வாழ்வில் வளம் பெற சொல்ல வேண்டிய மந்திரம்

bhairavara manthiram
- Advertisement -

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கை இப்படியே நகர்ந்து விடுமா? நாமும் பிறரை போல் நல்ல நிலைக்கு செல்ல மாட்டோமா?செல்வ வளத்துடன் வாழ முடியாதா? என்ற ஏக்கம் நிச்சயம் இருக்கும். ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருப்பவர்கள் கூட இன்னும் நம்முடைய பொருளாதார நிலை உயர்ந்து வசதி வாய்ப்புகளும் அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு.

அப்படி இருக்கையில் ஏழ்மை நிலையில் இருப்பவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களும் இப்படி யோசிப்பதில் தவறு ஒன்றும் இல்லை தானே. அதற்கான முயற்சிகளை நாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் ஒரு போதும் துவண்டு விடக் கூடாது அத்துடன் சேர்த்து இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் என்பதை பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வாழ்க்கை சிறக்க மந்திரம்

நம்முடைய வாழ்க்கை சிறக்க சொல்லப்படும் இந்த மந்திரத்தை இந்த ஜனவரி மாதம் முடிவதற்குள்ளாக சொல்ல வேண்டும். ஒவ்வொரு மந்திரத்திற்கான கால நேரம் என உண்டு. அதை போல இந்த மந்திரத்தை இந்த மாதத்தில் சொல்லுவது பல மடங்கு சிறப்பை தருவதாக உள்ளது அந்த மந்திரம் இதோ

ஓம் ஆனந்த பைரவாய நமக

என்ற இந்த மந்திரத்தை 3333 முறை சொல்ல வேண்டும். இத்தனை எண்ணிக்கையை எப்படி ஒரே நாளில் சொல்லுவது என்று யோசிக்க வேண்டாம். நீங்கள் படிக்கும் இந்த நேரத்தில் இருந்து இந்த மாதம் முடிவதற்குள்ளாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

இந்த மந்திரத்தை பூஜை அறையில் அமர்ந்து தான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள் வேறு எங்கு அமர்ந்தும் சொல்லலாம். பணியிடத்தில் அமர்ந்திருக்கும் போதும் செல்லலாம். ஆனால் வண்டி வாகனங்களில் செல்லும் போது சொல்லாதீர்கள். அதே போல அசைவம் சாப்பிடும் நாட்களிலும் இதை சொல்லக் கூடாது. பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் இதை சொல்லக் கூடாது.

இதையும் படிக்கலாமே: 2024 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய சொல்ல வேண்டிய மந்திரம்

வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் வந்து விடாதா? நாமும் உயர மாட்டோமா என்று நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பாக இந்த மந்திரம் அமைந்துள்ளது. இந்த மந்திரத்தை மனதார ஜெபித்து பைரவரின் அருளுடன் சிவபெருமானின் பரிபூரண ஆசியும் பெற்று நல்ல முறையில் வாழ படித்தேடி கொள்ளலாம் என்று இந்த தகவல்கள் பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -