உருளைக்கிழங்கு முட்டை வைத்து செய்யும் இந்த சுவையான ஸ்நேக் ரெசிபியை ஒரு முறை செய்தால் போதும். மீண்டும் எப்போ செய்வீங்க? என்று உங்கள் குழந்தைகள் தொல்லை செய்யும் அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும்

egg-balls
- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை என்றாலே குழந்தைகள் மிகவும் குஷியாக இருப்பார்கள். பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையன்று குழந்தைகள் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட ஆசைப்படுவார்கள். அவ்வாறு விளையாடி முடித்து களைத்து வீட்டிற்கு வரும்பொழுது சுவையாக ஏதேனும் சாப்பிட இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். இது போன்ற நேரங்களில் முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து செய்யும் இந்த சுவையான ரெசிபியை வீட்டில் செய்து வைத்திருந்தீர்கள் என்றால் போதும். குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக சாப்பிட்டு மகிழ்வார்கள். இந்த க்ரன்ச்சியான முட்டை ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

children-snacks

தேவையான பொருட்கள்:
முட்டை – 5,உருளைக்கிழங்கு – அரை கிலோ, எண்ணெய் – கால் லிட்டர், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை ஸ்பூன், பிரட் – 5 துண்டுகள், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
உருளைக்கிழங்கை நன்றாக கழுவிக் கொண்டு குக்கரில் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை தோல் உரித்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் 4 முட்டைகளையும் நன்றாக வேகவைத்து இரண்டாக அரிந்து கொள்ள வேண்டும்.

potatto

பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் பிரெட் துண்டுகளின் சிவந்திருக்கும் ஓரங்களை நீக்கிவிட்டு, மீதமிருக்கும் பிரட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளித்து, அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் உப்பு மற்றும் கொத்தமல்லி தழை தூவி ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

onion

அதன்பின்பு மசித்து வைத்த உருளைக்கிழங்கில் வதக்கிய வெங்காய கலவையை சேர்த்து நன்றாக பிசைந்து விட வேண்டும். பின்னர் பிசைந்த உருளைக்கிழங்கிலிருந்து சிறிதளவு எடுத்து அதனுள் அறிந்து வைத்துள்ள பாதி முட்டையை வைத்து நன்றாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதாவது முட்டையின் மேல் புறம் முழுவதும் இந்த உருளைக்கிழங்கு கலவையினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

உருண்டைகளாக பிடித்த பின்னர் அதனை கலந்து வைத்துள்ள முட்டையில் தோய்த்து ஒரு முறை பிரட் கிராம்பில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்து முட்டைகளையும் பிரட்டி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பொரித்து எடுக்க வேண்டும்.

gulab-jamun-fry

இவ்வாறு அனைத்து முட்டைகளையும் பொரித்து எடுத்தப் பின்னர் அவற்றை சுட சுட உங்கள் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் போதும். மிகவும் சுவையான இந்த உருளைக்கிழங்கு முட்டை ரெசிபியை விருப்பமாகவும், மகிழ்வாகவும் சாப்பிடுவார்கள்.

- Advertisement -