நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறதா? உங்கள் குடும்பத்தை கஷ்டம் துரத்திக் கொண்டிருக்கிறதா? இவற்றிலிருந்து விடுபட இந்த மந்திரத்தை தினமும் சொல்லிடுங்கள்

sabam
- Advertisement -

முன்னோர் சாபம் போன்ற கெடுதல் இருக்குமேயானால் அந்த சாபம் அடுத்தடுத்த தலைமுறையையும் பாதிக்கும். ஒருவரது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாலும் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாமல் பல தடைகள் வந்து கொண்டிருக்கும். குழந்தைகளின் வாழ்வில் உயர்வு கிடைக்காது. நல்ல காரியங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு தடை வந்து கொண்டிருக்கும். ஒருவர் தன்னுடைய வாழ்வில் அடிக்கடி சிரமத்தையும், துன்பத்தையும் தொடர்ந்து சந்தித்தால் நிச்சயம் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். முன்னோர்களின் சாபம் அடுத்த தலைமுறையை பாதிக்காமல் இருக்கவும், அந்த பாதிப்பிலிருந்து அவர்களை விலக்கி வைப்பதற்கும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் போதும். வாருங்கள் அது என்ன மந்திரம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

problem

ஒருவர் தங்களுடைய வாழ்வில் மற்றவர்களுக்கு துரோகம் செய்யாமல், மற்றவருக்கு சாபம் கொடுக்காமல் வாழ வேண்டும். நம்மை விட பெரிய சக்தி நமக்கு மேலே இருந்துகொண்டு நம்மை கண்காணிக்கிறது என்ற கவனம் எப்பொழுதும் இருந்திட வேண்டும். நமக்கு பிறகு நமது தலைமுறையை நாம் செய்யும் தவறுகள் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொண்டு வாழ்க்கையை ஒழுக்கமுடன் நடத்தி வர வேண்டும். எனவே மற்றவர்களின் வாழ்வில் எந்த ஒரு கெடுதல்களை செய்யாமலும் மற்றவர் மனதை புண்படுத்தாமலும் வாழ வேண்டும்.

- Advertisement -

இதனால் ஒரு வருக்கு சாபம் ஏற்பட்டுள்ளது என்பதை அவரின் சுய ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஜோதிடத்தில் ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4 வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

jadhagam

கதைகளிலும், புராணங்களிலும் கேள்விப்பட்டிருப்போம் ரிஷிகளும், முனிவர்களும் மற்றவருக்கு சாபம் கொடுத்து அதனால் அவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து தங்கள் வாழ்க்கையில் அவதிப்படுவார்கள் என்று. இன்றைய நூற்றாண்டில் அது பலிக்குமா? என்ற எண்ணமும் இவை எல்லாம் கட்டுக்கதை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல் நம்பித்தான் ஆகவேண்டும். நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சில நல்ல காரியங்களைச் செய்து தான் ஆக வேண்டும்.

- Advertisement -

எப்படி இந்தப் பிரபஞ்சத்தின் சக்தியின் படி நம் மனதில் நினைப்பது நம் வார்த்தையாக வெளிவரும் பொழுது அவை நமக்கே பலிக்கிறதோ அதுபோல தான் இவை அனைத்தும். நாம் இல்லை என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்தால் நம்மிடம் எதுவும் இல்லாமல் போகும். எனவே எப்போதும் நேர்மறையாக பேசி பழக வேண்டும்.

sabam

இவ்வாறு தான் முன்னோர்களின் கடும் கோபமும், அவர்களின் மன வருத்தமும் நமது தலைமுறையை பாதிக்கிறது. இவற்றிலிருந்து விடுபட காலை எழுந்தவுடன் முதலில் இந்த மந்திரத்தை 8 முறை சொல்லி எழுந்திருங்கள். இரவு படுக்கும்பொழுது இந்த மந்திரத்தை 8 முறை சொல்லி படுத்து உறங்குங்கள்.

“ஓம் ஹ்லீம் பகளே ருத்ர சாபம்
விமோட்சய ஓம் ஹ்லீம் ஸ்வாஹா”

- Advertisement -