உங்க கிச்சன் வேலைகளை சுலபமாக்க, இந்த டிப்ஸ் ஆறு அருமையான டிப்ஸ்சை பாலோவ் பண்ணுங்க. இத்தனை நாள் இது தெரியாம இருந்துட்டோமேன்னு கண்டிப்பா பீல் பண்ணுவீங்க

- Advertisement -

சமையலறை என்று எடுத்தால் அனைவருக்கும் தெரிந்து மூன்று வேலை சமைப்பது மட்டும் தான்.ஆனால் அந்த மூன்று வேலை சமைப்பதற்கு முன்னும், சமைத்த பிறகும் சமையலறையில் எத்தனை வேலைகள் உள்ளது வெளியே இருந்து பார்க்கும் யாருக்கும் அவ்வளவு சுலபத்தில் தெரிந்து விடுவதில்லை. ஒவ்வொரு பொருள்களையும் பார்த்து, பார்த்து வாங்கி அதை பத்திரப்படுத்தி எடுத்து வைத்து அதை கெட்டுப் போகாமல் இப்படி வேலைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். சமைப்பது மட்டும் சமையல் அறை வேலை அல்ல அதற்காக பயன்படுத்தும் பொருட்களை அது மளிகை பொருட்களாக இருக்கட்டும் அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்களாக இருக்கட்டும் அனைத்தையும் கவனமாக பார்த்து பார்த்து செய்ய வேண்டியதும் சமையலறை வேலை தான். அப்படிப்பட்ட வேலைகளில் சின்ன சின்ன டிப்ஸ் தெரிந்து வைத்துக் கொண்டால் டென்ஷன் இல்லாமல் ஈசியாக இந்த வேலைகளை செய்து முடித்து விடலாம் அதற்கான இந்த எட்டு குறிப்புகளை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

எல்லோர் வீட்டிலும் அஞ்சறைப்பெட்டி கட்டாயமாக இருக்கும். அதில் போட்டு வைக்கும் பொருள்கள் நாம் அடிக்கடி அதை திறந்து மூடுவதால் சீக்கிரமே நமத்து போனது போலவும், கொஞ்சம் ஈரப்பதம் வந்தது போலவும், இருக்கும் அதிலும் இந்த மழைக்காலத்தில் இது சற்று சீக்கிரமாகவே இப்படி ஆகிவிடும். இதை தடுக்க அதில் ஒரு காய்ந்த மிளகாய் காம்புடன் ஒவ்வொரு கிண்ணத்திலும் போட்டு வைத்து விடுங்கள். பொருட்கள் வீணாகாமல் நீண்ட நாள் இருக்கும்.

- Advertisement -

அரிசி, பருப்பு, வேறு எந்த தானியமாக இருந்தாலும் அதை கொட்டி வைக்கும் பாத்திரத்தில் வண்டு பூச்சி வந்து விடாமல் இருக்கவும், அரிசி ஈரப்பதம் தங்காமல் இருக்கவும், தேங்காய் சிரட்டை இருந்தால் அதில் போட்டு விடலாம். உங்களுக்கு சௌகரியப்பட்டால் தேங்க முடியை வைத்து அரிசி அளந்து கொள்ளலாம் இல்லையென்றால் ஒரு இரண்டு தேங்காய் சிரட்டையாவது அதில் போட்டு வைத்து விடுங்கள்.

நெய் எப்போது நாம் அரை லிட்டர் ஒரு லிட்டர் என்று வாங்கி வைத்து விடுவோம் அதை வாங்கும் போது இருக்கும் மனம் நாளாக நாளாக குறைந்து விடும் அந்த மனம் இல்லாமல் நாம் எந்த அவதாரம் செய்தாலும் நெய் சேர்த்து செய்ததற்கான அறிகுறியே இருக்காது. அப்படி நீங்கள் எத்தனை நாள் வைத்திருந்தாலும் நெய்யின் மனம் மாறாது இருக்க அதில் சிறிதளவு வெந்தயத்தை போட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதே போல் நீங்கள் எந்த எண்ணெய் வாங்கினாலும் அது தலைக்கு தேய்க்கும் எண்ணையாக இருந்தாலும் சரி, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையாக இருந்தாலும் சரி சிறிது நாள் ஆனதும் அதில் சிக்கு வாடை வரும் அந்த வாடை வராமல் இருக்க சிறிதளவு மிளகை எண்ணெயில் போட்டு வைத்து விடுங்கள் சிக்கு வாடை வரவே வராது.

இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவிலோ அல்லது கண்ணாடி டப்பாவில் போட்டு வைப்போம். அது காலியான பிறகு என்ன தான் தேய்த்து கழுவினாலும் அதில் உள்ள இஞ்சி பேஸ்ட் வாடை போகாது. அதில் கொஞ்சம் கடுகையும் கொஞ்சம் நியூஸ் பேப்பரையும் போட்டு ஒரு நாள் அப்படியே வைத்து விடுங்கள் அடுத்த நாள் எடுத்துப் பார்த்தால் இதில் தான் நாம் இஞ்சி பூண்டு பேஸ்ட் வைத்தோமா என்று உங்களுக்கே சந்தேகம் வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: இனி கரப்பான்பூச்சி, பல்லி தொல்லையிலிருந்து நிரந்தர விடுதலை தான்‌. ஒரே ஒரு மூடி இந்த லிக்விடை சிங்க் ஓட்டையில் ஊற்றி விடுங்க போதும்.

வீட்டில் மசாலாக்கள் சேர்த்து வைக்கும்பாட்டிலில் (பிளாஸ்டிக் டப்பாவில் போடா கூடாது) நாம் என்ன தான் சுத்தம் செய்தாலும் அந்த மசாலா வாடை வந்து கொண்டே இருக்கும் அதற்காக இந்த எளிய டிப்ஸ் பாட்டிலில் ஒரு வத்திக்குச்சி கொளுத்தி உள்ளே போட்டு உடனே மூடிவிட வேண்டும் தீக்குச்சி அணைந்து விடும். ஆனால் அதிலிருந்து வரும் புகை அந்த பாட்டிலில் இருக்கும், சிறிது நேரம் கழித்து பாட்டிலை திறந்து ஒரு நியூஸ் பேப்பரை தண்ணீரில் நனைத்து பாட்டிலே சுற்றி துடைத்து விட்டு பாட்டில்லை நன்றாக காய வைத்து எடுத்து கொள்ளுங்கள்.இதற்கு முன் நீங்கள் போட்டு வைத்த மசாலாவின் வாடை அதில் இருக்காது. இந்த ஆறு குறிப்புகளுமே உங்கள் சமையலறை வேலையை சுலபமாக்க உதவும்.

- Advertisement -