ராகு திசையில் செய்ய வேண்டிய பரிகாரம்

ragu
- Advertisement -

ஒரு மனிதனுக்கு ஜாதக கட்டத்தில் கிரக சூழ்நிலை சரியாக அமையவில்லை என்றால், அவனுடைய கஷ்டங்களை யாராலும் தீர்க்க முடியாது. கிரக தோஷத்தால் வரக்கூடிய கஷ்டங்களை தீர்க்க வேண்டும் என்றால் இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொள்வதுதான் ஒரே வழி. உங்களுக்கு ராகு திசை நடக்கிறது, கேது திசை நடக்கிறது, ஜாதகத்தில் மாந்தியால் தோஷம் இருக்கிறது என்றால், கெட்ட நேரம், கெட்ட சிந்தனை, கெட்ட புத்தி, வாழ்க்கையை குறுக்கு வழியில் நகர்த்தி செல்லும்.

போலீஸ் கேஸ் கோர்ட் வழக்குகள் உங்களை விடாமல் துரத்தி அடிக்கிறது, அதிலும் குறிப்பாக இந்த ராகு மகா திசை நடந்தால் 18 ஆண்டுகள் உங்கள் வாழ்க்கை ரொம்பவும் கொடுமையாக நகர்ந்து செல்லும். இப்படி பட்ட கிரக பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. இதோ ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரம் உங்களுக்காக தான்.

- Advertisement -

ராகு திசை பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். கொஞ்சமாக கருப்பு உளுந்தை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த ஊற வைத்த கருப்பு உளுந்தை எடுத்து ஒரு தாம்பூல தட்டில் பரப்பிக் கொள்ளவும்.

இதை பூஜை அறையில் வைத்து விட்டு உங்கள் குலதெய்வம், சிவபெருமான், நவகிரகங்கள் எல்லோரையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி மூடி எடுத்துக் கொள்ளவும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு இதை எடுத்துச் செல்லவும்.

- Advertisement -

அங்கு பைரவர் சன்னிதானம் இருக்கும். கோவிலுக்கு போன உடனேயே பைரவருக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு பிரார்த்தனை செய்யுங்கள். பைரவா என்னுடைய குடும்பத்திற்கும் எனக்கும் நீதான் காவல் தெய்வமாக இருக்க வேண்டும் இந்த கிரக தோஷங்கள் என்னை எதுவும் செய்யக்கூடாது என்று வேண்டுதல் வையுங்கள்.

ஈசனையும் வழிபாடு செய்து விடுங்கள். பைரவரும் ஈசனும் வேறு வேறு கிடையாது. இருந்தாலும் மூலஸ்தானத்தில் இருக்கும் சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு, உங்கள் கையில் இருக்கும் கருப்பு உளுந்துடன் கொஞ்சமாக வெள்ளத்தைக் கொட்டி நன்றாக கலந்து, வீடு திரும்பும் போது ஒரு பசு மாட்டுக்கு தானமாக கொடுத்து விட வேண்டும்.

- Advertisement -

வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை இதை விடாமல் செய்து வந்தால் உங்களுக்கு எந்த தோஷமும் பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்காது. இந்த பரிகாரம் உங்கள் சிந்தனையை சரி செய்யும். உங்கள் வாழ்க்கையை நேர்வழியில் நடத்திச் செல்வதற்கு உண்டான வழியை காட்டிக் கொடுக்கும்.

கெட்டது கெட்டது என்று யோசித்துக் கொண்டிருந்த உங்களுடைய மனம் நல்லபடியாக சிந்திக்க தொடங்கிவிடும். உங்கள் ஜாதகத்தின் படி எத்தனை வருடங்கள் உங்களுக்கு கெட்ட நேரம் இருக்கிறதோ, அத்தனை வருடம் ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: 10 நாளில் நினைத்தது நடக்க கல் உப்பு பரிகாரம்

பெரிய அளவில் உங்களுடைய தலையில் இடி வந்து விழாமல் பிரச்சனைகள் எல்லாம் சர்வ சாதாரணம் ஆக சரியாகிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -