சக்தி தீப வழிபாடு.

sakthi deepam
- Advertisement -

தீபம் ஏற்றாமல் எந்த தெய்வீக வழிபாடும் நடப்பதில்லை. தீபம் ஏற்றாமல் எந்த நிகழ்வும் நடப்பதில்லை. தீபத்திற்கு அப்படி ஒரு பேராற்றல் நிறைந்திருக்கிறது. அந்த தீபத்தையே சில தெய்வங்களை ஈர்க்கக்கூடிய தன்மையுடன் மாற்றி நம்மால் ஏற்ற முடியும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அனைத்து சக்திகளையும் பெறுவதற்கு ஏற்றக்கூடிய அம்பிகை தீபமான சக்தி தீபத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு சிறிய செயலில் இருந்து பெரிய செயல் வரைக்கும் செய்வதற்கு அவருக்கு சக்தி கண்டிப்பாக முறையில் தேவைப்படும். சக்தி இல்லாமல் எந்த செயலையும் யாராலும் செய்ய முடியாது. அப்படி அவர்களுக்கு தேவையான சக்தியை பெறுவதற்கு அம்பிகை துணை புரிகிறாள். இந்த உலகத்தின் சக்தியாக திகழக்கூடிய அம்பிகையை நினைத்து சக்தி தீப வழிபாடு மேற்கொண்டால் நமக்கும் நம் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் தேவைப்படும் அனைத்து சக்திகளையும் அந்த அம்பிகை வாரி வழங்குவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அன்றாடம் நாம் பூஜையறையில் தீபம் ஏற்றி வழிபடும் பொழுது இந்த சக்தி தீபத்தையும் பின்வரும் முறையில் ஏற்றி வழிபட வேண்டும். இந்த சக்தி தீபத்தை ஏற்றுவதற்கு பச்சரிசி மாவில் நட்சத்திர கோலம் போட வேண்டும். பிறகு நட்சத்திர கோலத்திற்கு வலது புறமும் இடது புறமும் திரிசூலத்தை வரைய வேண்டும். பிறகு நட்சத்திர கோலத்தின் நடுவில் குங்குமத்தை வைத்து அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

திரிசூலத்திற்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். நட்சத்திரத்தின் ஒவ்வொரு முக்கோணத்திலும் தீபம் ஏற்றலாம். அதாவது நட்சத்திரத்திற்கு நடுவில் ஒரு தீபம் மட்டும் ஏற்றி வழிபடவும் செய்யலாம். அல்லது ஏழு தீபங்கள் ஏற்றியும் வழிபடலாம். ஒரு தீபம் மட்டும் ஏற்றி வழிபடுபவர்கள் அதை சுற்றி இருக்கக்கூடிய ஆறு முக்கோணங்களிலும் பூக்களை நிரப்பி வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு காலையிலும் மாலையிலும் நாம் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் அம்பிகையின் அருளால் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சக்திகளையும் நம்மால் பெற முடியும். இந்த வழிபாட்டிற்கு இத்தனை நாட்கள் என்ற கணக்கு எதுவும் இல்லை. நம்மால் எவ்வளவு நாட்கள் ஏற்ற முடியுமோ அவ்வளவு நாட்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் எந்த வீட்டில் தொடர்ந்து ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் தீய சக்திகள் எதுவும் அணுகாது. அந்த வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் இந்த தீபத்தை ஏற்றும் பொழுது அந்த குடும்பத்தையே அம்பிகையான சக்தி காத்து ரட்சிப்பாள் மேலும் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருந்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அவர்களுக்கு தேவையான சக்திகளை வாரி வழங்குவார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: கேட்ட வரம் கிடைக்க முருகன் வழிபாடு

இந்த முறையில் வீட்டில் ஏற்றக்கூடிய சக்தி தீபத்தை நம்பிக்கையுடனும் முழு மனதுடனும் ஏற்றி முழுமையான பலனை பெறலாம்.

- Advertisement -