10 ரூபாய்க்கு பன்னீர் ரோஜா வாங்கி இப்படி ஃபேசியல் செய்து கொண்டால் போதும். உங்களுடைய முகமும் இந்த பிங்க் ரோஜா போல மாறிவிடும்.

face6
- Advertisement -

முகத்தில் இருக்கும் இரண்டு கன்னமும் பட்டு ரோஜா வண்ண இதழ் போல மாற வேண்டும் என்றால் பிங்க் நிறத்தில் இருக்கக்கூடிய கிரீமை எல்லாம் முகத்தில் பயன்படுத்தக் கூடாது. இப்படி பிங்க் கலரில் இருக்கும் பன்னீர் ரோஜாவை வாங்கிக் கொள்ளுங்கள். சிவப்பு பன்னீர் ரோஜா கிடைத்தாலும் சரிதான். நம்முடைய முகத்திற்கு அழகை இயற்கையாக கொடுக்கக்கூடிய ஒரு பூ தான் இந்த பன்னீர் ரோஜா. பன்னீர் ரோஜாக்களை வைத்து நம்மளுடைய முகத்தை ரோசாப்பூ போல பட்டு போல மென்மையாக அழகாக மாற்றுவது எப்படி. சூப்பர் ஃபேசியல் டிப்ஸ் இதோ உங்களுக்காக.

முதலில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். பச்சை பால், ரோஸ் வாட்டர் உங்களுடைய முகத்திற்கு எது செட் ஆகுமோ அதை பஞ்சில் நனைத்து உங்களுடைய முகத்தை நன்றாக துடைத்து சுத்தம் செய்து விடுங்கள். அதன் பின்பு முகத்தை ஸ்டீம் செய்ய வேண்டும். அதாவது ஆவி பிடிக்க வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.

- Advertisement -

தண்ணீர் கொதித்து வரும்போது 1 கைப்பிடி அளவு பன்னீர் ரோஜா, 2 கொத்து வேப்ப இலைகள், புதினா இலைகள் சிறிதளவு, மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீரில் இருந்து ஆவி வரும் அல்லவா. அதை உங்களுடைய முகத்தில் நன்றாக ஆவி பிடிக்க வேண்டும். பெட்ஷீட் போட்டு மூடிக்கொண்டு முகத்தை ஆவி பிடியுங்கள்.

முகத்தில் வியர்வை வந்து இருக்கும். முகத்தை லேசாக காட்டன் துணியை வைத்து துடைத்து எடுக்க வேண்டும். முகம் பொலிவாயாக இருப்பதை இந்த இடத்திலேயே உங்களால் உணர முடியும். அடுத்தது சூப்பரான ஒரு ஃபேஸ் பேக். ஒரு மிக்ஸி ஜாரை எடுக்கணும். அதில் ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ் சேர்த்து, கொஞ்சமாக பன்னீர் ஊற்றி, விழுதுபோல அரைத்து, இதில் முல்தானி மெட்டி 1 ஸ்பூன் சேர்க்கவும். உங்களுக்கு ரொம்பவும் டிரை ஸ்கின் ஆக இருந்தால் தயிர் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து இதை அப்படியே முகத்தில் போட்டு 2 நிமிடம் மசாஜ் செய்து, பேக் போல விட்டு விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி பாருங்கள். பிறகு உங்களுடைய முகம் டக்கர் ஆக மாறி இருக்கும்.

- Advertisement -

வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வர நீங்கள் ரோஜா இதழ் போலவே அழகாக மாறி விடுவீர்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உங்களுடைய முகத்தை எப்போதும் பொலிவாக வைத்துக்கொள்ள ஒரு டோனரை உங்கள் கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த டோனர் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட டோனராக இருக்க வேண்டும்.

ஏலக்காய் அல்லது கிராம்பு இரண்டையும் ஒன்றாக போடக்கூடாது. உங்களுக்கு ஏலக்காய் தேவை என்றால் ஏலக்காயை மட்டும் பயன்படுத்துங்கள். கிராம்பு தேவை என்றால் கிராம்பை மட்டும் பயன்படுத்துங்கள். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் ஏலக்காய், அல்லது ஒரு ஸ்பூன் கிராம்பு போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரின் சூடு ஆறியதும் வடிகட்டி அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த டோனரை ஃப்ரிட்ஜில் வைத்தால் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாது. தினமும் நீங்கள் ரிலாக்ஸாக அமர்ந்து டிவி பார்க்கும் போது உங்களுடைய முகத்தில் இந்த டோனரை ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும். டோனர் பயன்படுத்தும் போது முகத்தில் மேக்கப் இருக்கக் கூடாது. முகத்தில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிந்து உங்கள் முகத்தை ஒரு பாதுகாப்பு கவசம் போல இந்த டோனர் பார்த்துக் கொள்ளும். உங்களுக்கு மேலே சொன்ன குறிப்பு படிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. எப்பவுமே அழகா இருப்பிங்க.

- Advertisement -