ராகு கேது தோஷம் நீங்க மந்திரம்

raghu kethu dhosam neenga
- Advertisement -

நாம் பார்க்கும் பலரும் சொல்லும் ஒரே வார்த்தை நான் எந்த முயற்சி செய்தாலும் நடப்பதில்லை எனக்கென்று எதுவும் சரியாக அமையாது என்ற புலம்பலான வார்த்தைதான் இப்படி ஒருவருடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலே முடிகிறது அவர்களுடைய வாழ்க்கையில் சுப காரியங்களை நடப்பதில்லை என்றால் நிச்சயம் அங்கு ராகு கேது தோஷம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜோதிட ரீதியாக இந்த ராகு கேது தோஷமானது மிக முக்கியமான ஒரு தோசமாக கருதப்படுகிறது காரணம் இந்த ராகு கேது ஜாதகத்தின் எந்த கிரகங்களுடன் உள்ளது அந்த கிரகங்களை தன்வசமாக்கி கொள்ளும் தன்மை உடையது கிரகத்தின் அதிபதியான தெய்வங்களையும் கூட தன் வசம் ஆக்கிவிடும் இதனால் அவர்கள் தொடர்ந்து பிரச்சினைகளை சந்திக்க நேரம்.

- Advertisement -

தன்னை பார்க்கும் கிரகங்களையும் பிரகதிபாதிகளையும் தன்வசம் ஆக்கி விடும் இந்த ராகு கேதுகளை சரியான முறையில் வழிபட்டால் நம்முடைய பிரச்சனைகளை தீர்க்க முடியும் குறிப்பாக அவர்களுக்கான மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும் அதைப் பற்றிய ஒரு தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது தோஷம் நீங்க மந்திரம்

இந்த மந்திர வழிபாட்டை நாம் சிவாலயத்தில் தான் செய்ய வேண்டும். சிவாலயத்தில் சிவபெருமானை நினைத்து செய்யும் பொழுது இந்த மந்திரத்திற்கான பலன் அதிகமாக கிடைக்கும். எந்த தோஷத்தில் இருந்தும் நாம் விடுபட வேண்டும் எனில் முதலில் சிவபெருமானின் கரங்களை இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ராகு காயத்ரி மந்திரம்

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தனோ ராகு ப்ரசோதயாத்

என்ற இந்த மந்திரத்தை சிவாலயத்தில் உள்ள நவகிரக சன்னதிக்கு முன் அமர்ந்து செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் காலை 9:30 மணிக்குள்ளாக சொல்லிவிட வேண்டும். இந்த மந்திரத்தை குறைந்தது 108 முறை அதிகபட்சமாக 1008 முறை சொல்வது நல்ல பலனை தரும்.

இந்த நேரத்தில் ராகு பகவானுக்கு சிவப்பு நிற மலர்களை சூட்டி கருப்பு உளுந்தினால் செய்யப்பட்ட நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். மந்திரத்தை சொல்லி வழிபட்ட பிறகு நெய்வேத்தியத்தை ஆலயத்தில் வருவோர்களுக்கு தானமாக கொடுத்து விட வேண்டும்.

- Advertisement -

கேது காயத்ரி மந்திரம்

ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னக் கேது ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் எட்டு மணிக்குள்ளாக நவகிரக ங்களுக்கு முன் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் நெய்வேத்தியமாக கொள்ளினால் செய்த உணவுப் பொருட்களை வைக்க வேண்டும். இந்த மந்திரத்தையும் 108 முறை அல்லது ஆயிரத்து 1008 முறை சொல்வது நல்லது.

இதையும் படிக்கலாமே: போகி அன்று செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு

இந்த பரிகாரத்தை குறைந்த பட்சம் 9 வாரங்களில் இருந்து அதிகபட்சம் 27 வாரங்கள் வரை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பித்த நாட்களுக்குள்ளாகவே உங்களுடைய பிரச்சனைகள் குறைய ஆரம்பிப்பதை உணர்வீர்கள் ராகு கேதுவின் தாக்கத்திலிருந்து விடுபடக்கூடிய இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -