Cricket : ஜோடியாக அதிக ரன்கள் குவித்த சாதனையை சச்சின், சேவாக்கின் சாதனையை பின்னுக்கு தள்ளிய மற்றொரு இந்திய ஜோடி

Rohith
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் என்ற வகையில் ஜோடியாக இதுவரை இருவர் இணைந்து அதிக ரன்கள் அடித்த ஜோடி என்ற சாதனையை முன்னாள் இந்திய அணியின் வீரர்களான சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் ஜோடியாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8227ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளனர்.

sachin

இவர்களுக்கு அடுத்து இந்திய அணியின் மற்றொரு துவக்க ஜோடியான சச்சின் மற்றும் சேவாக் ஆகியோரது கூட்டணி 4387 ரன்கள் குவித்து இரண்டாமிடத்தில் இருந்தது. தற்போது இந்த சாதனையை இந்திய அணியின் ஜோடிகளான ரோஹித் மற்றும் தவான் ஆகியோரது கூட்டணி முறியடித்து உள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரியான 4வது ஒருநாள் போட்டியில் தவான் 143 ரன்களும், ரோஹித் 95 ரன்களும் குவித்தனர். இதன்மூலம் இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை ஒருநாள் போட்டிகளில் 4571 ரன்களை குவித்துள்ளனர். இவர்கள் கடந்த பலவருடங்களாக இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

rohith dhawan

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 4 ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கிறது. இதிலும் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்று தொடரில் சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் 5ஆவது ஒருநாள் போட்டி நாளை 13 ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

MS Dhoni : தனது சொந்த ஊரில் கடைசி போட்டி. தோனி ,தோனி என்று கத்திய ரசிகர்கள். – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -