ஒரு விஷயத்தை சொல்லாதே என்று சொன்னால் அதை உடனே மற்றவர்களிடம் சொல்லும் டாப் 5 ராசிகள் யாரெல்லாம் தெரியுமா? இவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்!

astro-silent
- Advertisement -

எல்லோருமே ரகசியத்தை காப்பதில் வல்லவர்கள் ஆகி விட முடியாது. தன்னுடைய ரகசியத்தை கூட காப்பாற்ற முடியாதவர்கள் கண்டிப்பாக மற்றவர்களுடைய ரகசியத்தைக் காப்பாற்ற மாட்டார்கள். ஒரு விஷயத்தை சொல்லாதே என்று சொன்னால் உடனே அதை உரியவர்களிடம் சென்று உளறிக் கொட்டுவது ஒரு வகையான மன நிலை ஆகும். இவர்களில் சிலர் வேண்டுமென்றே செய்வதும், சிலர் தெரியாமல் செய்வதும் உண்டு. இந்த வரிசையில் டாப் 5 ராசிகள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை இனி பார்ப்போம்.

மேஷம்:
முதல் ராசியாக இருக்கும் மேஷத்தில் பிறந்தவர்கள் ரகசியத்தை உளறி கொட்டுவதில் முதல் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களால் ஒரு விஷயத்தை மனதில் நீண்ட நாட்கள் போட்டு வைத்துக் கொள்ள முடியாது. அது அவர்களை உறுத்திக் கொண்டே இருக்கும். யாரிடமாவது அதை சொல்லிவிட்டால் அவர்களுக்கு மன பாரம் இறங்கியது போல தோன்றும். எனவே எந்த ஒரு ரகசியமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எப்படியேனும் உரியவர்களிடம் உளறிக் கொட்டி விடுவார்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களும் தன் மனதில் இருக்கும் சில விஷயங்களை ஒரு கட்டத்திற்கு மேல் அடக்கி வைத்துக் கொள்ள முடியாதவர்கள். தன்னுடைய ரகசியத்தை ரகசியமாகவே இவர்கள் மதிப்பது இல்லை. இவர்களுடைய மனதில் எப்பொழுதும் எந்த ஒரு விஷயத்தையும் போட்டு குழப்பிக் கொள்ள மாட்டார்கள். உரியவர்களிடம் சட்டென்று கேட்டு தெளிந்து விடுவார்கள். நீங்கள் ஏன் அப்படி செய்தீர்கள்? நீங்கள் ஏன் இப்படி பேசினீர்கள்? என்று முகத்திற்கு நேராக கேட்டு விடுவதால் இவர்களால் ரகசியத்தைக் காப்பாற்ற முடிவதில்லை.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களும் எந்த ஒரு ரகசியத்தையும் சரியாக காப்பாற்றுவது கிடையாது. ஒரு விஷயத்தை சொல்லாதே என்று சொன்னால் கூட அவர்களால் அதை நீண்ட நாட்கள் மனதில் வைத்து கொண்டு இருக்க முடியாது, மறந்து போய்விடும். இவர்கள் வேண்டுமென்றே உளறிக் கொட்டா விட்டாலும், இவர்களால் இது போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்க முடியாது எனவே மறந்து போய் மற்றவர்களிடம் உளறிக் கொட்டி விட்டு பின்னர் மாட்டிக் கொண்டு முழிப்பார்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்களை போலவே மனதில் எதையும் வைத்துக் கொள்ள முடியாதவர்கள். நீதி, நேர்மை, நியாயம் என்று இருக்கும் இவர்கள் தவறு செய்தால் உடனே தட்டிக் கேட்டு விடுவது உண்டு. இவர்களுடைய மனதில் எந்த ஒரு விஷயத்தையும் பூட்டி வைப்பதற்கு இடம் இல்லை. சிறு சிறு விஷயங்களை கூட மற்றவர்களிடம் எளிதாக பகிர்ந்து கொள்ளும் இவர்களுக்கு எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை கட்டிக் காக்க நிச்சயம் முடியாது. எனவே கண்டிப்பாக இவர்கள் உளறிக் கொட்டி விடுவார்கள். இவர்களை நம்பி எந்த ஒரு ரகசியத்தையும் சொல்லாமல் இருப்பது நல்லது.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்களுடைய ரகசியத்தை கட்டி காத்தாலும், மற்றவர்களுடைய ரகசியத்தை இவர்கள் கண்டிப்பாக உளறிக் கொட்டி விடுவது உண்டு. ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் இவர்கள் வேண்டுமென்றே பற்ற வைக்கா விட்டாலும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களாக இருக்கும் பொழுது இவர் சொல்வதை அவரிடமும், அவர் சொல்வதை இவரிடமும் சொல்லி நல்லது செய்கிறேன் என்கிற பெயரில் சண்டை மூட்டி விடுவது உண்டு. எனவே இவர்களிடம் ரகசியத்தைச் சொல்லும் போதே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

- Advertisement -