வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகவும், அதேசமயம் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறவும் உதவக்கூடிய அற்புதமான தீபம்

thulasi deepam
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் தடைகளும், தடங்கல்களும் ஏற்படுகிறது என்றால் அவர்களுடைய வாழ்க்கையிலும் அவர்களை சுற்றிலும் எதிர்மறை ஆற்றல்கள் என்று கூறக்கூடிய தீய சக்திகள் இருப்பதாக அர்த்தம். தீய சக்திகள் என்று பார்க்கும் பொழுது ஒருவருடைய முன்னேற்றத்திற்கு தடங்கல்களை தரக்கூடிய அனைத்துமே தீய சக்திகளாக தான் நாம் பாவிப்போம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தீய சக்திகளை விலக்குவதற்கும் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும் உதவக்கூடிய தீபத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஒருவருடைய குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கிறது. பிள்ளைகள் சொல்பேச்சை கேட்டு நன்றாக படிக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிரம்பி வழிகிறது என்னும் சூழ்நிலையில் அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக இருக்கும். இதே இதற்கு நேர்மாறாக அனைத்திலும் தடைகளும் தடங்கல்களும் ஏற்படும் பொழுது அந்த வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கும். அப்படி எதிர்மறை சக்திகள் அதிகமாக இருந்தால் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைக்காமல் போய்விடும். எந்த வீட்டில் இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறார்களோ அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக இருக்கிறது என்று அர்த்தம்.

- Advertisement -

எதிர்மறை சக்திகள் என்று நாம் சொல்லக்கூடிய தீய சக்திகள் அது எதுவாக இருந்தாலும் கண் திருஷ்டி, பொறாமை, பிறரின் முன்னேற்றத்தை தடுக்க செய்யக்கூடிய செயல்களாக இருந்தாலும் அவை அனைத்தையுமே நாம் தீய சக்திகள் என்று தான் கூறுகிறோம். இந்த தீய சக்திகளை முற்றிலுமாக நம் வீட்டில் இருந்து விலக்குவதற்கும் அதே சமயம் மகாலட்சுமி தாயாரை வீட்டிற்குள் வரவழைக்கவும் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். ஆன்மீகத்துக்கு என்று பொதுவாக அனைவரும் ஒதுக்கக்கூடிய நாளாக தான் வெள்ளிக்கிழமை விளங்குகிறது. எந்த வீட்டிலும் வெள்ளிக்கிழமை அன்று விளக்கேற்றாமல் வழிபாடு செய்யாமல் இருக்க மாட்டார்கள். வாரத்தில் ஒரு நாளாவது வழிபாடு செய்யும் குடும்பங்கள் பல இருக்கின்றன.

- Advertisement -

அந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் புதிதாக ஒரு அகல் விளக்கு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இலுப்ப எண்ணெயை ஊற்றி பஞ்சு திரியோ அல்லது நூல் திரியோ ஏதாவது ஒரு திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது அதில் நாம் சிறிதளவு துளசி பொடியை சேர்க்க வேண்டும்.

இலுப்பை எண்ணெயை ஊற்றி நாம் தீபம் ஏற்றும் பொழுது நம்மிடம் நம் வீட்டிலும் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகிவிடும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தீய சக்திகளால் ஏற்பட்டிருந்த தடைகளும் தடங்கல்களும் விலகி விடும். அந்த தீபத்தில் நாம் துளசி பொடியை சேர்ப்பதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் நம் வீட்டைத் தேடி வரும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றலை நீக்கி கோடீஸ்வர யோகம் தரும் பரிகாரம்.

ஒரே தீபத்தில் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகியும் அதே சமயம் மகாலட்சுமி தாயாரின் அருளையும் நம்மால் எளிதில் பெற முடியும்.

- Advertisement -