நாளை விநாயகர் சதுர்த்தி. உங்கள் ராசிப்படி, நீங்கள் இந்த நிறத்தில் விநாயகரை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து பாருங்களேன். துரதிர்ஷ்டசாலிகள் கூட, அதிர்ஷ்டசாலிகளாக மாறி விடுவார்கள்.

pillaiyar1
- Advertisement -

சில பேருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. எதைத் தொட்டாலும் தோல்வி. புதியதாக எந்த முயற்சிகளை எடுத்தாலும் அது ஏதாவது ஒரு காரணத்தினால் தடைபட்டுக் கொண்டே வரும். அதிர்ஷ்டம் என்பதே இருக்காது. எவ்வளவுதான் உழைத்தாலும் வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து ஒரு அடிகூட எடுத்து மேலே வைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள், இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு இந்த முறையில் விநாயகரை வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நல்ல காலம் கூடிய விரைவிலேயே பிறந்துவிடும்.

manjal-pillaiyar3

வருடந்தோறும் வரக்கூடிய விநாயகர் சதுர்த்திக்கு நம்முடைய வீட்டில் மண் பிள்ளையாரை வாங்கி வைத்து வழிபடும் பழக்கத்தை வைத்திருப்போம். இந்த வருடம் நீங்கள் வாங்கக்கூடிய மண் பிள்ளையாரோடு சேர்த்து, உங்கள் ராசிப்படி கூடவே ஒரு சிறிய வர்ண பிள்ளையாரை வாங்கிக் கொள்ளுங்கள். பெயிண்ட் அடித்து சிறிய பிள்ளையார் விற்கும் அல்லவா. அந்த பிள்ளையார்.

- Advertisement -

இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு நீங்கள் இரண்டு பிள்ளையாரை வைத்து வழிபாடு செய்யப் போகிறீர்கள். களிமண்ணால் செய்து இருக்கும் விநாயகரை, விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்து முடித்துவிட்டு 3, 5 அல்லது 9 நாட்கள் கழித்து நீர் நிலைகளில் கொண்டு போய் கரைத்து விடுங்கள். கூடவே ஒரு துணை பிள்ளையாரை, அதாவது வர்ணம் பூசிய சின்ன பிள்ளையாரை வாங்கி வைத்திருக்கிறீர்கள் அல்லவா, அதை அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தினம்தோறும் வழிபாடு செய்து வர வேண்டும். உங்கள் ராசிப்படி நீங்கள் எந்த நிறத்தில் வர்ணம் பூசி இருக்கும் விநாயகரை வாங்கவேண்டும் தெரிந்துகொள்வோமா.

pillaiyar6

நீங்கள் மேஷ ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்களாக இருந்தால் உங்கள் ராசிப்படி சிவப்பு நிற வர்ணம் பூசி இருக்கும் விநாயகரை வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷப ராசிக்காரர்கள், துலாம் ராசிக்காரர்கள் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசி இருக்கும் விநாயகரை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

pillaiyar3

நீங்கள் மிதுன ராசியில் அல்லது கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஆக இருந்தால் பச்சை நிறத்தில் வர்ணம் பூசி இருக்கும் விநாயகரை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

pillaiyar4

நீங்கள் கடக ராசிக்காரர்கள் ஆக இருந்தால் சந்தன நிறத்தில் வர்ணம் பூசி இருக்கும் பிள்ளையாரை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

pillaiyar2

நீங்கள் சிம்ம ராசிக்காரர்களாக இருந்தால் வெறும் மண் பிள்ளையாரை வாங்கி வைத்து, வர்ணம் பூசாமல் இருக்கும் மண் பிள்ளையாரை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். (சின்னதா மண் பிள்ளையாரைப் பார்த்து வாங்கிக்கோங்க.)

pillaiyar5

தனுசு அல்லது மீனம் ராசிக்காரர்கள் ஆக நீங்கள் இருந்தால் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசிய பிள்ளையாரை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

மகர ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்கள் ஆக நீங்கள் இருந்தால் நீல நிறத்தில் வர்ணம் பூசி இருக்கும் விநாயகரை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

pillaiyar-manai

விநாயகர் சதுர்த்தி அன்று உங்கள் ராசிப்படி நீங்கள் எந்த வண்ணத்தில் விநாயகரை வாங்க வேண்டுமோ, அந்த வண்ணத்தில் வாங்கி பூஜை அறையில் வைத்து தினம்தோறும் வழிபாடு செய்து வாருங்கள். எண்ணி ஒரே வருடத்தில் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நம்ப முடியாத அதிசயங்கள் நடக்கும். ஒரு வருடம் கழித்து நீங்கள் வாங்கி வைத்திருக்கும் இந்த வார்ணப் பிள்ளையாரை கொண்டுபோய் ஓடுகின்ற நீரில் விட்டு விடலாம். தவறு ஏதும் கிடையாது. அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு கோயிலின் மரத்தடியில் கொண்டு போய் வைத்து விடுங்கள்.

manjal-pillaiyar1

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து, இந்த வர்ணப் பிள்ளையாருக்கு முன்பு ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைக்கவேண்டும். இரண்டு உலர் திராட்சைகளை பிரசாதமாக வையுங்கள். மனதார உங்கள் பிரார்த்தனையை விநாயகரிடம் சொல்லி விநாயகரின் முன்பு 3 தோப்புக்கரணம், 3 பிள்ளையார் கொட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு விநாயகர் முன்பு வைத்த நிவேதனத்தை எடுத்து நீங்கள் சாப்பிட்டு விடுங்கள். அதன்பின்பு உங்களுடைய தினசரி வேலையைத் தொடங்கலாம்.

arasa-mara-pillaiyar

நீங்கள் என்ன நினைத்து இந்த வருடம் இந்த பிள்ளையாரை வாங்கி வைக்கிறீர்களோ, அது அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்திக்குள் நிச்சயமாக நிறைவேறி இருக்கும் என்ற நம்பிக்கையோடு பிள்ளையாரை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -