வீட்டில் இருக்கும் நெகட்டிவ் வைப்ரேஷன்ஸ் நீங்கி பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க வரவேற்பறையில் இதை செய்து வச்சா போதுமே!

hall-kirambu-murugan
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும் என்று கூறி விட முடியாது. சிலருடைய வீட்டுக்கு போனாலே அங்கு அமைதியும், தெய்வீக சக்தியையும் உணர முடியும். ஆனால் இன்னும் சிலருடைய வீட்டிற்கு சென்றால் ஒருவிதமான எதிர்மறை எனர்ஜி நமக்கு வரக்கூடும். இந்த எதிர்மறை எனர்ஜி வருவதற்கு காரணங்கள் என்ன? வீட்டில் இருக்கும் நெகட்டிவ் வைப்ரேஷன்ஸ் நீங்கி, பாசிட்டிவ் வைப்ரேஷன் உருவாக வரவேற்பறையில் செய்ய வேண்டியது என்ன? என்பது போன்ற ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நெகட்டிவ் வைப்ரேஷன்ஸ் என்பது ஒரு வீட்டில் நாம் நுழையும் பொழுதே நமக்கு தெரிந்து விடுகிறது. ஒரு விதமான கெட்ட வாசனை அந்த வீட்டில் வீசும். அதனால் தான் எப்பொழுதும் வீட்டில் பூஜைகளை செய்ய சொல்லுவது. வீட்டில் அடிக்கடி பூஜை செய்து கொண்டிருந்தால், அங்கு நல்ல மணம் தான் வீசும். எப்பேர்ப்பட்ட கெட்ட வாசத்தையும் நீக்கக்கூடிய சக்தி பூஜை அறையில் தான் ஆரம்பம் ஆகிறது.

- Advertisement -

மேலும் வேலைக்கு செல்பவர்கள் அல்லது வெளியில் சென்று விட்டு வீட்டில் வந்தாலே நிம்மதி இல்லாமல் சிலர் இருப்பார்கள். இதுபோல வீட்டிற்கு போனதும் நிம்மதி இழப்பதற்கு காரணம், அங்கு இருக்கும் நெகடிவ் வைப்ரேஷன்ஸ் தான். இந்த நெகட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் எதிர்மறை ஆற்றல் வீட்டில் இருந்து நீங்கி விட்டால் எவ்வளவு கஷ்டங்கள் அல்லது எவ்வளவு பிரச்சனைகள் உங்களை சுற்றி இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை நேர்மறை வைப்ரேஷன்ஸ் உங்களுக்கு கொடுக்கும்.

மனிதனாக பிறந்து விட்டாலே ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்வது தான் நம்முடைய வாழ்க்கை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கு உரிய சக்தியை நேர்மறை வைப்ரேஷன்ஸ் நமக்கு கொடுக்கிறது. அப்படி அல்லாமல் சிறு சிறு விஷயங்களுக்கு கூட சோர்ந்து போகக் கூடியவர்கள் மற்றும் எதையும் எதிர்கொள்ள துணிவு இல்லாதவர்கள் பனி போல் இருக்கும் பிரச்சனையைக் கூட மலை போல் பார்ப்பவர்கள், எதிர்மறை ஆற்றல்களால் பீடிக்கப்பட்டு இருப்பார்கள். இவர்கள் அவர்களுடைய வரவேற்பறையில் இதை செய்து வைத்தால் போதும் எளிதாக இதிலிருந்து விடுபடலாம்.

- Advertisement -

ஒரு பித்தளை, செம்பு அல்லது வெள்ளி கிண்ணம் அது கூட இல்லை என்றால் சில்வர் கிண்ணத்தில் கூட இதை செய்து வையுங்கள். நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஏதாவது ஒரு பாத்திரத்தில் பன்னீரை பாதி அளவிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள். சுத்தமான பன்னீரை ஊற்றிய பிறகு அதில் நான்கைந்து ஏலக்காய், நான்கைந்து கிராம்புகளை போட்டுக் கொள்ளுங்கள். சிறிதளவு பச்சை கற்பூரத்தை நுணுக்கி தூவி விடுங்கள். இதை அப்படியே வீட்டின் வரவேற்பு அறையில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். யார் கண்களுக்கும் இது தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இதிலிருந்து வரக்கூடிய ஒரு விதமான வாசம் உங்களுடைய எதிர்மறை வைப்ரேஷ்களை வீட்டிலிருந்து நீக்கிவிடும். உங்கள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கும், வருமானப் பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும்? உங்களுடைய பிரச்சனையை நீங்களே எவ்வாறு தீர்த்துக் கொள்வது? என்கிற ஒரு உற்சாகமான, சுறுசுறுப்பான மனநிலையை கொடுக்கக்கூடிய இந்த ஒரு வைப்ரேஷன் உண்டாக இதை செய்து வைத்து தான் பாருங்களேன்.

- Advertisement -