பிறர்விடும் சாபத்திலிருந்து தப்பிக்க பரிகாரம்.

sabam
- Advertisement -

நாம நல்லவங்களா கெட்டவங்களா என்று சாபத்திற்கு தெரியாது. யாராவது நம்மை பிடிக்காதவர்கள், நம்முடைய முன்னேற்றத்தை கண்டு பொறாமைப்படுபவர்கள், நம்மால் நேர்முகமாகவும், மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள், மனசு நொந்து, நாம் நல்லாவே இருக்கக் கூடாது என்று நமக்கான சாபத்தை கொடுத்து விட்டால் அது பலிக்குமா? அது பலிக்காதா? என்ற கேள்விக்கு நாம் போக வேண்டாம்.

அந்த சாபத்தால் நமக்கும், நம் குடும்பத்திற்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது, என்றால் நாம் என்ன பரிகாரம் செய்வது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பரிகாரம் இது. அடுத்தவர்களுடைய சாபம் நம்மை எதுவும் செய்யக் கூடாது என்பதற்காக.

- Advertisement -

உதாரணத்திற்கு குடும்ப சண்டையே வந்துருச்சு. கோபத்தில் ஒருவருக்குள் ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு, நீ நல்லாவே இருக்க மாட்ட, வீட்டை விட்டு வெளியே போ, நீ எப்படி நல்லா வாழ்ந்திடுவ நானும் பார்க்கிறேன். நீ ரோட்டில் நின்று பிச்சை தான் எடுக்க போற, அப்படி இப்படி சொல்லி திட்டி நம்மை துரத்தி அடைத்து விடுவார்கள். இதில் நியாயம் யார் பக்கம் என்று நம்மால் பேச முடியாது. ஆனால் அவர்கள் திட்டியதன் மூலம் நமக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது. அதற்கான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் இது.

சாபம் பலிக்காமல் இருக்க பரிகாரம்

இதற்கு நமக்கு தேவையான பொருள் கருஞ்சீரக எண்ணெய், வெட்டி வேர். கருஞ்சீரக எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாக சூடு செய்து, இந்த வெட்டிவேரை அதில் போட்டு விடுங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெய் நன்றாக ஆறியதும், வெட்டி வேரோடு சேர்த்து இந்த எண்ணெயை அப்படியே ஒரு பாட்டிலில் ஊற்றி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

இது கெட்டுப் போகாது. மாதத்தில் இரண்டு நாள் அஷ்டமி நவமி திதி எப்ப வருகிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். காலண்டரில் பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அந்த நாளில் காலை குளிப்பதற்கு முன்பாக இந்த எண்ணெயை லேசாக எடுத்து உங்களுடைய காதிற்கு மேலே தடவிக் கொள்ள வேண்டும். இரண்டு காதிற்கும் மேலேயும் தடவி கொள்ளுங்கள்.

காதுக்கு உள்ளே எல்லாம் போகும்படி தடவ வேண்டாம். மேலே மட்டும் தடவி 1 மணி நேரம் கழித்து வழக்கம் போல நீங்கள் குளித்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். இந்த எண்ணெயை உங்கள் காதில் தடவி விட்டால் உங்கள் காதில் விழுந்த அந்த சாப வார்த்தைகளின் மூலம் உங்கள் வாழ்க்கையில் எந்த பாதிப்பும் வராது.

- Advertisement -

இந்த ஜென்மத்து சாபங்கள் தவிர, முன்னோர்கள் சாபம், பித்ரு சாபம், பெண் சாபம், இப்படி உங்கள் குடும்பத்திற்கு ஏதாவது சாபங்கள் இருந்தால் கூட அதில் இருந்து தப்பிக்க உண்டான வழியையும் இந்த பரிகாரம் காண்பித்துக் கொடுக்கும்.

அடுத்தவர்கள் உங்களுக்கு விட்ட சாபம், உங்கள் காதில் விழுந்த அந்த கெட்ட வார்த்தைகள் பலிக்காது என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்து வந்தால் இனி வரக்கூடிய நாட்களில் யாராவது பிரச்சனை செய்து உங்கள் குடும்பத்திற்கு சாபம் விட்டாலும் அது பலிக்காது. எளிமையான பரிகாரம் தான் ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரம். இதற்குள் போய் ரொம்பவும் ஆராய வேண்டாம். அது எப்படி நடக்கும் என்றெல்லாம்.

இதையும் படிக்கலாமே: சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்.

இதை செய்தால் அடுத்தவர்கள் நீங்கள் நாசமாக போக வேண்டும் என்று சாபம் விட்டாலும் அது உங்களை வந்து தாக்காது அவ்வளவுதான். அதற்காக அறிந்தே பாவத்தை செய்து விட்டு, அடுத்தவர்கள் சாபம் கொடுத்தால் அது பலிக்காது என்று இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. நல்லதுக்காக மட்டுமே பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -