ஜப்பான் பொண்ணுங்க அழகா இருக்க நம்ம ஊரு பயறு தான் காரணமா? உங்களையும் சிவப்பாக மாற்ற இந்த சிவப்பு காராமணி போதும்.

face23
- Advertisement -

கொரியன் ஜப்பானீஸ் இவர்களெல்லாம் தங்களுடைய சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள அரிசியை பயன்படுத்துவார்கள் என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியும். ஆனால் அவர்கள் தங்களுடைய சரும அழகிற்கு இந்த சிவப்பு பயிரையும் பயன்படுத்துகிறார்கள். அதாவது, நம்முடைய நாட்டில் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் இந்த சிவப்பு காராமணியைத் தான் இன்று அழகு குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகின்றோம். இதை ஆங்கிலத்தில் red beans என்று சொல்கிறார்கள். தமிழில் சிவப்பு காராமணி. தட்டைப்பயிறு என்று சிலர் சொல்கிறார்கள். உங்க ஊர்ல இதுக்கு என்ன பெயர் இருந்தாலும் பரவாயில்லை. அதை நீங்கள் மளிகை கடையில் இருந்து வாங்கி அழகு குறிப்புக்கு பயன்படுத்தி பாருங்கள்.

பொலிவிழந்த சருமம் உடனடியாக பொலிவைப் பெற, முகத்தில் இருக்கும் அழுக்கு முற்றிலமாக நீங்க, சின்ன சின்ன துவாரங்களில் இருக்கும் எண்ணெய் பசையை முழுமையாக நீக்கி எடுக்க, சரும நிறத்தை அதிகரிக்க இப்படி பல வகைகளில் நம்முடைய முக அழகிற்கு இந்த குறிப்பு பயன்படும்.

- Advertisement -

இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள் இரண்டு. உங்களுடைய வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி, சிவப்பு காராமணி, அவ்வளவு தான். இந்த இரண்டு பொருளையும் சம அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிவப்பு காராமணி அரிசி இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு முடிந்தவரை நைசாக பொடித்துக் கொள்ளுங்கள். பொடித்த இந்த பொடியை ஒரு சல்லடையில் போட்டு சலிக்க வேண்டும். கொரகொரப்பாக இருக்கக்கூடிய அந்த துகள்கள் நமக்கு தேவைப்படாது.‌ நைசாக இருக்கும் பொடியை மட்டும் ஒரு கண்டெய்னரில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், ஒரு மாதம் வரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

நான் அரைத்து வைத்திருக்கும் இந்த பொடியில் இருந்து தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். இதில் பால், தயிர், ரோஸ் வாட்டர், தண்ணீர், இப்படி உங்களுடைய சருமத்திற்கு எது செட் ஆகுமோ அதை ஊற்றி கலந்து தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் போட்டு அப்படியே காய விட்டு விடுங்கள். 20 நிமிடங்கள் போகட்டும். பிறகு குளிர்ந்த நீரில் லேசாக மசாஜ் செய்து கழுவி விட்டால் உங்களுடைய முகத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வர, உங்களுடைய சரும பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, முகம் பளிங்குக் கல் போல ஜொலிப்பதை உணர முடியும். வெளிச்சம் இல்லாமலேயே உங்களுடைய முகம் ஜொலிக்கும் என்றால் பாருங்கள்.

- Advertisement -