சம்பளம் வாங்கியவுடன் முதல் வேலையாக இந்த 3 விஷயங்களை செய்தால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் தவறவிடாதீர்கள்!

bero-perumal
- Advertisement -

பொதுவாக சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக புண்ணியத்தை சேர்க்க தான, தர்மங்கள் செய்ய சொல்வது வழக்கம். வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தினால் உங்களுக்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்து விடுவார் என்பதும் நம்பிக்கை. இவ்வகையில் குளிகை நேரத்தில் வாங்கிய சம்பளத்தை என்ன செய்யலாம்? குளிகை நேரம் என்பது என்ன? போன்ற சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

money

குளிகையில் நாம் எதை செய்தாலும் அது நமக்கு பன்மடங்காகப் பெருகும் என்பது சாஸ்திரம். அதாவது அட்சய பாத்திரம் போல நாம் குளிகை நேரத்தில் செய்யக் கூடிய விஷயங்களும் நமக்கு பல்கிப் பெருகி கிடைக்கும். குளிகை நேரத்தில் கடன் தொகையை திருப்பி செலுத்தி விட்டால் வெகுவிரைவாக கடனை அடைத்து விடலாம் என்கிற நம்பிக்கையும் உண்டு. இப்படி குளிகை நேரத்தை வைத்து நாம் வாங்கிய சம்பளத்தை என்ன செய்யலாம்?

- Advertisement -

முதன் முதலாக சம்பளம் வாங்கி வந்தவுடன் அதில் இருந்து ஒரு பத்து ரூபாயாவது ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தி விடுங்கள். பத்து ரூபாய் கூட வேண்டாம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை வீட்டிலிருக்கும் திருப்பதி உண்டியலில் போட்டால் கூட போதும். அவருக்கு ஒரு பங்கு போய் சேர்ந்து விட்டதாக ஐதீகம் ஆகிவிடும்.

pichai-thanam

அது போல ஒரே ஒரு உணவு பொட்டலத்தை வாங்கி உண்மையிலேயே பசியால் வாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு பசியை போக்க அன்ன தானம் செய்யுங்கள். நீங்கள் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் எவ்வளவோ பேர் பசியால் வாடுவதை காண நேரிடும். மாற்றுத் திறனாளிகள், பச்சிளம் குழந்தைகள் என்று பசியால் வாடும் யாருக்காவது ஒருவருக்கு உங்கள் சம்பளப் பணத்திலிருந்து ஒரு பொட்டலம் சாப்பாடு வாங்கி கொடுத்தால் போதும், ஏழேழு பிறவிக்கும் அந்த புண்ணியம் உங்களை தொடர்ந்து கொண்டே வரும்.

- Advertisement -

பின்னர் சம்பளம் பணத்திலிருந்து ஒரு சிறு தொகையை எடுத்து பீரோவில் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் ஒரு சிகப்பு நிற பட்டுத் துணியை விரித்துக் கொள்ளுங்கள். அல்லது நகை கடைகளில் நகை வாங்கும் பொழுது கொடுக்கும் பிங்க் நிற பேப்பர் இருந்தால் அதனை விரித்துக் கொள்ளுங்கள். அன்றைய நாள் குளிகை நேரம் என்னவென்று பார்த்துக் கொள்ளுங்கள். குளிகை நேரம் உங்கள் வீட்டு காலண்டரில் பார்த்தாலே தெரியும். அந்த நேரத்தில் விரித்து வைத்த சிகப்பு நிற பட்டுத் துணியின் மீது உங்கள் சம்பள பணத்தை வைத்து அதனுடன் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்துக் கொள்ளுங்கள். இந்த தெய்வீக நறுமணம் உங்கள் பணப் பற்றாக்குறையை போக்கி பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்துவிடும்.

perumal2

ஆக நீங்கள் சம்பளம் வாங்கியதும் இவ்வகையில் மூன்று வேலைகளை செய்து விட்டு பின்னர் அந்த தொகையை வீட்டு தேவைகளுக்கும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்த துவங்குங்கள். பசியைப் போக்கிய புண்ணியம், ஏழுமலையான் கடனுக்கு உதவி செய்த நன்றிக்கடன், மகாலட்சுமியின் அருளைப் பெறுதல் இந்த மூன்று விஷயங்களை செய்யும் பொழுது உங்களுக்கு பணப் பற்றாக்குறை என்பதே வராது. எவ்வளவு துன்பமான நேரத்திலும் ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு பணம் கைக்கு வந்து சேர்ந்து விடும். ரொம்ப சுலபமாக இருக்கக்கூடிய இந்த விஷயத்தை கடைபிடித்தால் அதன் அளப்பரிய அற்புதத்தை நீங்களும் உணரலாம்.

- Advertisement -