ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டைக்குப் பிறகு, 12 ராசிக்கும் ராசிபலன்

ramar1
- Advertisement -

இன்று ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த பூலோகத்தில் ஒவ்வொரு ஆன்மீக ரீதியான நிகழ்வுகள் நடக்கும் போதும், ஜோதிட ரீதியாக 12 ராசிகளுக்கும் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், ராமபிரானை அயோத்தியாவில்பிரதிஷ்டை செய்த பிறகு, 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகின்றது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஜோதிடம் சார்ந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். இதோடு சேர்த்து ஒவ்வொரு ராசியினருக்கும் செய்ய வேண்டிய பரிகாரமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய நாட்கள் மன நிம்மதியை தரக்கூடிய நாட்களாக இருக்கும். மருத்துவ செலவு குறையும். இரவில் நல்ல தூக்கம் வரும். நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு குறிப்பிட்ட உடல் உபாதையால் நீங்கள் அவதிப்பட்டு  வந்தவர்களாக இருந்தால், அந்தப் பிரச்சினையில் இருந்து படிப்படியாக விடுபடுவீர்கள். ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த நாளில் இருந்து தொடர்ந்து 48 நாட்கள் ராம ராம மந்திரத்தை மனதிற்குள் ஜபித்துக் கொண்டே இருங்கள். இன்னும் பெரிய பெரிய அளவில் நன்மைகள் உங்களை வந்து சேரும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய நாட்களில் சுபகாரிய தடை விலகும். நீண்ட நாட்களாக திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை இல்லாமல் இதுநாள் வரை கஷ்டப்பட்டவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் சொத்து பிரச்சனை சரியாகும். இன்றிலிருந்து தொடர்ந்து 48 நாள் வீட்டில் ராமருக்கு நெய் தீபம் ஏற்றினால் மேலும் நல்ல பலனை பெறலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலகட்டத்தில் நிறைய நல்ல மாற்றங்கள் நிகழும். வேளையில் மாற்றம், செய்யக்கூடிய தொழிலில் மாற்றம் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. வரக்கூடிய மாற்றங்கள் உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய வகையில் அமையும். சிலருக்கு கர்ம வினையால் தொடரக்கூடிய பிரச்சனைகள் நீங்கும். பித்ருக்களுக்கு உங்களால் செய்ய முடியாது திரி தர்ப்பண காரியங்களை இனிவரும் காலகட்டத்தில் தடையில்லாமல் செய்து முடிப்பீர்கள். இதுவே உங்களுக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். இன்றிலிருந்து தொடர்ந்து 48 நாட்கள் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரியுங்கள். தொடர்ந்து 48 நாள் பெருமாளுக்கு துளசி வாங்கி கொடுங்க நல்லது நடக்கும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலத்தில் உங்களுடைய மனது ஆன்மீகத்தை நாடி செல்லும். இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற சந்தேகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு கூட, அந்த இறைவன் காட்சி தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது குடும்பத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் பெருகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். எதிர்பாராத இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இழப்புகள் என்றதுமே பயந்து விட வேண்டாம். பெரிய அளவில் இருக்காது. ஆனால் உங்களுடைய மனதுக்கு கஷ்டம் தரும் அளவில் சில இழப்புகள் இருக்கும். அதை ஈடு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி இலையை சாத்தி ராம ராம மந்திரத்தை ஜெபித்து வழிபாடு செய்வது பேரிழப்பிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொடுக்கும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இதுநாள் வரை இருந்த மன குழப்பம் உங்களுக்கு நீங்கும். தூக்கமே வராமல் கஷ்டப்பட்டவங்க கூட இனிமே நல்லா தூங்குவீங்க. அந்த அளவுக்கு உங்களுடைய பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வினை அந்த ராமபிரான் காட்டிக் கொடுப்பார். உங்க வீட்டில் ராமர் பட்டாபிஷேக படத்தை வச்சுக்கோங்க. தினமும் அதற்கு துளசி வாங்கி சாத்துங்க. ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வந்தால் 48 நாட்களில் உங்களுக்கு எதிர்பாராத நல்லது நடக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவம் சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு வீண் விரைய செலவை கொடுக்கும். இது தவிர வாழ்க்கையில் நல்ல நல்ல முன்னேற்றங்கள், நல்ல நல்ல வாய்ப்புகள் எல்லாம் உங்கள் வீடு தேடி வரும். நீங்கள் எதிர்பாராத உயர்ந்த பதவிகள் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். நோய் நொடியில் இருந்து வெளிவர தினமும் பெருமாளுக்கு பஞ்சபாத்திரத்தில் தீர்த்தத்தில் துளசி போட்டு வழிபாடு செய்யுங்கள். ராமபிரானை நினைத்து பூஜை அறையில் ஒரு நெய் விளக்கு ஏற்றி வழிபாடு முடித்துவிட்டு, 48 நாட்கள் அந்த தீர்த்தத்தை பருகிவர உங்கள் உடல் ஆரோக்கிய பிரச்சனை சரியாகும்.

விருச்சிகம்

விருச்சக ராசி காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். குறிப்பாக சளி தொந்தரவு, இருமல் தொந்தரவு, சைனஸ் பிரச்சனையில் இவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் நிரந்தரமாக வெளிவர பெருமாளுக்கு தொடர்ந்து 48 நாள் பானகம் நிவேதனமாக வைத்து வழிபாடு செய்யுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டம் கொஞ்சம் தகராறுகள் நிறைந்த காலமாக இருக்கப் போகின்றது. எதிரிகள் புதுசாக உருவாகுவார்கள். நண்பர்கள் உறவுகளாக தான் இருப்பார்கள். ஆனாலும் சண்டை சச்சரவுகள் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கணவன் மனைவிக்குள் பிரச்சனை வராமல் இருக்க யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். உங்கள் வீட்டில் ராமர் சீதையின் படத்தை ஒன்றாக வைத்து அந்த திருவுருவப்படத்திற்கு முன்பாக நெய் விளக்கு ஏற்றி தொடர்ந்து 48 நாள் வழிபாடு செய்தால் நன்மை நடக்கும். முடிந்தவரை பசு நெய் வாங்கி கோவில்களுக்கு தானம் செய்யுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் பேராசையை குறைத்துக் கொள்ளவும். இந்த தொழிலில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று யாராவது சொன்னால் உடனடியாக பணத்தைக் கொண்டு போய் போட்டு விடக்கூடாது. அது உங்களுக்கு பிரச்சனையே கொடுத்து விடும். பணத்தை இழக்கச் செய்யும். சில பேருக்கு மேலிடத்தில் உயர்ந்த பதவி கிடைக்கும். ஆனால் அந்த பதவியில் போய் உட்கார்ந்ததும், சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். பெரிய அளவில் பிரச்சனைகளை பதவியில் அமர்ந்து சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இப்படிப்பட்ட பிரச்சனையில் இருந்து தப்பிக்க பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு முன்பு இரண்டு ஏலக்காயை தினமும் வைத்து வழிபாடு செய்யுங்கள். தொடர்ந்து 48 நாள் ராம ராம மந்திரத்தை சொல்லி இந்த வழிபாடு செய்தால் உங்களுக்கு நல்லது நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டத்தில் கொஞ்சம் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்களுக்கு நல்லது நடப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். எனக்கு மட்டும் நல்லதே நடக்க மாட்டேங்குது என்று புலம்பக்கூடிய நாட்களை நீங்கள் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் தினமும் பெருமாளுக்கு சிவப்பு நிற பூக்களை போட்டு நெய் விளக்கேற்றி தொடர்ந்து 48 நாள் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இப்போது நேரம் அவ்வளவு சரியாக இல்லை. சில பல பிரச்சனைகளில் நீங்கள் சிக்கி தவித்தது உங்களுக்கே தெரியும். கடந்த சில மாதங்களாக நிம்மதி இல்லாமல் இருந்திருப்பீர்கள். இப்போது ராமபிரானுக்கு பிரதிஷ்டை நடந்திருக்க கூடிய இந்த நேரத்தில் இன்றிலிருந்து தொடங்கி தொடர்ந்து 48 நாள் ராம மந்திரத்தை மனதில் சொல்ல வேண்டும். வீட்டில் ராமரது திருவுருவப்படத்தை வைத்து உங்களுடைய கையால், தினமும் ராமருக்கும் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து கஷ்டங்கள் தீர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கூடவே ஒரு அகல் விளக்கில் நெய் ஊத்தி தீபம் ஏற்றி வாருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -