சக்கரத்தாழ்வாரை இப்படி கும்பிட்டால் கடனே வராது.

sakkarathalvar prayer
- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்தையும் நாம் வழிபடும் பொழுது அந்த தெய்வத்தினால் நமக்கு பல நன்மைகள் நடக்கும். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் அதற்காக நாம் அந்த தெய்வத்தை சிறப்பாக வழிபடுவோம். அந்த வகையில் தான் இன்று நாம் தொழில் வளர்ச்சி அடையவும், நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் நமக்கு சாதகமாக வருவதற்கும், நாம் பிறரிடம் கொடுத்த கடன் வசூல் ஆவதற்கும் சக்கரத்தாழ்வாரை எவ்வாறு வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நாம் வாழும் பூமி எவ்வாறு சுழலுகிறதோ, அதே போல் தான் மகாவிஷ்ணுவின் கரங்களில் இருக்கும் சக்கரமும் சுழல்கிறது. அந்த சக்கரத்தை தான் நாம் சக்கரத்தாழ்வார் என்று வழிபடுகிறோம். சக்கரத்தாழ்வாரை நாம் வழிபடுவதால் நமக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருடாழ்வாருக்கு தனி சன்னதி இருப்பது போல் சக்கரத்தாழ்வார்க்கும் தனி சன்னதி இருக்கும்.

- Advertisement -

மேலும் அவருக்கு பின்புறமாக நரசிம்மர் வீற்றிருப்பார் என்பதால் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நமக்கு வரக்கூடிய அனைத்து இன்னல்களும் விலகும் என்று கூறப்படுகிறது. அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்து, ஒரு நெய் தீபத்தை ஏற்ற வேண்டும்.

பிறகு அவரை 12 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். 48வது நாள் அவருக்கு மிகவும் பிடித்த பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். அப்படி செய்தால் தொழிலில் இருக்கும் தடைகள் அனைத்தும் விலகி, நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலும் எப்பேர்பட்ட வழக்காக இருந்தாலும் அதனுடைய தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்று அவருக்கு சிவப்பு நிற பூக்களை சாற்றி, இரண்டு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சனைகளை அவரிடம் கூறி அவரை 21 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 21 செவ்வாய்க்கிழமைகளில் வழிபட நாம் பிறருக்கு கொடுத்த கடன்கள் அனைத்தும் வசூல் ஆகும்.

நம்முடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். நம்முடைய வேண்டுதல் நிறைவேறிய பிறகு அவருக்கு நாம் புளி சாதம் அல்லது தயிர்சாதம் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்கலாம்.

இதையும் படிக்கலாமே: நாளை ஆயுத பூஜை வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய நல்ல நேரம் என்ன?

சக்கரத்தாழ்வாரை வழிபடுவதால் எதிரிகளின் தொந்தரவுகள் இருந்து நாம் விடுபடுவோம், தீய சக்திகள் நம்மை அண்டாது என்பது பொதுவான பலன் என்றாலும், அவரை தனிப்பட்ட முறையில் சிறப்பாக வழிபட்டு நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வோம்.

- Advertisement -