ஏழு தலைமுறை பாவம் நீங்க சிவ மந்திரம்.

sivan8
- Advertisement -

ஒரு பழமையான சிவன் கோவில்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது எனும்போதே அது நம்முடைய பாவத்தை தொலைப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக நாம் கருதப்பட வேண்டும். சில பேர் சிவன் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களால் போகக்கூடிய சூழ்நிலையே இருக்காது. இன்னைக்கு போகலாம், நாளைக்கு போகலாம் என்று தள்ளி தள்ளிப் போகும்.

இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் செய்த பாவத்தை கழிக்க இன்னும் நேரம் வரவில்லை என்று தான் அர்த்தம். உங்களுக்கு ஏதாவது ஒரு சிவன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் இந்த இரண்டு வரி மந்திரத்தை அந்த கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து சொல்லிடுங்க. உங்கள் குடும்பத்து ஏழு தலைமுறை பாவங்களும் தீரும்.

- Advertisement -

சும்மா இல்லைங்க, அதாவது நாம இப்ப கணவன் மனைவியா ஒரு குடும்பத்தில் இருக்கோம். நம்முடைய அம்மா அப்பா, நம்முடைய வாழ்க்கைத் துணையின் அம்மா அப்பா, அவர்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் என்று இப்படி 267 தம்பதிகள் ஒட்டுமொத்தமாக அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தை போக்கக்கூடிய சக்தி இந்த இரண்டு வரி மந்திரத்திற்கு உண்டு.

அது என்ன மந்திரம். சிவன் கோவில்களில் அமர்ந்து அதை எப்படி உச்சரிக்கனும். ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். நம்ம வீட்டு பக்கத்தில் கூட இப்படிப்பட்ட சிவன் கோவில்கள் இருக்கும். பராமரிப்பே இருக்காது. உங்களால் முடிந்தால் அந்த சிவன் கோவிலை பராமரிக்க தேவையான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

- Advertisement -

ஊரில் இருக்கும் 10 பேரை ஒன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஊர் மக்களிடம் எல்லாம் நூறு ரூபாய் வசூல் செய்தால் கூட போதும். அந்த பணத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாக போட்டு அந்த கோவிலை பராமரிப்பு செய்து தினமும் விளக்கு ஏற்ற ஒரு வழி உங்களின் மூலம் ஏற்பட்டால், உங்கள் குடும்பம் பல தலைமுறைக்கு நன்றாக வாழும்.

இப்படிப்பட்ட பழமையான கோவில்களுக்கு வந்து வேண்டுதல் வைக்கும் பக்தர்களின் பிரார்த்தனை, உடனை பலிக்கும். அந்த புண்ணியம் ஒட்டுமொத்தமாக உங்கள் குடும்பத்தை சேரும். இதுபோல இருக்கக்கூடிய கோவிலுக்கு நீங்களும் செல்லுங்கள். கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து சிவபெருமானை மனதார நினைத்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

இது பொதுப்படையான மந்திரம். அடுத்தபடியாக பாவத்தை போக்கும் இந்த மந்திரத்தை 108 முறை மனதார உச்சரிக்கணும். மனது, சிந்தனை முழுக்க முழுக்க உங்களுக்கு சிவன் பற்றின நினைப்பு தான் இருக்கணும். வேறு எந்த நினைப்பும் இருக்கக் கூடாது.

பாவம் தீர்க்கும் சிவ மந்திரம்

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா

வழக்கம்போல சிவன் கோவில்களுக்கு சென்று சிவபெருமான், நந்தீஸ்வரர், கோவிலில் பிரகாரத்தை சுற்றி இருக்கும் மற்ற தெய்வங்களை எல்லாம் வழிபாடு செய்து விட்டு கோவிலில் அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி இந்த இரண்டு வரி மந்திரத்தை உச்சரிக்கவும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நடக்க வில்வ இலை வழிபாடு

செய்த பாவங்கள் நீங்கும் சிவபெருமானின் பாதங்களில் இடம் கிடைக்கும் வாழ்க்கையில் தீரா துன்பம் தீரும். சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -