கடன் நிவர்த்தி செய்யும் ருண விமோசன லிங்கேஸ்வரர்

runa vimochana lingam
- Advertisement -

வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களை தீர்ப்பதற்காக பல முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். மீளா துயரத்தை ஏற்படுத்தும் கஷ்டங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் கடன். கடனை வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட பல குடும்பங்கள் இன்றளவும் இருக்கின்றன. அப்படி கஷ்டப்படுபவர்களுக்கு விமோசனத்தை தரக்கூடியவராகத்தான் ருண விமோசன லிங்கேஸ்வரர் திகழ்கிறார். இவரை வீட்டிலேயே எப்படி வழிபட்டு கடனை நிவர்த்தி செய்ய முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

திருச்சேரை என்னும் ஊரில் இருக்கக்கூடிய சிவன் கோவிலில் ருண விமோசன லிங்கேஸ்வரர் இருக்கிறார். அவரை நாம் திங்கட்கிழமை தோறும் சென்று வழிபட்டு வந்தால் கடன் நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது. அந்த கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே எந்த முறையில் வழிபடலாம் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இனையதளத்தில் திருச்சேரை ருண விமோசன லிங்கேஸ்வரர் என்று போட்டு பார்த்தால் அவரின் படம் வரும். அந்தப் படத்தை பிரதியிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்த இந்த படத்தை தங்கத்தால் ப்ரேம் செய்து கொள்ள வேண்டும். இந்த படத்தின் உயரம் குறைந்தது ஒரு மூழமாவது இருக்க வேண்டும். இந்த பூஜையை திங்கட்கிழமை அன்று காலையில் 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பிக்கும் அந்த திங்கட்கிழமை ஆனது சுபமுகூர்த்த நாளாக இருப்பது நன்மையை தரும்.

இந்த பூஜைக்கு நமக்கு விபூதி, குங்குமம், வாசனை மலர்கள், வெற்றிலை பாக்கு இவை இருந்தால் போதும். விபூதியையும் குங்குமத்தையும் சம அளவு எடுத்து கலந்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். வாசனை நிறைந்த மலர்கள் ஏதாவது ஒன்றில் மாலை கட்டி அந்த மாலையை படத்திற்கு போட வேண்டும். பிறகு சிவன் அஸ்டோத்திரம் இருக்கும் அல்லவா அதை பார்த்து படிக்க வேண்டும். அப்படி படிக்கும் பொழுது நம்முடைய மோதிர விரல் மற்றும் கட்டை விரலால் நாம் கலந்து வைத்திருக்கும் விபூதி குங்குமத்தை எடுத்து ருண விமோசன லிங்கேஸ்வரர் படத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்த பிறகு வெற்றிலை பாக்கை அவருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அடுத்ததாக இரண்டு கைகளிலும் குபேர முத்திரையை வைத்து “ஓம் சிவாய நமஹ அது சீக்கிரம் என் கடன் நிவர்த்தி ஆக வேண்டும்” என்று 51 அல்லது 108 முறை சொல்ல வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டிக் கொள்ளலாம். இந்த வழிபாட்டை நாம் தினமும் செய்ய வேண்டும்.

நேரம் இருப்பவர்கள் காலையிலும் நேரம் இல்லாதவர்கள் மாலையிலும் செய்யலாம். ஏதாவது ஒரு வேளை மட்டும் செய்தால் போதும். ஆனால் பூஜையை ஆரம்பிக்கும் நாள் அன்று மட்டும் காலையில் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் நாம் வீட்டிலேயே வழிபட்டு வர நமக்கு ஏற்பட்டிருக்கும் கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: வழிபாட்டின் முழு பலனையும் பெற வலம் வரும் முறை

ருண விமோசன லிங்கேஸ்வரர் கடனை நிவர்த்தி செய்யும் இறைவனாக திகழ்கிறார். இவரை நாம் வழிபடுவதோடு கடனை நிவர்த்தி செய்வதற்குரிய முயற்சிகளையும் மேற்கொண்டால் கண்டிப்பான முறையில் கடன் நிவர்த்தி ஆகும்.

- Advertisement -