நவகிரகங்களின் அருளைப் பெற உதவும் ருத்ராட்சம்

ruthratcham
- Advertisement -

இந்த உலகத்தை காத்து ரட்சிக்க கூடிய சக்தி வாய்ந்த மும்மூர்த்திகளுள் ஒருவராக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். ஆழகால விஷத்திலிருந்து இந்த உலகத்தை காப்பாற்றுவதற்காகவே அந்த விஷத்தை தன் தொண்டையில் அடக்கி வைத்திருக்கும் அற்புதமான தெய்வமாக திகழ்பவர் சிவபெருமானே. அப்படிப்பட்டவரின் அருளை பரிபூரணமாக பெற்ற பொருளான ருத்ராட்சத்தை வைத்து நாம் எப்படி வழிபட்டால் நம் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளையும் பெற முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த பொருட்கள் என்று சில பொருட்கள் இருக்கும். அந்த பொருட்களை நாம் வாங்கி வைத்து வழிபடும்பொழுது அந்த தெய்வத்தையே வழிபடுவதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் சிவபெருமானுக்கு என்று சில பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களில் மிகவும் குறிப்பாக சொல்லக்கூடியது தான் ருத்ராட்சம். இன்றைய காலத்தில் பலரும் ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொண்டு இருக்கிறார்கள். கழுத்தில் அணிந்தாலும் சரி அணியாவிட்டாலும் சரி அந்த ருத்ராட்சத்தை நம் வீட்டு பூஜை அறையில் வைத்து நாம் வழிபடும் பொழுது அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

எதற்கும் இல்லாத சிறப்பு ருத்ராட்சத்திற்கு இருக்கிறது. அது என்ன என்று அனைவருக்கும் தெரியும். ருத்ராட்சத்தில் தான் முகங்கள் இருக்கின்றன. ஒரு முகம் இரண்டு முகம் மூன்று முகம் என்று முகங்கள் இருக்கிறது. ஒவ்வொரு முக ருத்ராட்சத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கும். இதில் அனைத்து விதமான மக்களும் உபயோகப்படுத்தக்கூடிய ருத்ராட்சமாக ஐந்து முக ருத்ராட்சம் திகழ்கிறது.

இந்த ஐந்து முக ருத்ராட்சத்தை யார் ஒருவர் வைத்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு பஞ்ச பூதங்களும் உறுதுணையாக இருக்கும் என்று பொருள்படுகிறது. இந்த ருத்ராட்சத்தை பிறந்த நட்சத்திர நாள் அன்று தான் வாங்க வேண்டும். அதுவும் இந்த நட்சத்திர நாள் செவ்வாய், சனி போன்ற கிழமைகளில் வராமல் வியாழன் அல்லது ஞாயிறு போன்ற கிழமைகளில் வரும் பொழுது வாங்கினால் அதன் பலனை நாம் இன்னும் அதிகமாக பெற முடியும்.

- Advertisement -

இப்படி வாங்கி வந்த ருத்ராட்சத்தை செம்பாலான சிறிய மூடி போட்ட டப்பா ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும். அதில் சுத்தமான விபூதியை போட வேண்டும். அதற்கு மேல் இந்த ருத்ராட்சத்தை வைக்க வேண்டும். இப்படி வைத்து வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். உங்களுடைய பிறந்த கிழமை அன்று கண்டிப்பான முறையில் இந்த ருத்ராட்சத்திற்கு நீங்கள் கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபட வேண்டும்.

அன்றாடம் இந்த ருத்ராட்சத்தோடு இருக்கக்கூடிய விபூதியை நெற்றியில் வைப்பதன் மூலம் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்திலும் இருந்து வெளிவர முடியும். அதே சமயம் பஞ்ச பூதங்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். இதில் இருக்கக்கூடிய விபூதி தீரும் நிலை ஏற்படும் பொழுது புதிதாக மறுபடியும் விபூதியை வாங்கி அதில் சேர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் விலக நிலை வாசல் பரிகாரம்

யாரொருவர் வீட்டில் இப்படி பஞ்சமுக ருத்ராட்சத்தை வைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய சங்கடங்கள் அனைத்தும் நீங்கி சந்தோஷமான வாழ்க்கையை பெற முடியும்.

- Advertisement -