுத்தப்படுகிறது.

யார் இந்த பழத்தை கையில் வைத்துக் கொண்டு எதை நினைக்கிறார்களோ, அது அப்படியே நடக்கும் அவ்வளவு தான். நாம் நல்லதிற்காகவே எல்லா விஷயங்களையும் பயன்படுத்தலாம். இந்த எலுமிச்சம் பழத்தை வைத்து இன்று நல்லதொரு பரிகாரத்தை தான் பார்க்கப் போகின்றோம். தொழில் செய்யும் இடத்தில் இருக்கக்கூடிய நஷ்டத்தை அடியோடு அடித்து விரட்டி விட்டு லாபத்தைக் கொண்டு வர இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

- Advertisement -

தொழிலுக்கு லாபம் தரும் எலுமிச்சம் பழ பரிகாரம்:
கொஞ்சம் பெரிய அளவில் கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சம் பழமாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு நீல நிறத்தில் மார்க்கர் வாங்கிக் கொள்ளுங்கள். பர்மனென்ட் மார்க்கெட் என்று கேட்டால் கடைகளில் குறைந்த விலையில் தான் இருக்கும். அதை ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். பூஜை அறையில் எலுமிச்சம் பழத்தை வைத்து விட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டி தொழிலில் லாபம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தி இந்த வேண்டுதல் வைக்க வேண்டும்.

பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் கையில் எடுங்கள். வாங்கி வைத்திருக்கும் மார்க்கரையும் எடுங்கள். அந்த எலுமிச்சம் பழத்தில் லாபம் என்று எழுதுங்கள்.  எழுதுவதில் பெருசாக கஷ்டம் இருக்காது. எலுமிச்சம் பழத்தில் லாபம் என்று எழுதிவிட்டு, அந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் கல்லாப்பெட்டியிலோ அல்லது டேபிளுக்கு மேலேயோ அல்லது பூஜை அறையிலையோ ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து விட வேண்டும். அவ்வளவுதான்.

- Advertisement -

அந்த எலுமிச்சம்பழம் காய்ந்த பிறகு வாரம் ஒரு முறை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த எலுமிச்சம் பழத்தில் நீங்கள் எழுதி வைத்திருக்கும் அந்த லாபம் என்ற வார்த்தை உங்களுக்கு நிச்சயமாக ஏதாவது ஒரு ரூபத்தில் லாபத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். நாம் பார்க்கக் கூடிய விஷயம், அடிக்கடி பேசக்கூடிய விஷயம், அடிக்கடி சொல்லக்கூடிய விஷயம், தான் நம் வாழ்க்கையில் நடக்கும். அதனால் தான் லாபம் என்று எழுதி வைத்த இந்த எலுமிச்சம் பழத்தை நீங்கள் அடிக்கடி பார்க்கும்போது அல்லது அதை படிக்கும் போது அதில் இருக்கக்கூடிய லாபம் என்ற விஷயம் உங்கள் வாழ்க்கையில் வர தொடங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: வியாபாரத்தில் கொடி கட்டி பறந்து தொழிலதிபர் ஆகும் யோகத்தைப் பெற நாணயத்தை இதில் வைத்து பூஜை செய்து ஒளித்து வைத்து விடுங்கள். இதன் பிறகு வீடு வாசல் சொத்து என ஓஹோவென வாழ்வது உறுதி.

அதாவது தொழிலில் லாபம் வர தொடங்கிவிடும். எதார்த்தமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான் இது. இதை நம்பிக்கையோடு நாம் செய்யும் போது அந்த பரிகாரம் நமக்கு பல மடங்கு நன்மை கொடுப்பதை உணர முடியும். நீங்கள் சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தால், சின்ன கடை வைத்திருப்பவர்களாக இருந்தால் கூட ஒரு முறை இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். ஒரு சில நாட்களிலேயே உங்களுக்கு செய்யும் தொழிலில் வரக்கூடிய லாபத்தில் வித்தியாசம் தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -