உங்கள் பர்ஸில் எப்போதும் இந்த 2 பொருட்களை வைத்துக் கொண்டால் போதும். பணம் வந்து கொண்டே இருக்கும்.

pursewithcash
- Advertisement -

பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கும், ஏழை மீண்டும் மீண்டும் கஷ்டப்பட்டு ஏழையாகவே இருப்பதற்கும் ஒரே ஒரு காரணம் தான். பணம் இல்லாதவன் தன்னிடம் பணம் இல்லை இல்லை என்று சொல்லிக்கொண்டு, வரக்கூடிய வருமானத்தை கூட சேமித்து வைக்க முடியாமல் பணத்தை இழந்து விடுகின்றான். ஆனால் பணக்காரர்களுக்கு பணத்தை சேர்க்கக் கூடிய வித்தை தெரிந்திருக்கும். சூட்சமம் தெரிந்து இருக்கும். பணத்தை பலமடங்காக எப்படி பெருக்குவது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் கையில் பணம் மேலும் மேலும் பெருகுகின்றது.

நீங்களும் உங்கள் கையில் 10 ரூபாய் இருந்தால் கூட, அதை கோடி ரூபாய்க்கு சமமாக நினைத்து, அந்தப் பணத்தை எப்படி பல மடங்காக பெருக்குவது என்று சிந்தித்துக் கொண்டே இருங்கள். இல்லை இல்லை என்ற நினைப்பை ஒதுக்கி வைத்து விடுங்கள். பணம் நம்மிடம் இருக்கிறது என்று ஆழ்மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். இந்த பிரபஞ்சம் உங்களுக்கு தானாக பணத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. ஒரு முறை ட்ரை பண்ணி தான் பாருங்களேன். இதில் நஷ்டமாகி போக எதுவுமே கிடையாது.

- Advertisement -

சரி, விஷயத்திற்கு வருவோம். மணி பர்ஸில் எந்த இரண்டு பொருட்களை வைத்தால் மகாலட்சுமியின் வருகை இருக்கும். கோமதி சக்கரம், வில்வ இலை, இந்த 2 பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். புதியதாக வாங்கிய கோமதி சக்கரத்தை பூஜை அறையில் வைத்து, வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை நினைத்து கோமதி சக்கரத்திற்கு பாலபிஷேகம் செய்து, மீண்டும் நல்ல தண்ணீரில் கழுவி பூஜை அறையில் வைத்து, தீப தூப ஆராதனை காட்டி பூஜை செய்து அதன் பின்பு கோமதி சக்கரத்தை பர்ஸில் வைக்க வேண்டும்.

அடுத்தபடியாக வில்வ இலை. வில்வ இலைகளை வாங்கி சிவன் கோவிலில் அர்ச்சகரிடம் கொடுத்து, சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு சிவன் பாதங்களில் இருந்து ஒரு வில்வ இலையை வாங்கி எடுத்து வந்து உங்களுடைய பர்ஸில் வைக்க வேண்டும். இப்படி இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக பர்ஸில் வைக்கும் போது உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

பர்ஸில் பணமே இல்லை என்று கஷ்டப்படுபவர்கள் நம்பிக்கையோடு இந்த இரண்டு பொருட்களை வாங்கி பஸர்ஸில் வைத்துப் பாருங்கள். கூடவே உங்களுடைய விடாமுயற்சியும் இருக்க வேண்டும். பணத்தை சம்பாதிக்க வேண்டும். பர்ஸில் எப்போதும் கட்டுக்கட்டாக பணத்தை வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்து கொண்டே வரவேண்டும்.

இதுதவிர உங்களுடைய பர்ஸில் தேவையற்ற பொருட்களை சேகரித்து வைக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். எப்போதும் பர்ஸ் லேசாகத் தான் இருக்கவேண்டும். குப்பை கூளங்கள் நிரப்பப்பட்டு பர்ஸில் பாரத்தை அதிகமாக ஏற்றாதீர்கள். அதாவது சில பேர் பர்ஸ் அப்படியே கனமாக இருக்கும். தூக்கவே முடியாது. உள்ளே திறந்து பார்த்தால் வெறும் குப்பை கூளங்களை வைத்திருப்பார்கள். அப்படி ஒரு பர்ஸில் நிச்சயமாக மகாலட்சுமி தங்க மாட்டாள். மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும். வருமானத்தில் நிச்சயமாக வித்தியாசம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -