அரிசி களைந்த தண்ணீரோடு இந்த 1 பொருளை மட்டும் சேர்த்து தலைக்கு போட்டு பாருங்கள். முடி வளராமல் வழுக்கையாக இருக்கும் இடத்தில் கூட முடி வளர்ச்சி எட்டிப்பார்க்கும்.

hair7
- Advertisement -

நிறைய பேருக்கு முடி நீளமாக இருக்கும். ஆனால் மண்டை ஓட்டில் முடி நெருக்கமாக வளர்ந்திருக்காது. பார்ப்பதற்கு ஆங்காங்கே சொட்டை சொட்டையாக, திட்டு திட்டாக வழுக்கை தெரியும். இப்படிப்பட்ட வழுக்கையான இடத்தில் கூட நெருக்கமாக முடி வளர வேண்டும் என்றால் சுலபமான முறையில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் தலை முடியை வளரச் செய்ய இந்த குறிப்பு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

குழந்தைகள் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் எல்லோரும் இந்த குறிப்பை பின்பற்றலாம். ஆனால் நீங்கள் கொஞ்சம் பொறுமையாக மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். இயற்கையான முறையில் இயற்கையான பொருட்களை வைத்து நாம் மேற்கொள்ளக்கூடிய எந்த ஒரு குறிப்பும் உடனடியாக ரிசல்டை தராது. ஆனால் காத்திருந்த பின்பு கிடைக்கக்கூடிய ரிசல்ட் நிரந்தரமாக இருக்கும்.

- Advertisement -

ஏதாவது ஒரு அரிசி களைந்த தண்ணீர் நமக்குத் தேவை. ரேஷன் அரிசியாக இருந்தால் கூட 2 கைப்பிடி ரேஷன் அரிசியை போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். அந்த அரிசியை களைந்து எடுக்கும் போது நமக்கு அந்த தண்ணீர் கிடைக்கும். அந்தத் தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்க வேண்டும். சின்னவெங்காயம் ஆக இருந்தாலும் சரி, பெரிய வெங்காயம் ஆக இருந்தாலும் சரி, ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அந்த தண்ணீரில் போட்டு ஒரு மூடி போட்டு, ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே ஊற வைத்து விடுங்கள்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தால் வெங்காயத்தின் சாறு அத்தனையும் அந்த அரிசி களைந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். அரிசி களைந்த தண்ணீர் நன்றாக புளித்து வந்திருக்கும். இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் 3 நாட்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். மூன்று நாட்களுக்கு மேல் இந்த தண்ணீரை நிச்சயமாக பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த தண்ணீரை உங்களுடைய தலையில் மயிர் கால்களில் படும்படி நன்றாக ஸ்ப்ரே செய்து விட்டு, உங்களுடைய இரண்டு கைகளையும் வைத்து 10 நிமிடங்கள் போல லேசாக மசாஜ் செய்து கொடுங்கள். இந்த தண்ணீர் அப்படியே நன்றாக உங்களுடைய மண்டை ஓட்டில் இறங்கட்டும். 10 நிமிடங்கள் கழித்து பிறகு தலைக்குக் குளித்து விடலாம்.

எனக்கு சளி பிடிக்காது. தலைபாரம் இல்லை என்பவர்கள் 30 நிமிடம் வரை கூட இந்த தண்ணீரை தலையில் ஊற வைக்கலாம் என்பது குறிப்பிடதக்கது. வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் இந்த தண்ணீரை தலையில் போட்டு வர நிச்சயமாக வழுக்கையாக இருக்கும் இடத்தில்கூட நெருக்க நெருக்கமாக முடி வளர்ச்சி எட்டிப்பார்க்கும் என்றால் பாருங்களேன். இப்போது வெயில் காலம் என்பதால் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பார்க்கலாம். வளரக்கூடிய முடி உடையாமல் வளரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்று மாதம் கழித்து இந்த ரெமிடியை நிறுத்தி விடுங்கள். பயனுள்ள வேறொரு குறிப்புக்கு பயணிக்கலாம்.

- Advertisement -