அழகே உங்கள் அழகை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு பேரழகியாக மாற, 10 ரூபாய் செலவில் சூப்பர் ரோஜா பூ கிரீம் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

face2
- Advertisement -

அழகே பார்த்து பொறாமைப் படும் அளவிற்கு அவ்வளவு அழகு என்று நம்மைப் பார்த்து யாராவது ஒருவர் சொல்லிவிட்டால் போதும். நமக்கு தலைகால் புரியாது. பாராட்டிற்கு ஏதோ ஒரு வசிய தன்மை இருக்கத்தான் செய்கிறது. மனது உடனடியாக ஜில்லென மாறும். சரி உங்களை பார்த்து எல்லோரும் பேரழகி என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். ஒருமுறை பேரழகியாக மாறித்தான் பார்ப்போமே. பேரழகியாக மாறுவதற்கு நம் வீட்டிலேயே சூப்பரான ஒரு ரோஜா பூ க்ரீமை தயார் செய்யலாமே. அது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் பேரழகு தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இறைவனின் படைப்பில் எதுவுமே அழகு குறைந்தது அல்ல என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவை தொடங்கலாம். இந்த குறிப்புக்கு நமக்கு பன்னீர் ரோஜா தேவை. கடைகளில் விற்கக்கூடிய பன்னீர் ரோஜா பத்து ரூபாய்க்கு வாங்கி காம்பிலிருந்து உதித்து, தனியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு கைப்பிடி அளவு பன்னீர் ரோஜா இதழ்கள், ரோஸ் வாட்டர் 1/4 கப், அலோவேரா ஜெல் 2 டேபிள் ஸ்பூன், போட்டு விழுது போல அரைத்து இதை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வடிகட்டிய இந்த லிக்விட் உடன் விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 2 உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். கிளிசரின் – 1/2 ஸ்பூன், மீண்டும் ஆலோவேரா ஜெல் 2 ஸ்பூன், சேர்த்து இதை நன்றாக அடித்து கலக்கினால் நமக்கு ஒரு ஜெல் போல ரோஸ் கலர்ல கிரீம் கிடைத்திருக்கும். அதை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் 10 நாட்கள் கெட்டுப்போகாது.

இந்த கிரீமை நீங்கள் முகம் கைகளில் கழுத்து பகுதியில் அப்ளை செய்து கொள்ளலாம். நேரம் என்பது உங்களுடைய விருப்பம் தான். எப்போது உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கிறதோ, அப்போது ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த கிரீமை முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பேக்கை ரொம்பவும் திக்காக போட வேண்டாம். லேசாக முகத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இரவு தூங்கச் செல்லும் போது இந்த ஜெல்லை சீரம் போல பயன்படுத்தினாலும் தவறு கிடையாது. கண்ணுக்கே தெரியாத அளவுக்கு இந்த கிரீமை முகத்தில் போட்டு நன்றாக மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடலாம். இரவு அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவிக்கொள்ளலாம். 10 நாட்கள் தொடர்ந்து இந்த கிரீமை பயன்படுத்தும் போது உங்களுடைய முகத்தில் ஒரு பொலிவு உண்டாகும். அது ஒரு பேரழகை கொடுக்கும். நீங்க வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க. பிறகு உங்க வீதியில நீங்கதான் பேரழகியா இருக்கீங்க.

பின்குறிப்பு: இப்போது எல்லா மெடிக்கல் ஸ்டோரியிலும் கிளசரின் கிடைக்கிறது. அதை வாங்கி இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆலோவேரா ஜெல் கலர் சேர்க்காத வாசனை திரவியம் சேர்க்காத அலோவேரா ஜெல்லாக இருக்கட்டும்.

- Advertisement -