வருடத்திற்கு ஒருமுறை இந்த சக்தி பூஜையை வீட்டில் செய்தால் அனைத்து விதமான நன்மைகளும் நம்மை வந்து சேரும்.

sakthi poojai
- Advertisement -

ஒருவருக்கு எவ்வளவு கஷ்டமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் முதலில் தன் நினைவிற்கு வரும் உறவு தாய் தான். தாய்க்கு மீறி வேறு யாரும் வர முடியாது. தாயின்றி இந்த உலகத்தில் யாராலும் பிறக்க முடியாது. அந்த வகையில் இந்த உலகத்தை காக்கின்ற தாயாக விளங்குபவள் தான் அன்னை பராசக்தி. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த முறையில் பூஜை செய்தால் அன்னை பராசக்தியை நம் இல்லத்தில் அமர்த்த முடியும் என்று தான் பார்க்க போகிறோம்.

சக்தி ரூபமாக திகழக்கூடிய அனைத்து அம்மன்களும் தாயாகவே பாவிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட தாயை நம்முடைய வீட்டில் அமர வைப்பதற்கு வெள்ளிக்கிழமை அன்று சக்தி பூஜை என்ற ஒரு எளிமையான பூஜையை நாம் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் செய்தோம் என்றால் அந்த தாய் நம் வீட்டிற்கு வந்து நம்முடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வார்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். ஒரு பெரிய தாம்பாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தாம்பாளம் நிறைய சக்தியின் அம்சமாக கருதப்படுகின்ற வேப்ப இலைகளை நிரப்ப வேண்டும். பிறகு அதற்கு மேல் ஒரு சிறிய தாம்பாளத்தை வைக்க வேண்டும். அதில் விபூதியை முழுவதும் நிறைத்து அந்த விபூதியில் நட்சத்திர கோலத்தை வரைய வேண்டும். அடுத்ததாக எந்தவித கருப்பு புள்ளிகளும் இல்லாத எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து அதை அம்மனாக பாவித்து அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு அதை நட்சத்திரத்தின் நடுவில் வைக்க வேண்டும்.

பிறகு இந்த தாம்பாளத்திற்கு இரண்டு புறங்களிலும் புதிதாக வாங்கிய இரண்டு அகல் விளக்குகளை வேப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அடுத்ததாக இந்த தாம்பாளத்திற்கு முன்பாக ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்து அது நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்து, அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் வேப்ப இலைகளை போட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது “ஸ்ரீ ஓம் சக்தி” என்று உதிரிப்பூக்களால் எலுமிச்சம் பழத்திற்கு 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு நாம் வைத்திருக்கும் அந்த தீர்த்தத்தை சக்தி தீர்த்தமாக பாவித்து வீடு முழுவதும் தெறிக்க வேண்டும். தீபம் முழுவதும் எரிந்து முடித்த பிறகு சக்தியாக பாவித்த எலுமிச்சங்கனியை பூஜை அறையில் எடுத்து வைத்து விட வேண்டும். விபூதியை நாம் தினமும் பூசிக்கொள்ள உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். வேப்ப இலைகளை கால் படாத ஒரு இடத்தில் போட்டு விட வேண்டும்.

இவ்வாறு நாம் நம் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று சக்தி பூஜை செய்வதன் மூலம் அந்த பராசக்தியே நம் வீட்டிற்கு வந்து நம் வீட்டில் இருக்கக் கூடிய அனைத்து துன்பங்களையும் நீக்கி நன்மைகளை வாரி வழங்குவார்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகவும், அதேசமயம் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறவும் உதவக்கூடிய அற்புதமான தீபம்

இந்த எளிமையான சக்தி பூஜையை வருடத்திற்கு ஒரு முறையாவது நாமும் நம் வீட்டில் செய்து முழுப்பலனையும் அடைவோம்.

- Advertisement -