உங்கள் பர்சில் சாமி படம், கழுத்தில் டாலர் உள்ளதா? நீங்கள் இந்த தெய்வத்தின் படத்தை மட்டும் வைத்திருந்தால் போதும். உங்கள் பக்கம் அதிஷ்ட காத்து வீச துவங்கும்.

purse
- Advertisement -

எந்த கோவிலுக்கு சென்றாலும் அங்கு விற்கப்படும் டாலர்களையும், புகைப்படங்களையும் வாங்கி வைத்துக் கொள்ளும் பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. அதே போல பல தெய்வங்களின் புகைப்படங்களை பர்சில் வைத்துக்கொள்ளும் வழக்கமும் சிலருக்கு உண்டு. ஆனால் உண்மை யாதெனில் நாம் நமது ராசிக்குரிய தெய்வத்தின் டாலரையோ அல்லது புகைப்படத்தையோ வைத்துக்கொண்டாலே போதாது.

ஒருவரின் ராசியை பொறுத்து அவர்களின் இஷ்ட தெய்வங்கள் யார் என்றும், அவர்கள் யாரிடம் வேண்டிக் கொண்டால் அவர்களுடைய வேண்டுதல்கள் நடக்கும் என்றும் இருக்கிறது. அதேபோல்தான் எந்த கடவுளின் டாலரை அணிந்தால் நன்மைகள் உண்டாகும் என்றும் எந்த கடவுளின் புகைப்படத்தை பர்சில் வைத்துக் கொண்டால் நன்மைகள் கிடைக்கும் என்றும் சில குறிப்புகள் இருக்கின்றன. இப்பொழுது ஒவ்வொரு ராசிக்கும் அவர்கள் அணிய வேண்டிய கடவுளின் டாலர் மற்றும் புகைப்படத்தை பார்ப்போம்.

- Advertisement -

மேஷம் – விஷ்ணு பகவான். ரிஷபம் – குரு பகவான், முருகப்பெருமான் மற்றும் மகாலட்சுமி தாயார். மிதுனம் – முருகப்பெருமான் மற்றும் ஓம் என்னும் எழுத்திற்கு நடுவில் வேல் போட்டிருப்பது. கடகம் – மகாலட்சுமி தாயார், வெங்கடாசலபதி மற்றும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கும் ஓம். சிம்மம் – சரஸ்வதி தேவி, ஓம், காமாட்சியம்மன், ஓம் சக்தி மற்றும் மகாவிஷ்ணு.

கன்னி – வெங்கடாசலபதி, மகாவிஷ்ணு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், கிருஷ்ணர் மற்றும் ராமர். துலாம் – நரசிம்மர், சூரிய பகவான், சோமாஸ்கந்தர் மற்றும் சிவன். விருச்சிகம் – மகாவிஷ்ணு, காமாட்சி அம்மன், காளிகாம்பாள் மற்றும் திரிசூலம். தனுசு – மகாலட்சுமி, ஹனுமன், திரிசூலம் மற்றும் ஓம். மகரம் – முருகப்பெருமான், வேல், திரிசூலம் மற்றும் ஸ்வஸ்திக் சின்னம். கும்பம் – குருபகவான், முருகப்பெருமான், குபேரர் மற்றும் தம்பதி சமேத முருகர். மீனம் – மகாலட்சுமி தாயார், முருகப்பெருமான், மகாவிஷ்ணு மற்றும் அம்பிகை.

மேற்கூறிய தெய்வங்களின் புகைப்படத்தையோ அல்லது டாலரையோ அந்தந்த ராசிக்காரர்கள் உபயோகிப்பதன் மூலம் அவர்களுக்கு பல மாற்றங்கள் ஏற்பட்டு, சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முழு மனதோடு, முழு நம்பிக்கையோடு செய்தால் கண்டிப்பான முறையில் வெற்றிகள் கிட்டும்.

- Advertisement -