சகல செல்வமும் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்

selvam peruga
- Advertisement -

நம்முடைய தேவைகள் பூர்த்தியடைய வேண்டும். அதற்கான செல்வங்கள் நமக்கு கிடைக்க வேண்டும் என்று தான் நாம் அனுதினமும் உழைத்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படிப்பட்ட செல்வத்தை பெறுவதற்கும் நம்முடைய உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவும் பல பரிகாரங்கள் இருந்தாலும் வெற்றிலையுடன் எந்த பொருளை சேர்த்து வைப்பதன் மூலம் செல்வ செழிப்பு மேலோங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

செல்வ செழிப்பு மேலோங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும். மகாலட்சுமி தாயாரை மட்டும் வழிபட்டால் பத்தாது. மகாவிஷ்ணுவியும் சேர்த்து வழிபட வேண்டும். இப்படி செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய மகாவிஷ்ணுவே தனக்கு பணம் தேவைப்படும் பொழுது குபேரரிடம் இருந்துதான் கடனாக வாங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால் செல்வத்தை வாரி வழங்கக் கூடிய தெய்வமாக திகழ்கிறார் குபேரர். குபேரரை நாம் மிகவும் எளிமையான முறையில் எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

செல்வ வளம் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வழிபாட்டை அனுதினமும் செய்ய வேண்டும். ஒரு நாள் பணம் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் அந்த ஒரு நாள் மட்டும் செய்தால் போதும். நமக்கு தினமும் பணம் கிடைக்க வேண்டும் அல்லவா? அதனால் தினமும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நம்முடைய தேவைகள் பூர்த்தியாவதற்குரிய பணவரவு ஏற்படும்.

இதற்கு பித்தளை அல்லது செம்பினால் ஆன ஒரு கிண்ணம் வேண்டும். அந்த கிண்ணத்தில் வெற்றிலை பாக்கு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு விரலி மஞ்சள் வைக்க வேண்டும். அடுத்ததாக காணிக்கையாக ஐந்து ரூபாய், பதினோரு ரூபாய், 21 ரூபாய் என்ற எண்ணிக்கையில் பணத்தை வைக்க வேண்டும். பிறகு இதனுடன் சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். இந்த கிண்ணம் பூஜை அறையில் இருக்க வேண்டும். இந்த கிண்ணத்திற்கு அருகில் ஒரு அகல் தீபத்தை ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

தினமும் இந்தக் கிண்ணத்தில் இருக்கும் வெற்றிலை பாக்கை மாற்ற வேண்டும். மற்ற எந்த பொருட்களையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பச்சை கற்பூரம் கரைந்த பிறகு புதிதாக வேறு பச்சை கற்பூரத்தை வைத்துக் கொள்ளலாம். இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களுமே குபேரர் மற்றும் மகாலட்சுமி போன்ற பணம் தொடர்பான தெய்வங்களுக்கு உரிய பொருளாக கருதப்படுகிறது.

இவை அனைத்தையும் ஒரு சேர நாம் வைத்திருப்பதன் மூலம் அங்கு ஒருவித ஆகர்சன சக்தி ஏற்பட்டு பணத்தை ஈர்க்கும் வல்லமை உண்டாகும். நாம் பணத்தை சம்பாதிப்பதற்காக செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். அதனால் செல்வ செழிப்பு மேலோங்கும். இந்த தீபத்தை ஏற்றி நாம் வழிபடும் பொழுது குபேரரையும் மகாலட்சுமி தாயாரையும் மனதார நினைத்து வழிப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: குறைகளை நீக்கும் முப்பெரும் தேவியர் வழிபாடு

பெரிதும் சிரமப்படாமல் அதிகமாக செலவு செய்யாமல் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த வழிபாட்டை நாமும் நம்பிக்கையுடன் செய்து குபேரர் மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று செல்வ வளத்துடன் நிறைவான வாழ்க்கையை வாழ்வோம்.

- Advertisement -