வடித்த சாதம் இருந்தால் போதும். உங்களுடைய முடியை பார்லருக்கு போகாமலே கெரட்டின் செய்து கொள்ளலாம்.

hair6
- Advertisement -

இப்போதெல்லாம் முடியை சில்க்கியாக, சிக்கு இல்லாமல் சைனிங்காக மாற்றுவதற்கு பார்லருக்கு சென்று கெரட்டின் ட்ரீட்மென்ட் செய்து கொள்கிறார்கள். ஆனால், இதற்கு ஆகும் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். எந்தவித செலவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே முடியை சில்க்கியாக எப்படி மாற்றுவது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெறும் அழகுக்காக மட்டும் இந்த ஹேர் பேக் கிடையாது. உங்களுடைய தலைமுடியில் இருக்கக்கூடிய டேமேஜை எல்லாம் சரி செய்து முடியை அடர்த்தியாக வளரச் செய்யவும் இந்த ஹேர் பேக் பயன் உள்ளதாக இருக்கும்.

இந்த ஹேர்பேக் தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள். வடித்த சாதம் – 1 கப், அலோவேரா ஜெல் – 3 டேபிள் ஸ்பூன், தேங்காய் பால் – 1/4 கப், தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன். ஆனால் முந்தைய நாள் இரவே அரிசியை தண்ணீரில் போட்டு இரண்டு முறை நன்றாக கழுவி விட்டு, அதன் பின்பு அதில் நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலை தண்ணீரில் ஊறிய இந்த அரிசியை, ஊற வைத்த தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். அரிசியை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேக வைத்து வடித்த சாதத்தை குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வேகவைத்த சாதம் 1 கப், ஆலுவேரா ஜெல் 3 ஸ்பூன், கொஞ்சமாக தண்ணீர் விட்டு இதை நைசாக ஸ்மூத் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது இந்த ரைஸ் பேஸ்டுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்தால் கிரீமியாக ஒரு பேக் நமக்கு கிடைத்திருக்கும். இந்த பேக்கை தான் தலைக்கு அப்ளை செய்ய வேண்டும்.

இந்த பேக்கை மேலே தலைமுடிக்கு முழுமையாக அப்ளை செய்து விடுங்கள். ஹேர் பேக்கை மயிர் கால்களில் படும்படி போடுங்கள். வேர் கால்கள் பலமாகும். இந்த பேக்கை தலை முழுவதும் முடியின் நுனி மூடி வரை போட்டுவிட்டு, 1 மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். 1 மணி நேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலையை அலசிவிடுங்கள். அதன் பின்பு தலையை சிக்கு எடுக்கும்போதே வித்தியாசம் தெரியும். ஒரே முறை இந்த ஹேர் பேக்கை போடும்போதே சிக்கு இல்லாமல் உங்களுடைய முடி ஷைனிங்காக இருப்பதை உணர முடியும்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு நாள் இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வாருங்கள். பார்ப்பவர்கள் உங்களுடைய முடியை கேரட்டின் பண்ணிங்களா எப்படி இவ்வளவு அழகாக மாறியது என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு சூப்பராக பள பளன்னு உங்க முடி இருக்கும் பாத்துக்கோங்க. நிச்சயமா சொன்னா நம்ப முடியாது. இத நீங்க ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

பெரியவர்களும் இந்த பேக்கை போட்டுக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கும் இந்த பேக்கை போட்டு விடுங்கள். ரொம்பவும் சிறிய பிள்ளைகள் 13 வயதுக்கு கீழே இருக்கும் பெண் குழந்தைகள் என்றால் அவர்களுக்கு இந்த பேக்கை 30 நிமிடம் வரை தலையில் வைத்திருந்தாலே போதும். குழந்தையிலிருந்து முடி வளர்ச்சி அதிகரித்து, அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது முடி அழகாக இருக்கும். தொடர்ந்து இந்த பேக்கை பயன்படுத்தி வர உங்களுடைய முடி நிரந்தரமாக சைனிஙான லுக் கொடுக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ஒருவாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -