ராகு கேது பரிகாரம்

- Advertisement -

நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக திகழ்வன ராகு மற்றும் கேது கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களும் நன்மையாக இருந்தாலும் சரி, தீமையானதாக இருந்தாலும் சரி ஜாதகத்தில் மற்ற எந்த கிரகங்களை காட்டிலும் பலன்களை அதிகமாக கொடுக்க வல்லதாக ஜோதிட அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக எந்த ஒரு ஜாதகத்திலும் இந்த இரு கிரகங்களின் தோஷங்கள் இல்லை என்றாலும் கூட, அந்த ராகு – கேது ஆகிய இரண்டு கிரகங்கள் வலு பெற்று நமக்கு நற்பலன்கள் தரக்கூடிய சில எளிய ராகு கேது பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்

ராகு – கேது ஆகிய இரு கிரகங்களில் ஜாதகத்தில் ராகு கிரகம் பலம் பெற ஏதேனும் நதிக்கரையோரம் இருக்கின்ற புனிதத் தலத்திற்கு செல்லும் பொழுது, அந்த நரியில் முழங்கால் அளவிற்கு நீரில் இறங்கி, இளநீரை அந்த நதியில் மெதுவாக ஊற்றி, நதிக்கு அர்ப்பணம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். எப்பொழுதும் தங்களின் கழுத்தில் ஒரு வெள்ளி சங்கிலி அணிந்து கொண்டிருப்பது நல்லது. மேலும் ராகு பலம் பெற விரும்புபவர்கள மது அருந்துதல், போதை பொருட்களை பயன்படுத்தல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

ராகு பகவானின் அருளைப் பெறவும், ஜாதகத்தில் ராகு பலம் பெறவும் வீட்டில் கருப்பு நிற நாய் வளர்க்கலாம். அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கருப்பு நிற நாய்களுக்கு உணவிட்டு வருவதும் நல்லது. சகோதர உறவுகள் கஷ்டப்படுகிற காலத்தில், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும் ராகு தோஷங்களை நீக்குவதோடு, ஜாதகத்தில் ராகு கிரகம் பலம் பெற ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

ராகு – கேது பரிகாரங்களில் கேது கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது ஜாதகத்தில் கேது கிரகம் பலம் பெற விரும்புபவர்கள் கருப்பு, பழுப்பு, பல வண்ண கலவை கொண்ட ஆடைகள் அணிவதை விடுத்து, எப்பொழுதும் தூய்மையான வெள்ளை மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அதிகம் அணிய வேண்டும். ரத்தின கற்களில் கேது கிரகத்தின் அம்சம் கொண்ட வைடூரியம் கல்லை வெள்ளியில் பதித்து, வலது கை நடு விரலில் அணிவதால் கேது கிரகத்தின் முழுமையான அருட்கடாட்சம் கிடைக்கும்.

- Advertisement -

கேது பகவானுக்குரிய அதி தேவதையாக இருப்பவர் விநாயகப் பெருமான். எனவே சனிக்கிழமைகள் தோறும் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வதோடு. கணபதி அதர்வஸிர்ஷ தோத்திரத்தை பாராயணம் செய்து வருவதாலும், கேது கிரகத்தால் பாதகமான பலன் ஏற்படாமல் தடுக்கும். சன்னியாசிகளுக்கு வாழைப்பழம், போர்வை போன்றவற்றை தானம் செய்வதாலும் ஜாதகத்தில் கேது கிரகம் பலம் பெறுவதற்குரிய பரிகாரமாக கூறப்படுகின்றது.

பொதுவாக ராகு – கேது ஆகிய இரண்டு கிரகங்களின் அருளையும் ஒரு சேர பெறுவதற்குரிய சிறந்த பரிகாரமாக இருப்பது மறைந்த முன்னோர்களுக்கு சரியான காலங்களில் திதி தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றை கொடுப்பதாகும். இப்படி செய்வதாலேயே நிழல் கிரகங்களான ராகு – கேது ஆகிய இருவரின் முழுமையான அருள் குடும்பத்திற்கு கிடைத்து, ஜாதக தோஷங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே: திருமண தாமத பரிகாரம்

திருக்கோயில்களில் ராகு – கேது ஆகிய இரு கிரகங்களுக்குரிய பரிகார தலமாக இருப்பது ஆந்திர மாநிலத்தில் இருக்கின்ற அருள்மிகு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலாகும். வருடத்திற்கு ஒருமுறை இந்த காலஹஸ்தி திருக்கோவிலுக்கு சென்று, ராகு கால வேலையில் ராகு – கேது கிரகங்களுக்குரிய பரிகார பூஜை செய்து வருவதாலும், ராகு – கேது ஆகிய இருவரின் அருட்கடாட்சம் நமக்கு முழுமையாக கிடைக்கிறது.

- Advertisement -