மூன்றே நாட்களில் முத்து போல உங்கள் முகம் வெள்ளையாக ஜொலி ஜொலிக்க இந்த பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. ராகியில் மறைந்திருக்கும் ரகசிய அழகு குறிப்பு.

face
- Advertisement -

எல்லோருக்குமே சீக்கிரமாக அழகாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நிரந்தரமான அழகைப் பெற வேண்டுமென்றால் கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வேண்டும். ரொம்ப அதிக நாட்கள் காத்திருக்க வேண்டாம். 3 நாட்கள் போதும். இந்த ஃபேஸ் பேக்கை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக உங்களுடைய சருமத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து அழகான தோற்றத்தை பெறுவீர்கள்.

இதுவரைக்கும் நாம யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ராகியை வைத்து ஒரு அழகு குறிப்பு உங்களுக்காக. அதுவும் மிக மிக சுலபமான குறிப்பு. அழகில் ஆர்வம் இருப்பவர்கள் இந்த குறிப்பை மிஸ் பண்ணவே கூடாது. முதலில் இந்த பேக் தயாரிக்க நமக்கு தேவையான பொருட்கள். 2 டேபிள் ஸ்பூன் கேழ்வரகு, தேவையான அளவு பால், முந்தைய நாள் இரவு கேழ்வரகை கழுவிவிட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்துவிடுங்கள். 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய இந்த கேழ்வரகை மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு பால் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளுங்கள். நமக்கு ஃபேஸ் பேக் கிடைத்துவிட்டது. எவ்வளவு ஈஸி பாருங்க.

- Advertisement -

இந்த பேக்கை உங்களுடைய முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். கழுத்திலும் அப்ளை செய்து கொள்ளுங்கள். முகத்தில் கருவளையம் இருந்தால் அங்கேயும் கொஞ்சம் திக்காக போட்டுக் கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் முகத்தில் பேக் ட்ரை ஆன பின்பும் உங்களுடைய முகத்தை நன்றாக நினைத்துக் கொண்டு, உங்களுடைய கையையும் தண்ணீரில் நனைத்துக் கொண்டு, முகத்தை வட்ட வடிவில் ஐந்து நிமிடங்கள் போல மசாஜ் செய்து தண்ணீரில் கழுவி விடவேண்டும். அவ்வளவு தான். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த பேக்கை போட்டு வந்தாலே உங்களுடைய முகத்தில் பொலிவு கூடுவதை உங்களால் உணர முடியும்.

- Advertisement -

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் சுருக்கங்கள் எல்லாம் படிப்படியாக குறையத் தொடங்கும். இயற்கையாக எந்த கெமிக்கல் கலக்காத இந்த பேக்கை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுடைய முகத்தில் முகப்பரு அதிகமாக இருந்தால் எண்ணெய் வடிய கூடிய சருமமாக இருந்தால் நீங்கள் பாலுக்கு பதிலாக ரோஸ்வாட்டர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் ரோஸ் வாட்டர் இல்லை என்றால் பரவாயில்லை. வெறும் தண்ணீரை ஊற்றி கேழ்வரகு மாவை அரைத்து பயன்படுத்தினாலும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

கேழ்வரகை வாங்கி ஊற வைத்து தான் அரைக்கவேண்டும். தவிர மாவை பயன்படுத்துவது அவ்வளவு ஆரோக்கியம் அல்ல‌‌. இந்த ஃபேஸ் பேக்கை இத்தனை நாட்கள் போட்டுவிட்டு, அதன் பின்பு நிறுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. தொடர்ந்து பயன்படுத்தியதில் உங்களுக்கு நல்ல மன திருப்தி ஏற்பட்டால், இதையே உங்களுடைய நிரந்தர ஃபேஸ் பேக்காகவும் மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -