சம்பளம் வாங்கியவுடன் 10 ரூபாய் கொடுத்து இந்த பொருளை வாங்கினால் போதும். உங்களுடைய சம்பளம் 10 மடங்காக உயரும்.

mahalashmi
- Advertisement -

சம்பள பணம் நம்முடைய கைக்கு வந்ததும் அதற்கு 1008 செலவுகள் காத்துக்கொண்டிருக்கும். அதையெல்லாம் ஒரு நிமிடம் அப்படி ஒதுக்கி வைத்து விடுங்கள். சம்பளமானது சில பேருக்கு கைக்கு வரும். சில பேருக்கு வங்கிக் கணக்கில் வரும் அல்லவா. அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் எடுத்து பின் சொல்லக்கூடிய செலவுகளில் உங்களால் எதைச் செய்ய முடியுமோ அதை செய்து பாருங்கள். பிறகு உங்களுக்கு வந்த சம்பளப் பணம் வீன் விரையம் ஆகாமலும் இருக்கும். சம்பளம் மேலும் மேலும் உயர்வதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது.

மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது பசு என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சம்பளப் பணத்திலிருந்து முதல் தொகையை எடுத்து பசுமாட்டில் இருந்து தயாரிக்கப்படும் ஏதாவது ஒரு பொருளை வாங்குங்கள். பசுமாட்டில் இருந்து என்ன பொருள் கிடைக்கும். பால், தயிர், நெய், வெண்ணெய், இப்படி எந்த பொருளை வாங்கினாலும் சரிதான். உங்க வீட்டின் அருகில் பசுமாடு வைத்து இருப்பார்கள் அல்லவா அவர்களிடம் கொண்டு போய் பணத்தைக் கொடுத்து பத்து ரூபாய்க்கு பசும்பால் வாங்கினாலும் சரி தான்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக 100 கிராம் பசு நெய் வாங்கி கோவிலுக்கு விளக்கு ஏற்ற கொடுக்கலாம். இது ஆன்மீக ரீதியாக அவ்வளவு ஒரு சிறந்த பரிகாரம். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டிலே விளக்கு ஏற்றலாம். சிலபேருக்கு சாமி கும்பிடுவதில் நம்பிக்கை இருக்காது. கொஞ்சம் நெய் வாங்கி குழந்தைகள் படிக்கும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்தால் மேலும் சிறப்பு. அப்படி இல்லை என்றால் ஒரு பத்து ரூபாய்க்கு கீரை வாங்கி அந்த கீரையை பசு மாட்டிற்கு சாப்பிட கொடுக்கலாம். இதுவும் ஒரு லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த செலவுதான்.

பத்து ரூபாய்க்கு பசு ஞான சாம்பல், அதாவது சுத்தமான திருநீறு வாங்கி சிவன் கோவிலுக்கு கொடுத்தால் மேலும் சிறப்பு. இப்போது எல்லாம் கலப்படம் இல்லாத திருநீறு கிடைப்பது கொஞ்சம் சிரமமாக உள்ளது. ஆனால் ஒரு சில கடைகளில் சொல்லி வைத்து வாங்கினால் நமக்கு சுத்தமான நீர் கிடைக்கும். இப்படி முதல் செலவு உங்களால் முடிந்த அளவுக்கு நல்ல செலவாக செய்யும்போது உங்களுடைய கைக்கும், உங்களுக்கு வந்திருக்கக்கூடிய வருமானத்திற்கும் சேர்த்து லட்சுமி கடாட்சம், லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

- Advertisement -

நம்பிக்கையோடு செய்ய வேண்டும். பசுமாட்டை யார்யார் கோமாதாவாக நினைத்து தினந்தோறும் வழிபாடு செய்கிறீர்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை முழுமனதோடு நம்பிக்கையோடு செய்தால் ஒரு சில நாட்களிலேயே நல்ல பலனை பெறலாம். சம்பள பணத்தை வாங்கியவுடன் கொண்டு போய் கடனை திருப்பி கொடுக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

வாங்கிய கடனை கட்டாயம் திருப்பிக் கொடுக்க தான் வேண்டும். அதில் எந்தவொரு மாற்று கருத்தும் நிச்சயம் கிடையாது. இருப்பினும் முதல் முதலாக நீங்கள் செய்யக்கூடிய செலவு என்பது மன நிறைவை கொடுக்கக்கூடிய, சந்தோஷம் கொடுக்கக் கூடிய விஷயமாக இருக்க வேண்டும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். ஆனால் அதேசமயம் ஒரு வேலையை செய்யும் போது மன நிறைவு இல்லாமல் ‘என்னடா இது சம்பளத்தை வாங்கிய உடன் இவன் கையில் கொடுக்க வேண்டுமா?’ என்று நினைத்து செய்யக்கூடிய செலவுதான் மிகமிகத் தவறு. சரி, மேல் சொன்ன விஷயங்களை நம்பிக்கையோடு பின்பற்றி பாருங்கள் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவில் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -