புத்திர தோஷ நிவர்த்தி பரிகாரம்

puthra dosham
- Advertisement -

எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லை என்றால் அவர்களின் மனவருத்தத்தை யாராலும் நீக்க முடியாது. பெயர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும் என்று தான் ஒவ்வொரு தம்பதிகளும் விரும்புவார்கள். அப்படி பிள்ளை செல்வம் வேண்டுபவர்கள் தங்களுடைய ஜாதகத்தில் புத்திர தோஷம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். புத்திர தோஷம் இருக்கும் நபர்களுக்கு தான் குழந்தை பேரு என்பது தள்ளிப் போகும். அப்படிப்பட்ட புத்திர தோஷத்தை நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நவகிரகங்களின் அருளால் தான் நமக்கு நன்மைகள் ஏற்படுகிறது என்னும் பட்சத்தில் இந்த புத்திர பாக்கியத்தை தரக்கூடிய நவகிரகமாக திகழக்கூடியவர்தான் குருபகவான். இவரை நாம் தனபுத்திர காரகன் என்று கூறுகிறோம். அதாவது தனமான பணத்தையும் புத்திர என்கின்ற குழந்தை செல்வத்தையும் தரக்கூடிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். அப்படிப்பட்ட குரு பகவானுக்குரிய பொருட்களை வைத்து நாம் பரிகாரம் செய்யும் பொழுது புத்திர தோஷம் என்பது நமக்கு நிவர்த்தி ஆகும்.

- Advertisement -

இந்த புத்திர தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய பரிகாரத்தை நாம் வியாழக்கிழமையில் வரக்கூடிய குரு ஹோரையில்தான் செய்ய வேண்டும். நம்முடைய வீட்டிலேயே இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். இதற்காக நாம் சிறிது சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் இதை செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் புத்திர தோஷம் நிவர்த்தி அடைந்து விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வீட்டிற்கு நடுவில் செம்மண் கோலத்தை போட வேண்டும். அந்தக் கோலத்திற்கு நடுவில் வாழை இலையை விரித்துக்கொள்ள வேண்டும். அந்த வாழை இலையின் மேல் 12 அரச இலைகளை வைக்க வேண்டும். அந்த அரச இலைக்கும் மேல் குரு பகவானின் தானியமாக கருதப்படும் கருப்பு கொண்டை கடலை விளையும் கரிசல் மண்ணை எடுத்து வந்து 12 பிள்ளையார்களை பிடித்து வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த பிள்ளையாருக்கு முல்லை பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அடுத்ததாக இவர்களுக்கு கற்கண்டு சாதம் அல்லது மஞ்சள் நிற நிறத்தில் இருக்கக்கூடிய முருங்கை இலை சாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் புத்திர தோஷம் என்பது முழுமையாக நிவர்த்தி அடையும்.

மேலும் குரு பகவானின் அம்சம் பொருந்திய கருப்பு கொண்டை கடலை விளையும் செடியின் வேரை எடுத்து வந்து தாயத்தில் போட்டு கணவன் மனைவி இருவரும் அணிந்து வர குரு பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி விரைவிலேயே குழந்தை பாக்கியம் ஏற்படும். மேலும் கருப்பு கொண்டை கடலை விளையும் இடங்களுக்கு சென்று தங்கி வர விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சகல துன்பங்களை நீக்கும் சரபேஸ்வரர் வழிபாடு

இந்த எளிமையான பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்வதன் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த குழந்தை பாக்கியம் விரைவிலேயே கிடைக்கும்.

- Advertisement -