நாளை ராம நவமி! இப்படி விரதம் இருந்தால் நினைத்தது உடனே நடக்கும். செய்த பாவங்கள் நீங்க  ‘ராம’ மந்திரத்தை எப்படி உச்சரிப்பது?

rama-navami
- Advertisement -

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் இந்த ராம அவதாரம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த பூமியில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் தான் அந்த ராமபிரான். தர்மத்தின் வழியில் சென்று அதர்மத்தை எப்படி அழிப்பது, ஒரு நாட்டை ஆளக்கூடிய அரசன் எப்படி இருக்க வேண்டும், பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும், உடன் பிறந்தவர்களை எப்படி மதிக்க வேண்டும், கட்டிய மனைவியை எப்படி நடத்த வேண்டும், எதிரியை கூட எப்படி நண்பனாக பார்க்க வேண்டும், இப்படியாக இந்த பூமியில் ஒரு மனிதன் எப்படி நல்ல மனிதனாக வாழ்வது என்பதை, நான் இராமபிரானிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

ramar-setha

இவ்வளவு சிறப்புகளை கொண்ட ராமபிரான் அவதரித்த தினத்தை தான் ராமநவமியாக கொண்டாடுகின்றோம். இந்த வருடம் ராமநவமி ஏப்ரல் 21ஆம் தேதி, சித்திரை 9 ஆம் நாள் வருகின்றது. ராமநவமி அன்று ராமர் கோயில்களில் ராமருக்கு பட்டாபிஷேகம், ராமர் திருமணம் என்று கோலாகலமாக திருவிழாக்கள் கொண்டாடப்படும். ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் கோவில்களில் கூட்டம் போடுவதற்கு அனுமதி கிடையாது. கோவிலுக்கு சென்று எல்லோராலும் ராமரை தரிசனம் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.

- Advertisement -

வீட்டிலேயே ராமநவமி பண்டிகையை எப்படி கொண்டாடுவது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். எந்த ஒரு பண்டிகையை நம் வீட்டில் கொண்டாட வேண்டும் என்றாலும் முதலில் வீட்டையும் பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதிகாலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, உங்களுடைய வீட்டில் ராமரின் பட்டாபிஷேக படம் இருந்தால் அதை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அனுமனின் படத்தை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எதுவுமே இல்லை என்றால் பெருமாளின் படத்திற்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து வாசனை மிகுந்த பூக்களைச் சூட்டி பூஜைக்கு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

perumal-1

பூஜை அறையை அலங்காரம் செய்து முடித்துவிட்டு ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, ராமருக்கு பிடித்த பால் பாயாசத்தை ராமநவமி அன்று நிவேதனமாக செய்து வைக்க வேண்டும். கட்டாயம் ஒரு டம்ளரில் பானகம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை மனதார ராமபிரானிடம் சொல்லி ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். 108 முறைக்கும் மேல் எத்தனை முறை உச்சரித்தாலும் தவறு கிடையாது. வெறும் மூன்று முறை உச்சரித்தாலும் தவறில்லை.

- Advertisement -

இந்த ராம நவமி பூஜையை காலை 6.00 மணியிலிருந்து 8.00 மணிக்குள் செய்துவிட்டு அதன் பின்பு உபவாசத்தை தொடங்கலாம். அப்படி காலை நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் காலையிலிருந்து உபவாசம் இருந்து மாலை 5.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் இந்த பூஜையை செய்து அதன் பின்பு விரதத்தை நிறைவு செய்துகொள்ள வேண்டும். ராம நவமி தினத்தன்று உணவு சாப்பிடாமல் உபவாசம் இருந்து விரதம் இருக்க முடியும் என்று நினைப்பவர்கள் தாராளமாக விரதத்தை மேற்கொள்ளலாம்.

aval-payasam

உடல்நிலை சரியில்லாதவர்கள் பால் பழம் சாப்பிட்டும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். மாலை உங்கள் வீட்டில் ராமருக்கு பூஜை செய்து வழிபாட்டை முடித்து விட்டு, அதன் பின்பு இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை முதலில் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

paanagam

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் அடுத்தவர்களுடைய மனதை எப்போதுமே, எந்த சூழ்நிலையிலும் புண்படுத்தாமல் தான் நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கை முழுவதிலும் இதை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. நாளை ராமநவமி அன்று ஒருநாள் மட்டுமாவது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், அடுத்தவர்களது மனதை புண்படுத்தாமல் உங்கள் மனதிற்குள் ‘ராமா ராமா’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். செய்த பாவங்கள் நீங்கும். நினைத்த காரியம் உடனே நடக்கும்.

hanuman

குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் காரியத்தடை ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபட்டுக் கொண்டிருக்கின்றது என்பவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் பட்சத்தில், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஒரு மனிதருக்கு நல்ல வாழ்க்கை என்பது அவருடைய எண்ணத்தைப் பொறுத்தது. எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லுவார்கள் அல்வா அது முற்றிலும் உண்மை தான். அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்று அந்த ராமபிரானை வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -