தரித்திரம் விலக நிலை வாசல் பரிகாரம்

vasal
- Advertisement -

நம்முடைய வீட்டிற்குள் நல்லதும் கெட்டதும் நுழையக்கூடிய இடம் என்றால் அது நிலை வாசல் தான். அந்த நிலை வாசலை நாம் எப்படி பராமரித்து வருகின்றோம் என்பதை வைத்து தான் நம்முடைய வீட்டு செல்வ செழிப்பே இருக்கிறது. நிலை வாசல் கதவில், நிலை வாசல் சட்டத்தில், நிலை வாசல் படியில் பிரச்சனைகள் இருந்தால், நிச்சயம் அந்த வீட்டிற்குள்ளேயும் பிரச்சனை இருக்கும்.

அதுவே ஒரு வீட்டின் நிலை வாசல் அழகாக சீரமைக்கப்பட்டு இருக்கிறது என்றால் அந்த குடும்பமும் சீரும் சிறப்போடும் செழிப்போடும் இருக்கும் என்பது நம்பிக்கையாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் வீட்டில் இருக்கும் பெண்கள் தினம் தோறும் வீட்டில் தலைவாசல் படியை எப்படி பராமரிப்பது என்பதை பற்றிய ஆன்மிகம் சார்ந்த ஒரு தகவலைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பின் சொல்ல கூடிய முறைப்படி நிலை வாசலை பராமரித்து வந்தால் உங்கள் வீட்டில் தரித்திரம் வறுமை கடன் இருக்காது. தினமும் வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்தவுடன் வாசல் கூட்டி கோலம் போடுவீங்க. ஆனால் நிலை வாசல் படியை சுத்தம் செய்கிறீர்களா என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். மரத்தில் போட்டிருக்கும் வாசல் கால் சட்டத்தை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

நிலைவாசல் பராமரிப்பு பற்றிய ஆன்மீக குறிப்பு

ஒரு சின்ன கிண்ணத்தில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். காட்டன் துணியை இந்த தண்ணீரில் நனைத்து அந்த ஈரத்துணையால் நிலை வாசல் படியை துடைத்து எடுக்க வேண்டும். அதன் பிறகு நிலை வாசல் காலுக்கு மஞ்சள் தடவி, குங்குமப்பொட்டு வைத்து, பூ வைக்க வேண்டும்.

- Advertisement -

நிலை வாசலை இரண்டு கைகளால் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு மகாலட்சுமி மனநிறைவுடன் வீட்டிற்குள் வருக என்று சொல்லி, பிறகு பெண்கள் வீட்டிற்குள் வர வேண்டும். அதன் பிறகு உங்களுடைய அன்றாட வேலையை தொடங்குங்கள். எந்த வீட்டில் தினமும் நிலை வாசல் படி இப்படி பராமரிக்கப்படுகிறதோ, அந்த வீட்டுக்குள் மகாலட்சுமியின் அம்சம் நிறைவாக இருக்கும். இப்படிப்பட்ட வாசல் காலை தாண்டி நம் வீட்டுக்குள் எந்த ஒரு கஷ்டமும் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை.

இந்த பச்சை கற்பூரத்திற்கும், மஞ்சள் தூள் வாசத்திற்கும் அத்தனை ஒரு நேர்மறை ஆற்றல் இருக்கிறது. இந்த பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜியை முழுமையாக அழித்துவிடும். கஷ்டம் வந்து இந்த நிலை வாசல் படியை பார்க்கும்போது, கண்கலங்கி திரும்பிச் சென்று விடும். இன்று கஷ்டத்தை பார்த்து நாம் தான் கண் கலங்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் எந்த வீட்டில் நிலை வாசல் படி மேல் சொல்ல படி பராமரிக்கிறதோ அந்த வீட்டில் கஷ்டமே கண் கலங்கி வாசலோடு திரும்பி செல்லும் என்பதுதான் இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: வெற்றியை தரும் ராம மந்திரம்

சில பெண்கள் சொல்லலாம். இதற்கெல்லாம் காலையில் எங்களுக்கு நேரமில்லை என்று. அப்படிப்பட்ட பெண்கள் வாரத்தில் செவ்வாய், வெள்ளி கிழமை மட்டுமாவது நிலைவாசல் காலை மேல் சொன்ன முறைப்படி பராமரித்து வர உங்கள் வீடு சுபிட்சத்துடன் இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -