சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்.

sukiran jathagam
- Advertisement -

பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகத்தின் பெயற்சியானது 12 ராசிகளுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும். அது சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும், சில ராசிகளுக்கு தீய பலன்களையும் தரும். அந்த வகையில் வரும் நவம்பர் 30ஆம் தேதி அன்று சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதன் மூலம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் பெறப் போகிறார்கள். அதைப் பற்றிய தகவலை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரனின் பெயர்ச்சியால் பல ராசிகளுக்கு எப்போதும் நல்லதே நடக்கும். சுக்கிரன் லட்சுமி தாயாருடன் தொடர்புடைய பகவான். ஆகையால் சுக்கிரனுக்கு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் நிறைந்திருக்கும். அதுமட்டுமின்றி இவர் ரிஷபம் மற்றும் துலா ராசிக்கு அதிபதியாகவும், செல்வ செழிப்பிற்கு அதிபதியாகவும் விளங்க கூடியவர். இப்போது இந்த சுக்கிர பெயற்சியால் நன்மை பெறப் போகும் ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மேஷம்

இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் பல சாதகமான சூழ்நிலைகள் அமையும். இந்த காலக்கட்டத்தில் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமாக இருப்பதுடன் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். இது வரை முடிக்கப்படாத இருந்த பணிகள் எல்லாம் முடியும். காதல் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரக் கூடிய காலக்கட்டம் இது. குடும்பம் தொழில் என இரண்டிலும் நன்மையையே சந்திக்கக் கூடிய அற்புதமான காலம் இது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இதை மங்களகரமான நேரம் என்றே சொல்லலாம். இது வரை திருமணம் ஆகாமல் தடைப்பட்டவர்களுக்கு திருமண யோகம் கிடைக்கும். பணியில் நல்ல சாதகமான சூழ்நிலை அமையும். பணியிடை மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் துணையின் ஆதரவால் மகிழ்ச்சியை பெறுவீர்கள். நிலுவையில் இருந்த கோர்ட் கேஸ் வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும். இதுவரை நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் உங்களுக்கு சாதகமாய் நடக்கக் கூடிய அற்புதமான காலம் இது.

- Advertisement -

கடக ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனுடைய சஞ்சாரம் பல பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். பணம் பல வழிகளில் வந்து கொண்டே இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவார்கள். முதலீடு போட்ட அனைத்திலும் லாபம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு இது அற்புதமான காலம் என்றே சொல்லலாம். இந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுபவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றத்தை சந்திக்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் நல்ல லாபத்தை பெறலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரும், பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். இது வரை இருந்த பொருளாதார தடை நீங்கி குடும்பத்தில் இருந்த பிரச்சனை அனைத்தும் தீரக் கூடிய சமூகமான காலக்கட்டம் இது.

- Advertisement -

விருச்சகம்

இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் ஆளுமை திறன் மேம்படும். இதனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நல்லதாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வண்டி, வாகனம், நிலம் போன்ற சொத்துக்கள் வாங்கும் யோகம் வரும். நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். தொடங்கும் தொழில் அனைத்திலும் லாபத்தை சம்பாதிக்க கூடிய லாபகரமான காலம் இது.

இதையும் படிக்கலாமே: புதன் ஹோரையில் செய்ய வேண்டியவை.

இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களில் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவரவர் கிரக நிலைக்கு ஏற்ப சிலசில மாற்றங்கள் ஏற்படும். இந்த பதிவில் உள்ள தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமேயானால் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -