கேட்ட வரம் கிடைக்க முருகன் வழிபாடு

murugan5
- Advertisement -

இன்று நிறைய பேருக்கு மனதில் ஒரு வருத்தம் இருக்கிறது. முருகர் நான் வேண்டுதல் வைத்தால் மட்டும் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்க மாட்டேங்கிறார். பல வருடங்களாக முருகப் பெருமானை வழிபட்டும் எனக்கு வாழ்க்கையில் கஷ்டம் மட்டும் தான் பின் தொடர்கிறது என்று கவலைப்படுவார்கள். சில பேர் முருகனை கும்பிட்டு கும்பிட்டு நம்பிக்கை இழந்து, முருகப்பெருமான் வழிபாட்டையே கைவிட்டு இருப்பார்கள். அப்படி செய்யாதீங்க.

ரொம்ப ரொம்ப தவறு. முருகனை கும்பிட கும்பிட உங்களுக்கு சோதனை அதிகமாக வருகிறது என்றால் இந்த சோதனைக்கு பின்பு உங்களுக்கு ஒரு சாதனை காத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். பக்தர்களை முருகன் சோதிப்பான். ஆனால் நிச்சயம் கைவிடமாட்டான். நிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்ற எளிமையான ஒரு முருகர் வழிபாடு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

முருகரிடம் வைத்த வேண்டுதல் நிறைவேற வழிபாடு

முருகப்பெருமான் சூரசம்ஹாரத்தை முடித்து, சாந்தி அடைந்து, நேற்றைய தினம் திருக்கல்யாணத்தையும் செய்து கொண்டு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பார். வள்ளி தெய்வானையுடன் மணமுடித்து சந்தோஷமா இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் எந்த வரத்தை கேட்டாலும் உடனே கொடுத்து விடுவார். உங்க இஷ்டப்பட்ட முருகரை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

திருச்செந்தூர் முருகன், திருத்தணி முருகன், வடபழனி முருகன், சிருவாபுரி முருகன் எந்த முருகனாக இருக்கட்டும். உங்களுக்கு இஷ்டப்பட்ட முருகனை மனதில் நினைச்சுக்கோங்க. பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றுங்க. ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து நான்கு முனைகளிலும் மஞ்சள் வைங்க. நடுவில் ஒரு மஞ்சள் பொட்டு வச்சுட்டு, முதலில் ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை எழுதிடுங்க.

- Advertisement -

அந்த காகிதத்தின் நடுவே உங்கள் கோரிக்கை ஒற்றை கோரிக்கையை ஒரு வரியில், எழுதி கீழே திருச்செந்தூர் முருகன் துணை, திருப்போரூர் முருகன் துணை, வடபழனி முருகன் துணை, பழனி முருகன் துணை, என்று எந்த முருகனை வேண்டுமென்றாலும் துணைக்கு கூப்பிடலாம். உங்களுக்கு இஷ்டப்பட்ட முருகன் ஒருவர் இருப்பார் அல்லவா. அந்த முருகனை துணையாக எழுதி மடித்து பூஜை அறையில் இருக்கும் முருகப்பெருமானின் திரு உருவப்படத்துக்கு கீழ் இந்த காகிதத்தை வச்சிருக்க.

தினமும் அந்த முருகனை நினைத்து பூஜை அறையில் விளக்கி ஏற்றி நீங்கள் எழுதிய அந்த கோரிக்கை கட்டாயம் நிறைவேற்ற பட வேண்டும் என்று முருகருக்கு செல்லமாக கட்டளை போடுங்கள். தவறு கிடையாது. உரிமையோடு கேட்டு போராடுங்கள். நிச்சயம் நீங்கள் கேட்ட வரம் 48 நாட்களில் கிடைக்கும்.

- Advertisement -

அந்த பேப்பரில் எழுதிய கோரிக்கை நிறைவடைந்த பிறகு நீங்கள் அந்த பேப்பரில் எந்த முருகனின் பெயரை எழுதி வைத்தீர்களோ, அந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று அந்த முருகனுக்கு ஒரு நன்றியை தெரிவித்து வர வேண்டும். இந்த பேப்பரை கொண்டு போய் அந்த முருகன் கோவில் உண்டியலில் ஒரு காணிக்கையோடு சேர்த்து மடித்து போடலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர கார்த்திகை சோமவாரத்தில் செய்ய வேண்டிய வழிபாடு

வழிபாட்டை செய்யும்போது இது ஒரு சாதாரண வழிபாடாக தெரியலாம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் சக்தி ரொம்ப பெருசு. உங்களுடைய நம்பிக்கைதான் இந்த பரிகாரம். முருகப்பெருமானே வந்து உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்று நம்பி இதை செய்து பாருங்கள். நிச்சயம் நன்மை நடக்கும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -