வீட்டில் மகாலட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய செவ்வாய், வெள்ளியில் தவறாமல் செய்ய வேண்டியது என்ன? காலம் காலமாக நம் முன்னோர்கள் செய்து வந்தது நாம் செய்கிறோமா?

sambrani-mahalakshmi
- Advertisement -

காலம் காலமாக நம் முன்னோர்கள் ஒரு விஷயத்தை செய்து வந்தால் அதற்கு பின்னால் ஏராளமான காரணங்கள் ஒளிந்து கொண்டிருக்கும். அறிவியல் ரீதியாக இன்று நம் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பலவும் நன்மை என நிரூபிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் அவர்கள் செய்த இந்த ஒரு விஷயம் நாம் இன்று கடைபிடிக்கிறோமா? என்று கேட்டால் அதிகபட்சம் இல்லை என்று கூற வேண்டும். அப்படியான ஒரு விஷயம் என்ன? இதை கடைப்பிடித்தால் வரக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மட்டும் அல்லாது நல்ல நாட்கள், விசேஷங்கள் என்று வீட்டில் எது நடந்தாலும் இந்த ஒரு விஷயத்தை அவர்கள் செய்து வந்தனர். குறிப்பாக குழந்தை பிறந்த வீட்டில் கண்டிப்பாக இன்றும் கூட நிறைய பேர் இதை கடைபிடிக்கின்றனர். அது தான் சாம்பிராணி போடும் தூபம் ஆகும். மரத்திலிருந்து வடியும் ஒரு விதமான பிசினில் இருந்து தயாரிக்கக்கூடிய இந்த சாம்பிராணி உற்பத்தி முன்பளவுக்கு தற்போது இல்லை. இந்த தூய சாம்ராணியை கட்டியாக வாங்கி அதை வீட்டிலேயே உடைத்து வைத்துக் கொள்வர். இந்த பொடியை தான் தூப காலில் போட்டு வீடு முழுவதும் காண்பிப்பார்கள்.

- Advertisement -

இதிலிருந்து வரும் புகையானது நச்சுக்களை அளிக்கக்கூடிய தன்மை கொண்டுள்ளது. வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட விஷயங்களை வெளியேற்றக்கூடிய அற்புதமான ஆற்றல் இந்த தூய சாம்பிராணிக்கு உண்டு ஆனால் இன்று நாம் பயன்படுத்தும் வில்லை சாம்பிராணிகள் பலவும் தூயனவாக இல்லை என்பது தான் உண்மை. நீங்கள் பொடி சாம்பிராணி வாங்கினாலும் கூட அதில் எந்த அளவிற்கு தூய சாம்ராணி இருக்கும் என்பது தெரியாது. நீங்கள் கட்டியாக சாம்பிராணியை வாங்கி அதை வீட்டிலேயே பொடித்து உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சாம்பிராணியை தான் நீங்கள் தூப காலில் கொட்டாங்குச்சியை எரித்து கிடைக்கும் தனலில் போட்டு வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். இதனால் வரக்கூடிய நன்மைகள் ஏராளம்! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது நல்ல நாட்கள் விசேஷங்களில் கூட வீடு முழுவதும் எல்லா மூலை முடுக்குகளிலும் போகும்படி இந்த புகையை பரவ விட வேண்டும். நறுமணம் மிக்க இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு.

- Advertisement -

அந்த வகையில் சாம்பிராணி புகை இருக்கும் இல்லத்தில் கண்டிப்பாக தெய்வ வாசம் இருக்கும் என்பதும் ஐதீகம்! குடும்ப பிரச்சனைகள், தொழில் பிரச்சனைகள் என்று எல்லாவிதமான பிரச்சனைகளையும் தீர்க்கவல்லது இந்த தூபம் போடும் முறையாகும். மேலும் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள், நெகட்டிவ் வைப்ரேஷன்கள் அனைத்தையும் துரத்தி அடிக்க கூடிய ஆற்றலும் இதற்கு உண்டு.

இதையும் படிக்கலாமே:
மனைவிமார்கள் இந்த 3 வார்த்தையை சொன்னால், சொல் பேச்சு கேட்காத கணவரை கூட, வழிக்கு கொண்டு வரலாம்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குழந்தையை குளிப்பாட்டி தலைக்கு இது போல தூய சாம்பிராணியை போட்டு தூபம் காட்டினால் அப்படி ஒரு தூக்கத்தை அந்த குழந்தை பெறும். அதே போல குழந்தை இல்லாத பெண்களும் கூட இந்த சாம்பிராணி புகையை சுவாசிக்கும் பொழுது கருப்பை பிரச்சினைகள் தீர்ந்து குழந்தை உண்டாக கூடிய வாய்ப்புகளும் அதிகரிக்கும். இவ்வளவு நன்மைகள் நிறைந்த இந்த சாம்பிராணியை தூயதாக தேடிப் பிடித்து வாங்கி நம் முன்னோர்கள் போல நாமும் எல்லா நாட்களிலும் நம் வீட்டில் தூபம் போட்டு பயனடைவோம். சாம்பிராணியை எல்லா மதத்தினரும் பேதமின்றி பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -