நினைத்த காரியம் நிறைவேற ராமர் வழிபாடு

ramar3
- Advertisement -

ஜனவரி மாசம் 22ஆம் தேதி அயோத்தியில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று மாலை நாடு முழுவதும் கோலாகலமாக இந்த நாள் கொண்டாடப்பட்டது. நிறைய பேர் தங்களுடைய வீட்டின் முன்பாக அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ராமர் பிரதிஷ்டை நாளை ஒரு திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள். அந்த ராமபிரானின் ஆசீர்வாதம் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ராம மந்திரம் இன்று அளவிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அயோத்தியில் ராமரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் இன்னும் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இந்த 48 நாட்களுக்குள் ஒருமுறை அந்த ராமபிரானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை நம்மில் பல பேருக்கும் இருக்கிறது. ஆனால் எல்லோராலும் அயோத்தி சென்று ராமபிரானை தரிசனம் செய்ய முடியாது.

- Advertisement -

ஆனால் நம் கஷ்டங்கள் தீர, நம் வீட்டில் இருந்தபடியே ராமபிரானை நினைத்து இந்த ஒரு பொருளை உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்தால் அயோத்தி ராமரின் அருளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும். அது என்ன பொருள், அதை வீட்டில் வைத்து எப்படி பூஜை செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

ராமர் சக்கரம்

அந்த காலத்திலேயே பஞ்சாகத்தில் இந்த ராமர் சக்கரமானது சில சூட்சம எண்கள் உடன் வரையப்பட்டது. இந்த எங்களுக்கு கீழே அந்த எண்களுக்கு உண்டான பலனும் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது மனதில் நினைத்த காரியம் நடக்குமா நடக்காதா என்பதை தெரிந்து கொள்ள ஆருடம் மூலம் சில கணிப்புகள் நடத்தப்படும். கட்டத்தில் சில எண்கள் இருக்கிறது அல்லவா.

- Advertisement -

உங்கள் மனதில் ஏதோ ஒரு விஷயத்தில் குழப்பம் இருந்தால் குழப்பத்தில் முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தால், அந்த விஷயம் நமக்கு நல்லதை கொடுக்குமா, தீமையை கொடுக்குமா, இந்த முயற்சியை எடுக்கலாமா வேண்டாமா, என்ற இப்படிப்பட்ட குழப்பம் எல்லாம் இருந்தால் அதற்கான விடையை தெரிந்து கொள்ள இந்த ராமர் கட்டத்தை நாம் பயன்படுத்தலாம்.

மனதில் இருக்கும் குழப்பத்திற்கு தெளிவு பிறக்க, கண்களை மூடிக்கொண்டு விரல்களால் அந்த ராமர் கட்டத்தில் இருக்கும் நம்பரை தொடுவார்கள். நீங்கள் எந்த நம்பரை தொட்டீர்களோ, அந்த எண்ணுக்கு உண்டான பலனை படித்துப் பார்க்க வேண்டும். அதில் என்ன பலன் வந்திருக்கிறதோ, அதை வைத்து உங்களுடைய குழப்பத்திற்கு நீங்களே ஒரு தீர்வினை முடிவு செய்து கொள்ளலாம். அந்த தீர்வு, அந்த குறிப்பிட்ட நபருக்கு சாதகமான தீர்வாகவும் இருக்கும் என்பது அந்த காலத்தில் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு பெயர் தான் ஆருடம்.

- Advertisement -

இந்த ராமர் கட்டத்துக்கு பின்னால் சில பல ஜோதிட சூட்சமங்களும், ஆன்மீக சூட்சமங்களும் மறைந்திருக்கிறது. அதையெல்லாம் நாம் இப்போது முழுசாக தெரிந்து கொள்ள போவதில்லை. ஆனால், இதே போல ஒரு ராமர் சக்கரம் தான் நமக்கு தேவை. இந்த ராமர் சக்கரத்தை தான் நம் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். இது எந்த கடையிலும் விற்காது.

ஒரு அட்டையில் வெள்ளை காகிதத்தை ஒட்டி வைத்து இதே போல கோடு வரைந்து, இதே போல எண்களை அதன் உள்ளே எழுதி, அந்தக் கட்டத்துக்கு நாலா பக்கமும் நடுவிலும் மஞ்சள் குங்குமம் வைத்து, இந்த ராமர் சக்கரத்தை பூஜை அறையில் வையுங்கள். வெறும் கட்டங்கள் தான் நீங்கள் வரைய வேண்டும், அந்த எண்களை எழுத வேண்டும் தவிர, அந்த எண்களுக்கு உண்டான பலன்களை எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ‘ஜெயராம் ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற ராமரின் நாமத்தை சொல்லி இந்த சக்கரத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வருவதன் மூலம் உங்களுடைய இன்னல்கள் தீரும். மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு உண்டான ஒரு தீர்வினை ராமபிரான் காட்டிக் கொடுப்பார் என்பது ஒரு நம்பிக்கையாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு கோரிக்கை நிறைவேற இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

குடும்ப கஷ்டம் தீர, கடன் பிரச்சனையில் இருந்து வெளிவர, நல்ல வேலை கிடைக்க, வீட்டில் யாருக்கேனும் திருமணம் நடக்காமல் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடக்க, தொழிலில் சிறந்து விளங்க, இப்படி உங்களுடைய குடும்ப நன்மைக்காக இந்த வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். இந்த ராமர் சக்கரத்தை உங்கள் பூஜை அறையில் வைத்த ஒரு சில நாட்களிலேயே நீங்கள் எதிர்பாராத நல்லது உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆகவே நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவடைந்த உடன் அந்த ராமர் சக்கரத்தை கொண்டு போய் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட்டு வரலாம். அப்படி இல்லை என்றால் அந்த பேப்பரை மட்டும் எடுத்து அந்த பெருமாள் கோவில் உண்டியலில் செலுத்தி விட்டு வரவும்.

இதையும் படிக்கலாமே: ஏழு தலைமுறை பாவம் நீங்க சிவ மந்திரம்.

வெறும் பேப்பரை உண்டியலில் போடக்கூடாது. உங்கள் பிரார்த்தனை நிறைவேறியதற்காக ஒரு 11 ரூபாயையாவது அந்த ராமர் சக்கர பேப்பருக்கு உள்ளே வைத்து மடித்து உண்டியலில் செலுத்துங்கள். ராமரின் அருள் ஆசி உங்களுக்கு நிரந்தரமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -