மண்டை தெரியும் அளவிற்கு முடி கொட்டி விட்டதா? 10 பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருளை மட்டும் இப்படி செஞ்சு பாருங்க, நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

hair-fall-rice-water
- Advertisement -

இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் உணவு முறை மாற்றம் மற்றும் மாசு, தூசு போன்ற பிரச்சனைகளால் தலைமுடி உதிர்வு என்பது வேகமாக நிகழ்ந்து வருகிறது. இப்படி தலைமுடி வேகமாக உதிர்ந்து நாளடைவில் அந்த இடத்தில் மீண்டும் முடி வளராமல் அப்படியே இருந்து விட்டால் அங்கு சொட்டை விழ ஆரம்பித்து விடும். பிறகு அதிலிருந்து மீள்வது என்பது கடினமாகிவிடும். எனவே முடி உதிரும் பிரச்சனை இருப்பவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள், நிச்சயம் விரைவாகவே இழந்த முடியை மீட்டு விடலாம். தலைமுடி பிரச்சனையை எப்படி சரி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக ஒரு நாளைக்கு சராசரியாக எல்லோருக்குமே ஓரளவிற்கு முடி கொட்டுவது என்பது இயல்பானது தான், எனினும் இயல்புக்கு மீறி நிறையவே கொத்துக்கொத்தாக வேர்க்கால்களில் இருந்து முடி கொட்டுகிறது என்றால் அல்லது நீங்கள் தலை முடியை வாரும் பொழுது சீப்பில் அதிக அளவிற்கு முடி ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது என்றால் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வேரிலிருந்து உதிரும் முடிகளை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

- Advertisement -

எப்போதும் ஈரத் தலையுடன் இருக்கும் பொழுது தலைமுடியை வாரக்கூடாது, இதனால் தலைமுடியின் வலிமை குறைந்து விட வாய்ப்புகள் உண்டு. ஈரத் தலையுடன் கட்டிக் கொண்டு அப்படியே வேலைகளை செய்யக்கூடாது. நன்கு காய வைத்த பின்பு தான் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். காய வைத்த உடன் சிடுக்குகளை எடுத்து இறுக்கமாக பின்னிக் கொள்ள வேண்டும், தலைமுடியை காற்றில் நீண்ட நேரம் அலைபாய விடக்கூடாது.

இப்படி உதிரும் தலை முடி பிரச்சனைக்கு நீங்கள் தினமும் சாப்பாடு செய்யும் பொழுது அரிசியை ஊற வைப்பீர்கள் அல்லவா? ஓரிரு முறை நன்கு அரிசியை கழுவிய பின்பு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து அந்த அரிசியை நீங்கள் சாப்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமிருக்கும் அந்த அரிசி கழுவிய தண்ணீரை ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடைத்து வைத்த தண்ணீரை சுமார் இருபத்தி நான்கு மணி நேரம் அப்படியே புளிக்க வைத்து விடுங்கள்.

- Advertisement -

அரிசி கழுவிய தண்ணீர் 24 மணி நேரம் கழித்து நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து இருக்கும். இந்த பாக்டீரியாக்கள் முடியின் வேர்க்கால்களை தூண்ட செய்து சொட்டை தலையிலும் முடியை வளர வைக்க கூடிய சக்தியைப் பெறுகின்றது. ஏற்கனவே சொட்டையாக இருக்கும் தலையில் இதனைப் பயன்படுத்துவதில் பிரயோசனமில்லை ஆனால் தலைமுடி அதிகமாக உதிர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் இது போல ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் பயன்படுத்துவதன் மூலம் நிச்சயம் நல்லதொரு மாற்றத்தை காணலாம்.

2 ஸ்பூன் அரிசி கழுவிய இந்த தண்ணீரையும், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். இரண்டையும் கலந்து வேர் கால்களில் படும்படி மசாஜ் செய்த பின்பு 5 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். பின்னர் சாதாரணமாக ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். தொடர்ந்து இது போல வாரம் இருமுறை செய்து வாருங்கள், இழந்த முடியை எளிதாக மீட்டு விடலாம்.

- Advertisement -