எதையும் சாதிக்கும் துணிச்சல் தரும் விபூதி. இந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டால், இந்த உலகத்தையே சுலபமாக வென்று விடலாம்.

thilagam
- Advertisement -

வாழ்க்கையில் நாம் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் இருக்க வேண்டியது மன உறுதியும், மன தைரியமும் தான். பயத்தை விடுத்து கோழைத்தனத்தை விடுத்து யாரொருவர் தைரியமாக துணிச்சலோடு செயல்படுகிறார்களோ, அவர்கள் வாழ்க்கையில் நிச்சயமாக ஏதாவது ஒரு விஷயத்தில் சாதனை படைப்பார்கள். நிறைய பேர் வாழ்க்கையில் தோல்வி அடைவதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் மன பயமும் கோழைத்தனமும் தான். நீங்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களா. உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபட உங்களுடைய கோழைத்தனம் தான் முதல் எதிரியாக நிற்கின்றதா. முழுக்க முழுக்க உங்களுக்காக மட்டுமே சொல்லப்பட்டுள்ள பதிவுதான் இது.

vibuthi

முதலில் சுத்தமான திருநீரை கடையிலிருந்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நாளை வெள்ளிக்கிழமை. வரலட்சுமி விரதமும் கூட சேர்ந்து வருகிறது நாளை கூட இந்த பூஜையை தொடங்கலாம். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் விபூதியை முதலில் ஒரு பித்தளை தாம்பாளத்தில் பரப்பி கொட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பரப்பிய விபூதியில் உங்களுடைய வலது கை ஆள்காட்டி விரலால் ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுதி விடுங்கள். விபூதியை கொட்டி வைத்திருக்கும் தாம்பூலத்தட்டிற்க்கு முன்பாக நீங்கள் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய குல தெய்வத்தின் நாமத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும்.

om-mantra

இப்படி ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தோடு சேர்த்து உங்களுடைய குலதெய்வத்தின் நாம மந்திரமும் அந்த விபூதியுடன் கலந்துவிடும். இப்போது இந்த விபூதி சக்தி வாய்ந்த விபூதியாக மாறிவிட்டது. மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு இறுதியாக இறைவனுக்கும், தாம்புல தட்டில் இருக்கும் விபூதிகும் கற்பூர ஆரத்தி செய்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இது ஒரு நாள் செய்யக்கூடிய பூஜை. இதேபோல ஒரு மண்டலம் 48 நாட்கள் தாம்பூல தட்டில் இருக்கும் அந்த விபூதிக்கு உங்களுடைய குல தெய்வத்தின் பெயரை உச்சரித்து சக்தியை கொடுக்க வேண்டும். (வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பூஜையை செய்வதாக இருந்தால் மாதவிலக்கு வரக்கூடிய ஐந்து நாட்களை தவிர்த்து விட்டு நாற்பத்தி எட்டு நாட்கள் கணக்கு வைத்துக் கொள்ளலாம்).

- Advertisement -

பூஜை முடியும் வரை விபூதி தாம்புல தட்டிலேயே பூஜை அறையில் இருக்கட்டும். 48 நாட்கள் பூஜை முடிந்ததும் தட்டில் இருக்கும் விபூதியை கண்ணாடி பாட்டில் அல்லது பித்தளை டப்பா உங்கள் வீட்டில் வெள்ளியில் செய்யப்பட்ட டப்பா இருந்தாலும் அதில் கொட்டி கொள்ளலாம். சில்வர், இரும்பு பாத்திரத்தில் இந்த விபூதியை எக்காரணத்தைக் கொண்டும் கொட்டி வைக்கக் கூடாது.

kuladheivam

சுத்தமான விபூதியில் நாற்பத்தி எட்டு நாட்கள் உங்களுடைய குல தெய்வத்தின் மந்திரத்தை சொல்லி உரு ஏற்றி வைத்திருக்கிறார்கள். இது மிக மிக சக்திவாய்ந்த விபூதி. தினமும் காலையில் எழுந்து குளித்து விட்டு வெளியே கிளம்புவதற்கு முன்பு இந்த விபூதியை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். துணிச்சலும் தைரியமும் தானாக உங்களுக்கு உள்ளே வந்துவிடும். மன பயம் கோழைத்தனம் உங்களை விட்டு வெளியேறி விடும். வெற்றி உங்கள் பக்கம் தேடி வரும்.

vibuthi

இந்த விபூதி உங்களுடைய நெற்றியில் இருந்தால் எந்த ஒரு கெட்ட சக்தியாலும் உங்களை அண்ட முடியாது. ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து முழு பலனை பெற வேண்டுமென்று அந்த குல தெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -