புத்திர பாக்கியம் தடைபட நீங்கள் செய்த இந்த 1 செயலும் காரணமாக இருக்குமா? தவறியும் இந்த தவறை செய்யாதீர்கள்!

durga-baby
- Advertisement -

ஒரு மனிதனுக்கு குறிப்பிட்ட வயது வரை தான் தன்னுடைய எதிர்காலத்திற்காக அவன் போராடுகிறான். தன் உதிரத்தில் இருந்து வந்த இன்னொரு உயிர் பிறந்த பின்பு அதற்கென தன் போராட்ட களத்தை மாற்றி அமைத்துக் கொள்கிறான். அது முதல் கடைசி காலம் வரை அதிக பங்கு குழந்தைகளுக்காகவே நாம் செலவிட நம்மை நாம் உரு மாற்றிக் கொள்கிறோம். அப்படி இருக்கும் பொழுது குழந்தை பாக்கியம் இல்லை என்பது எவ்வளவு பெரிய மன வேதனையை கொடுக்கும்? அதற்கு நாம் செய்யும் இந்த ஒரு தவறும் காரணமாக இருக்குமா? என்கிற சந்தேகம் அனைவருடைய மனதிலும் இருக்கும். அது பற்றிய பயனுள்ள தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Baby names Tamil

குலம் தழைக்க புத்திர பாக்கியம் உண்டாக வேண்டும் என்பது நியதி. முந்தைய காலத்தில் எல்லாம் பத்து, பதினைந்து குழந்தைகளை கூட சர்வ சாதாரணமாக பெற்றெடுத்த நம் மக்கள் இன்று ஒரு குழந்தைக்காக ஓராயிரம் கோயில்களை ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது தான் விஞ்ஞான வளர்ச்சியா? பல லட்சம் செலவு செய்து பல மருத்துவமனைகளை ஏறி இறங்கியும் குழந்தை பாக்கியம் என்பது சில பேருக்கு நிராசையாகவே போகி விடுகிறது.

- Advertisement -

திருமணம் ஆனது முதல் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அதில் ஏதாவது ஒரு குறை நிச்சயம் இருக்கும். இக்குறையை நிவர்த்தி செய்ய உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்கள் ஆயத்தமாக வேண்டும். ஆனால் ஒரு சிலரோ பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வேண்டுமென்றே குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து விடுகின்றனர். அதே போல பல காரணங்களை முன் வைத்து கருத்தரித்த குழந்தையை கலைத்தும் விடுகின்றனர்.

baby

முதல் குழந்தையை நீங்கள் கலைத்தால் அடுத்த குழந்தை நீங்கள் வேண்டுமென்று கேட்டாலும் கிடைக்காமல் போவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. கருக்கலைப்பு செய்வது என்பது சாஸ்திர ரீதியாக மிகப் பெரிய பாவமாகும். ஒரு உயிரை உருவாக்கிய பின்பு அதனை இல்லாமல் செய்வது என்பது எத்தகைய நியாயங்களை கூறினாலும் கொலை செய்வதற்கு சமம் தான். இந்த பாவத்திற்கு தண்டனையாக உங்கள் குலத்தில் குழந்தை பாக்கியத்தில் முற்றிலும் தடை ஏற்படலாம். நீங்கள் மட்டுமல்ல உங்கள் முன்னோர்கள் இதை செய்திருந்தாலும் உங்களுக்கு அந்த பாவத்தில் பங்கு வந்து சேரும்.

- Advertisement -

இதனால் உங்களுடைய இல்லற வாழ்க்கையில் புத்திர பாக்கியம் இல்லாமல் போகவும் வாய்ப்புகள் உண்டு. எனவே எந்த சூழ்நிலையிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, கருக்கலைப்பு என்கிற ஒரு பாவ செயலை செய்தால் அது நம்மை மட்டுமல்ல, நம் சந்ததியினரையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த புத்திர பாக்கிய தடைகள் நீங்க மனதை முதலில் ஒருநிலைப்படுத்தி தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும். நீங்கள் கோவில் கோவிலாக ஏறி இறங்கினாலும், மருத்துவமனைக்கு லட்சம் லட்சமாக செலவு செய்தாலும் கிடைக்காத புத்திர பாக்கியம் மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் நிச்சயம் கிடைக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

Durgai Amman

குழந்தை இல்லையே என்கிற ஏக்கம் குழந்தை பாக்கியத்தை தடை செய்கிறது. ஒருமுறை நீங்கள் இப்போது தான் திருமணம் ஆகியிருக்கிறது நமக்கென்ன குறை என்று நினைத்து எல்லாவற்றையும் மறந்துவிட்டு மகிழ்ச்சியாக இருந்து பாருங்கள். உங்களுக்கு பிடித்ததை செய்து மனதை திசைத் திருப்ப முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் பிள்ளை வரம் உண்டாகும். மேலும் புத்திர பாக்கிய தடை தோஷங்கள் விலக செவ்வாய் கிழமையில் துர்க்கை அம்மனுக்கு ராகு கால வேளையில் எலுமிச்சை மாலை சாற்றி எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -