சமையலுக்கு தேவையான முக்கியமான 4 குறிப்புகள் இதோ உங்களுக்காக! இது கூட தெரிஞ்சுக்காம போயிட்டோமேன்னு வருத்தப்பட போறீங்க.

idli-murungai-kai
- Advertisement -

நம் அன்றாட சமையலில் நமக்கு தேவையான நிறைய விஷயங்கள் தெரியாமலேயே இருந்திருக்கும். அப்படியான விஷயங்களில் இந்த 4 விஷயங்கள் ரொம்பவே முக்கியமானதாக இருக்கப் போகிறது. சில சமயங்களில் முருங்கைக்காய் வீட்டு தோட்டத்தில் நிறைய காய்த்து தொங்கும். அதை எப்படி நீண்ட நாட்களுக்கு ஸ்டோர் செய்வது என்பது நமக்கு தெரியாது! உறை ஊற்றுவதற்கு மோர் இருக்காது! அந்த சமயத்தில் எப்படி தயிர் செய்வது? என்பது தெரியாது. இது போல சின்ன சின்ன விஷயங்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

Tip 1:
முருங்கைக்காய் சில சமயங்களில் நிறையவே கிடைக்கும். இதை வெளியில் வைத்தால் ஒரே நாளில் காய்ந்து விடும். நீளமாக இருப்பதால் பிரிட்ஜிலும் ஸ்டோர் செய்து வைக்க முடியாது. இதை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக உங்கள் தேவைக்கு ஏற்ப வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் கல்லுப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த முருங்கைக் காய் துண்டுகளை ஐந்து நிமிடம் ஊற வைத்து, பின்னர் பேன் காற்றில் நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஈரப்பதம் இல்லாமல் ஒரு ஜிப்லாக் கவர் அல்லது பாலித்தீன் பையில் போட்டு வைத்தால் 15 நாட்கள் வரை அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -

Tip 2:
இட்லி பாத்திரத்தில் துணி போட்டு இட்லியை அவிப்பவர்கள் இட்லியை ஆவி பறக்க வெளியில் எடுத்த உடன் துணியிலிருந்து இட்லியை எடுக்க முடியாது. இதற்காக தண்ணீர் தெளிப்பது உண்டு. இட்லியின் மீது இப்படி தண்ணீர் தெளிக்காமல் இட்லி தட்டை திருப்பி குழாயில் கொண்டு போய் வைத்து எடுத்தால் ஒரே நிமிடத்தில் இட்லி தனியாகவும், துணி தனியாகவும் கொஞ்சம் கூட ஒட்டாமல் அழகாக பிரிந்து வரும்.

Tip 3:
உரை ஊற்ற தயிர் இல்லை என்றால் கெட்டியான பாலை கொதிக்க வைத்து நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். முக்கால்வாசி ஆறிய பாலுடன் ரெண்டு நீட்டு மிளகாயை காம்புடன் அப்படியே பாலில் சேருங்கள். காம்பு நீக்கா விட்டால், காரம் பாலில் இறங்கி விடும். எனவே காம்புடன் அப்படியே சேர்த்து பாருங்கள், பால் நல்ல கெட்டியாகி சூப்பரான தயிராக உரைந்து விடும். இனி தயிருக்கு உரை மோர் தேடத் தேவையில்லை.

- Advertisement -

Tip 4:
அடிக்கடி திராட்சை பழம் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. திராட்சை பழத்தை நீண்ட நாட்களுக்கு எப்படி ஃப்ரிட்ஜில் வைத்து பராமரிப்பீர்கள்? இது ரொம்பவும் சீக்கிரமாக கெட்டுப் போக கூடிய ஒரு பழம் ஆகும். திராட்சை பழங்களை வாங்கி வந்த உடன் அதில் இருக்கும் அழுகிய பழங்களை தனியாக எடுத்து விடுங்கள்.

ஒரு பழம் அழுகி இருந்தாலும் எல்லா பழங்களும் வீணாகி விடும். நல்ல பழங்களை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து லேசாக துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு ஜிப்லாக் கவரில் போட்டு காற்று போகாத படி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும். அதற்கு மேல் பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -