இன்று ராகு கேது பெயர்ச்சி! இன்றைய தினம் பரிகாரங்கள் செய்ய வேண்டிய ராசிகள் எது? ராகு கேது பெயர்ச்சி அன்று கட்டாயம் ஒவ்வொருவரும் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன?

rahu ketu astro
- Advertisement -

நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு கேது பெயர்ச்சியானது இன்று, அதாவது மார்ச் மாதம் 21.03.2022 ஆம் தேதி, மதியம் 3:13 மணி அளவில் நடைபெறவிருக்கின்றது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு செல்கிறார். விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு கேது பகவான் பெயர்ச்சி ஆக இருக்கிறார். ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய இந்த ராகு கேது பெயர்ச்சி மனிதர்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றத்தைக் கொண்டு வரும். அந்த வரிசையில் இந்த வருடம் ராகு கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது. எந்தெந்த ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப்போகிறது. எந்தெந்த ராசிகள் கட்டாயம் பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், இந்த ராகு கேது பெயர்ச்சி அன்று தோஷங்கள் விலக எந்த மந்திரத்தை உச்சரிப்பது என்பதை பற்றிய விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

ராகு கேது பெயர்ச்சி பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிக்காரர்கள்:
உங்களுடைய வீட்டின் அருகில் நவகிரகங்கள் சன்னிதானம் உள்ள கோவில்களில் நிச்சயமாக பரிகார பூஜைகள் நடைபெறும். அங்கு சென்று உங்களுடைய பெயர் நட்சத்திரம் ராசி, சொல்லி அர்ச்சனை செய்து பரிகார பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிக்காரர்கள் மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மகரம், மீனம். இந்த ராசிக்காரர்கள் எல்லாம் பரிகாரங்கள் செய்து கொண்டால் நன்மை தரும் என்று ஜோதிடர்களால் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்:
கடகம், மகரம், மேஷம், மீனம், சிம்மம், இந்த ஐந்து ராசிக்காரர்களும் அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்சனை வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

ராகு கேது பெயர்ச்சியால் அதிக நன்மைகளை பெறக்கூடிய ராசிகள்:
ரிஷபம், விருச்சிகம், கும்பம். இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இதுநாள் வரை இருந்து வந்த கஷ்டங்கள் இனி படிப்படியாக குறையும். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத பல நன்மைகள் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த ராசிக்காரர்கள், அந்த ராசிக்காரர்கள் என்று இல்லாமல், மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருமே நாளையதினம் பின் செல்லக்கூடிய இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. எந்த ஒரு கிரக தோஷத்தாலும் பெரிய பிரச்சனைகளோ வராது. இந்த மந்திரத்தை தினம்தோறும் உச்சரித்தாலும் தவறு கிடையாது. இருப்பினும் இன்றைய தினம் ராகு கேது பெயர்ச்சி என்பதால் ராகு கேது பெயர்ச்சி ஆன பிறகு, உங்களால் எந்த நேரம் முடியுமோ, அந்த நேரத்தில் பூஜை அறையில் அமர்ந்து தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, பின் செல்லக்கூடிய மந்திரத்தை மனதார 11 முறை உச்சரியுங்கள் போதும்.

கருட மந்திரம்:
ஓம் ஸ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய
விஷ்ணு பக்தி பிரியாய
அமிர்த கலச ஹஸ்தாய

பஹு பராக்ரமாய
பக்ஷி ராஜாய சர்வ வக்கிர
சர்வ தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய ஸ்வாஹா

உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் எப்படிப்பட்ட தோஷமும் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை கொடுக்காத.. இந்த மந்திரத்தை உச்சரித்தால். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த இந்த கருட மந்திரத்தை இன்று அனைவரும் உச்சரித்து நல்ல பலனை பெற வேண்டும் என்று அந்த எம்பெருமானை வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -